10th-Tamil-1 mark - Book Inside Questions - Unit - 3@2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்
கூடுதல் – ஒரு மதிப்பெண் வினாக்கள்

இயல் – 3

1.முன்பின் அறியாத புதியவர்களே ________ என்று பெயர் – விருந்தினர்.

2. விருந்தே புதுமை எனக் கூறுபவர் – தொல்காப்பியர்

3.இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே எனக் கூறுபவர் – திருவள்ளுவர்

4. மோப்பக் குழையும் அனிச்சம் என வள்ளுவர் குறள் வழியாகக் கூறுவதன் நோக்கம் – முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்.

5. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறுபவர் – கம்பர்

6. உண்டால் அம்ம இவ்வுலகம் என உலகம் நிலைத்திருப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுபவர் – கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

7. “ காலின் ஏழடிப் பின் சென்று “ என்ற வடிகள் இடம் பெற்ற நூல் – பொருநராற்றுப்படை

8.” அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் “ என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – நற்றிணை

9. தானியம் ஏதும் இல்லாத நிலையிலும் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி- இதை காட்சிப்படுத்தும் நூல் – புறநானூறு

10. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் உணவும் கொடுத்தனர் எனக் கூறும் நூல் – சிறுபாணாற்றுப் படை

11. பலர் புகுவாயில் அடைப்ப கடவுநர் வருவீர் உளீரோ – எனக் வாயில் கதவை அடைப்பதற்கு முன் உணவு உண்ண உள்ளீர்களா என கேட்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் – குறுந்தொகை

12. வாழையிலை விருந்து ஆண்டு தோறும் கொண்டாடும் தமிழ்ச் சங்கம் – மினசோட்டா தமிழ்ச்சங்கம் ( அமெரிக்கா )

13. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல – எனக் கூறும் நூல் -  கலிங்கத்துப் பரணி

14. கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும் தானே – எனக் கூறும் நூல் – விவேக சிந்தாமணி

15. வெற்றி வேற்கை என அழைக்கப்படும் நூல் – நறுந்தொகை

16. சீவலமாறன் என்ற பட்டப் பெயர் கொண்டவர் – அதிவீரராம பாண்டியர்

17. குழந்தையின் தலை மென்மையாக அசையும் மாதங்கள் – 5 – 6 ஆம் மாதங்கள்

18. குழந்தை, தன் கைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி, தலை நிமிர்ந்தும் முகமசைத்தும் ஆடும் பருவம் – செங்கீரைப் பருவம்

19. பிள்ளைத்தமிழ் _______ வகைப்படும் – இரண்டு

20. குமரகுருபரரின் காலம் – 17ஆம் நூற்றாண்டு

21. கறங்கு இசை விழவின் உறந்தை என அகநானூறு குறிப்பிடும் ஊர் -  உறையூர்

22. ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையே சொல்லோ, உருபோ மறைந்து ஒரு சொல் போல நிற்குமானால் அது – தொகை நிலைத் தொடர்கள்

23. தொகை நிலைத் தொடர்கள் ________ வகைப்படும் -  ஆறு

24. “ தேர் பாகன் “ தொடரின் வகையைக் காண்க – உருபும் பயனும் உடன் தொக்க தொகை

25. காலம் கரந்த பெயரெச்சம் – வினைத் தொகை

26. சிறப்பு பெயர் முன்னும் பொதுப் பெயர் பின்னும் நின்று இடையில் ‘ ஆகிய ‘ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது – இரு பெயரொட்டுப் பண்புத் தொகை

27. திறன் பேசியின் தொடுதிரையில் பேசிக்கொண்டிருந்தார்- இத்தொடரில் தடித்த சொல்லுக்கான தொகையின் வகை – வினைத் தொகை

28. பழமொழியை நிறைவு செய்க:- உப்பில்லா_________ - பண்டம் குப்பையிலே

29. பழமொழியை நிறைவு செய்க:- விருந்தும் _________ - மருந்தும் மூன்று நாள்

30. மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து – இவ்வடிகள் இடம் பெறும் நூல் – முக்கூடற்பள்ளு

31. BABY SHOWER என்பதன் கலைச்சொல்லாக்கம் – வளைகாப்பு

32. HOUSE WARMING என்பதன் கலைச்சொல்லாக்கம் – புதுமனை புகுவிழா

33. திருக்குறள் தெளிவுரை என்ற நூலை எழுதியவர் -  வ.உ.சிதம்பரனார்

34. சிறுவர் நாடோடிக் கதைகள் என்ற நூலை எழுதியவர் -  கி.ராஜ நாராயணன்

35. ஆறாம் திணை என்ற நூலை எழுதியவர் – மருத்துவர். கு.சிவராமன்.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post