10th-Tamil-1 mark - Book Inside Questions - Unit - 1 @2026

 
பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்
கூடுதல் – ஒரு மதிப்பெண் வினாக்கள்

                                                              இயல் – 1

1. துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்   -             பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

2. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எந்நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது? – திருக்குறள் மெய்ப்பொருளுரை

3. சாகும் போது தமிழ்படித்துச் சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் எனக் கூறுபவர் – க.சச்சிதானந்தன்

4. “ நாடும் மொழியும் நமதிரு கண்கள் “ எனக் கூறுபவர் – பாரதியார்.

5. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன எனக் கூறுபவர் – பாவாணர்.

6. மொழி ஞாயிறு எனப் போற்றப்படுபவர் - பாவாணர்

7. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடும், முதல் மொழியும் எது? – மலேசியா, தமிழ்

8. பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுபவர் – கா.அப்பாத் துரையார்

9. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை – கவை

10. காய்ந்த தாள், தோகையைக் குறிப்பது – சண்டு

11. காய்ந்த இலையைக் குறிப்பது – சருகு

12. தாவரங்களில் விளையும் தானியங்கள் – மணி

13. பனையின் இளநிலை – மடலி ( அ ) வடலி

14. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் - பாவாணர்

15. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் – லிசுபன்

16. 1554 இல் முதன் முதலாக தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் – கார்டிலா

17. “ முத்தையா “ என்னும் இயற்பெயர் கொண்டவர் – கண்ணதாசன்

18. கண்ணதாசன் திரைப்பட பாடலாசிரியரான திரைப்படம் – கலங்காதிரு மனமே

19. கண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்று தந்த நூல் – சேரமான் காதலி

20. திரைப்படப்பாடல்கள் வழியே மெய்யிலை மக்களிடையே கொண்டுச் சேர்த்தவர் – கண்ணதாசன்

21. நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை எனப் பாடுபவர் – கண்ணதாசன்

22. ஓர் எழுத்து தனித்தோ,பல சேர்த்துகள் சேர்ந்தோ பொருள் தருமாயின் அது – சொல்

23. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது – வினையாலணையும் பெயர்.

24. கூட்டப் பெயரைக் காண்க :- ஆடு  - ஆட்டு மந்தை

25. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர் – இத்தொடரில் உள்ள வினைமுற்றிற்கான வினையாலணையும் பெயரைத் தேர்க  - சந்தித்தவர்.

26. பசுப்போல் சாந்தமும் புலி போல் தீரமும் யானை போல் உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்- இத்தொடரில் தடித்த எழுத்துகளில் உள்ள சொற்களுக்கு அதே பொருளைத் தரகூடிய வேறு சொற்களைத் தேர்க – ஆ , அமைதி, வேங்கை , வீரமும், களிறு

27. எறும்புந்தன் கையால் எண் சாண் – இத்தொடரில் காணும் எண்ணுப்பெயரைத் தேர்க – எண்

28. HOMOGRAPH – இச்சொல்லின் கலைச்சொல்லாக்கம் தருக – ஒப்பெழுத்து

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post