10th-Tamil-1 mark - Book Inside Questions - Unit - 5 @2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்

இயல் – 5

1. ‘ புதையல் ‘ என்னும் புதினத்தை எழுதியவர் – கலைஞர்.மு.கருணாநிதி

2. 1921இல்  சென்னை மாகாணத்திற்கு முதல் அமைச்சராக இருந்தவர் – பனகல்

3. ‘ வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் ‘ என்று இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய போது கலைஞரின் வயது – பதினான்கு

4. கலைஞர் தொடங்கிய ‘ சிறுவர் சீர் திருத்தச் சங்கம் ‘ மற்றும்  ‘ தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் ‘ என்ற அமைப்புகளின் நோக்கம் – பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி வழங்க

5. இளைய தலைமுறையே; எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்! அறிவில் மூத்தோரைத் தொழுவாய்! அரிய பயன் காண ஆழ உழுவாய் ‘ என கூறியவர் – கலைஞர்.மு.கருணாநிதி

6. கலைஞரின் முதல் நாடகம் ‘ பழநியப்பன் ‘ அரங்கேற்றப்பட்ட ஆண்டு – 1944

7. நடிகர் எம்.ஆர்.இராதா அவர்களின் வேண்டுகோளுக்காக மாணவர் தலைவனாக கலைஞர் நடித்த நாடகம் -  தூக்கு மேடை

8. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் -  கலைஞர்.

9. கலைஞரின் கதை, வசனங்களில் பகுத்தறிவு பற்றி பேசிய படங்கள் -  பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்.

10. கலைஞரின் கதை, வசனங்களில் சமூகக் கருத்துகளைப் பற்றி பேசிய படங்கள் -மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார்.

11. கலைஞரின் கதை, வசனங்களில் பெண்கள் முன்ணேற்றம் பற்றி பேசிய படங்கள் மணமகள், ராஜாராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள்

12. கலைஞரின் கதை, வசனங்களில் அரசியல் பற்றி பேசிய படங்கள் – புதுமைப் பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி, வண்டிக்காரன் மகன்.

13. கலைஞரின் கதை, வசனங்களில் இலக்கியம் பற்றி பேசிய படங்கள் – அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை

14. மனசாட்சி உறங்கும் போது மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது என்ற வசனம் இடம் பெற்ற திரைப்படம் -  பூம்புகார்.

15. ‘ நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ, சாக்ரட்டீஸ் அழைக்கிறேன், ஓடி வாருங்கள் ‘ -என்ற  வசனம் இடம் பெற்ற திரைப்படம் – ராஜாராணி

16. இளம் வயதிலேயே கலைஞர் எழுதிய கையெழுத்து ஏடு – மாணவ நேசன்

17. கலைஞர் பல கட்டுரைகளை _______ என்னும் புனை பெயரில் எழுதினார் – சேரன்

18. ஆங்கிலே எதிர்ப்புணர்வு கலைஞரிடம் இருந்தது என்பதைக் காட்டும் நூல் – கயிற்றில் தொங்கிய கணபதி

19. இலக்கண நூலுக்கு இலக்கியச் சுவை தோண்றுமாறு கலைஞர் எழுதிய நூல் – தொல்காப்பிய பூங்கா.

20. ‘ கவியரங்குகளே தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின ‘ எனக் கூறுபவர் – கலைஞர். மு.கருணாநிதி

21. ‘ இந்த எட்டுச்சுவை பிட்டுத் தமிழ் கட்டித் தயிர் வட்டில் நிறை ‘ என்ற கவிதையின்  வரிகள் மூலம் கலைஞர் குறிப்பிடும் நூல் – சிலப்பதிகாரம்

22. அண்ணா நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்ட நாள் – செப்டம்பர் 15-2010

23. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்னும் கூற்றுக்கு சான்றாக வாழ்ந்த கலைஞர் மறைந்த நாள் – ஆகஸ்ட் -7- 2018

24. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் எனப் பெருமைப்படுபவர் – பாரதியார்

25. ‘ ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா ‘ என்று கம்பனின் சந்த இன்பத்தை உணர்ந்து கூறியவர் – பாரதியார்

26. கம்பர் , இராமனது வரலாற்றை தமிழில் வழங்கி இட்டப் பெயர் – இராமாவதாரம்

27. கம்பரை ஆதரித்த வள்ளல் – திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்

28. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை – ஆறு

29. ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் – சிலப்பதிகாரம் குறிப்பிடும் தொண்டி என்னும் ஊர்  எங்கு உள்ளது – இராமநாதபுரம் மாவட்டம்

30. ஒத்த அன்புடைய தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுநிலையைக் கூறுவது – அகத்திணை

31. திணை என்பது – ஒழுக்கம்

32. அகத்திணைகள் ___________ வகைப்படும் – ஏழு

33. அகப்பொருளில் முதற் பொருள் என்பது – நிலமும் பொழுதும்

34. பொழுது எத்தனை வகைப்படும் – இரண்டு

35. பெரும் பொழுது என்பது ______ - ஆண்டின் ஆறு கூறுகள்

36. சிறு பொழுது என்பது ________ - ஒரு நாளின் ஆறு கூறுகள்

37. கார் காலம் என்பது ____ - ஆவணி, புரட்டாசி

38. குளிர் காலம் என்பது – ஐப்பசி, கார்த்திகை

39. முன்பனிக் காலம் என்பது – மார்கழி, தை

40. பின்பனிக் காலம் என்பது – மாசி, பங்குனி

41. இளவேனிற் காலம் என்பது – சித்திரை, வைகாசி

42. முதுவேனிற் காலம் என்பது – ஆனி, ஆடி

43. காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை உள்ள சிறு பொழுது – காலை

44. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உள்ள சிறு பொழுது – நண்பகல்

45. பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள சிறு பொழுது – எற்பாடு

46. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள சிறு பொழுது – மாலை

47. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறு பொழுது – யாமம்

48. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள சிறு பொழுது – வைகறை

49. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பது – தலைவனும் தலைவியும் காணுதல் ( குறிஞ்சி )

50. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பது – தலைவன் வரவிற்காக தலைவி காத்திருத்தல் ( முல்லை )

51. மருத நிலத்திற்கு உரிய உரிப்பொருள் – ஊடலும் ஊடல் நிமித்தம்

52.  நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருள் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

53. தலைவன், தலைவி இடையேயான தற்காலப் பிரிதலை உணர்த்தும் உரிப்பொருளுக்குரிய திணை – பாலை

54. கிராமபுற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகியவற்றின் எச்சங்களாக இருப்பவை – நிகழ்த்துகலைகள்

55. தலையில்/ தோலில் கருவியைச் சுமந்தபடி ஆடப்படுபவை – கரகாட்டம், காவியாட்டம்

56. வேடம் கட்டி ஆடும் ஆட்டங்கள் – மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம்

57. குழுவாக ஆடப்படும் ஆட்டங்கள் -  ஒயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம்.

58. கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள் -  தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து

59. தெருக்கூத்தைத் தமிழ்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் – ந.முத்துசாமி

60. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்கள் எண்ணங்களைக் கொண்டு நிரப்புக.

 ______________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம் – வெள்ளந்தி

61. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்கள் எண்ணங்களைக் கொண்டு நிரப்புக.

வெயிலி அலையாதே; உடல் _____________ - கருக்கும்

62. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்கள் எண்ணங்களைக் கொண்டு நிரப்புக.

அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் ____ - சிவந்தது.

63. கலைஞர் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூல் – நெஞ்சுக்கு நீதி

64. தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற நூலை எழுதியவர் – சா. கந்தசாமி

65. திருக்குறள்- கலைஞர் உரை என்ற நூலை எழுதியவர் – கலைஞர். மு. கருணாநிதி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post