10th-Tamil-1 mark - Book Inside Questions - Unit - 6 @2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்

இயல் – 6

1. ஞானப்பிரகாசம் என்ற பெயரை ‘ சிவஞானி ‘ என மாற்றியவர் – சரபையர்.

2. ________ கேட்பதன் மூலமாக இலக்கிய அறிவு பெற்றார் ம.பொ,சி – சொற்பொழிவு

3. ‘ தமிழா துள்ளி எழு ‘ என்னும் தலைப்பில் துண்டறிக்கையை ம.பொ.சி.அவர்கள் மக்களிடையே வழங்கிய நாள் – 30-09-1932

4. இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக பம்பாயில் கூடி நிறைவேற்றிய நாள் – 8-ஆகஸ்டு – 1942

5. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் – மார்சல் ஏ.நேசமணி

6. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் -  1- நவம்பர் – 1956

7. சென்னை தமிழருக்கே என்பது உறுதியான நாள் – 25-03-1953

8. தமிழனத்தின் பொது சொத்தாக கருதப்பட்ட நூல் – சிலப்பதிகாரம்

9. சிலம்புச் செல்வர் என்றழைக்கப்படுபவர் – ம.பொ.சிவஞானம்.

10. ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் – வியன்னா

11. சேர நாட்டின் துறைமுகம் – முசிறி

12. எகிப்து நாட்டின் துறைமுகம் – ஆஸ்திரியா

13. ம.பொ.சி அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் – எனது போராட்டம்

14. ம.பொ.சி அவர்கள் எழுதிய ‘ வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ‘ என்ற எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது – 1966

15. ம.பொ.சி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிலை அமைத்துள்ள இடங்கள் – திருத்தணி, சென்னை தியாகராய நகர்

16. காருகர் என்பவர் – நெய்பவர்

17. காழியர் என்பவர் – பிட்டு விற்போர்

18. கூவியர் என்பவர் – அப்பம் விற்பவர்

19.  ஓசுநர் என்பவர் – எண்ணெய் விற்பவர்

20. கண்ணுள் வினைஞர் என்பவர் – ஓவியர்

21. மண்ணீட்டாளர் என்பவர் – சிற்பி

22. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பி விடுவது – மடை

23. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம்

24. இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் – சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

25. இளங்கோவடிகள் ____________ மரபைச் சேர்ந்தவர் – சேர

26. மணிமேகலையின் ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார்.

27. அடிகள் நீரே அருளுக என யார் யாரிடம் கூறியது – சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளிடம்

28.’ நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் ‘ என இளங்கோவடிகள் படைத்த காப்பியம் – சிலப்பதிகாரம்.

29. முத்தொள்ளாயிரத்தின் பா வகை – வெண்பா

30. முத்தொள்ளாயிரம் காட்டும் சேர நாட்டின் இயல்பு – அச்சமில்லாத நாடு

31. முத்தொள்ளாயிரம் காட்டும் சோழ நாட்டின் இயல்பு – ஏர்க்களச் சிறப்பு

32. முத்தொள்ளாயிரம் காட்டும் பாண்டிய நாட்டின் இயல்பு – முத்துடை நாடு

33. ‘ ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி ‘ என்ற அடிகள் மூலம் திருவாரூர் மாவட்டத்தின் ஆலங்கானம் ஊரைப் பற்றிக் குறிப்பிடும் நூல் – மதுரைக் காஞ்சி

34. புறவொழுக்கங்கள் பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்கள் – புறப்பாடல்கள்

35. புறத்திணைகளின் வகைகள் மொத்தம் – 12

36. ஆநிரைகளுக்கு துன்பம் வரக்கூடாது என்பதற்காக அவற்றை கவர்ந்து வரச் செய்வது ________ திணை – வெட்சி

37. தம் நாட்டுப் பசுக்கூட்டங்களை மீட்கச் செல்வோர் சூடிக் கொள்ளும் பூ – கரந்தைப் பூ

38. மண்ணாசை கருதி, பகைவர் நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கச் செல்வது ____________ திணை – வஞ்சித் திணை

39. மண்ணாசை கருதி வந்த மன்னனுடன் எதிர்த்துப் போரிவது – காஞ்சித்திணை

40. பளபளப்பான மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்று நுண்மயிர் படர்ந்தப் பூ – வஞ்சி

41. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள ஒரு வகை குறுமரம் – காஞ்சி

42. பகை நாட்டு அரசரிடமிருந்து மதிலைக் காப்பது _______ திணை – நொச்சித்திணை

43. மருத நிலத்திற்குரிய கொத்து கொத்தான நீலநிறப் பூக்கள் -நொச்சி

44. தமது படை வீரர்களுடன் சுற்றி வளைத்து முற்றுகையிடுவது – உழிஞைத் திணை

45. உழிஞைக் கொடி இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? – முடக்கொற்றான் ( முடக்கத்தான் )

46. வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வலிமையை நிலைநாட்ட போரிடுவது – தும்பைத் திணை

47. எல்லா இடங்களிலும் வளரக் கூடியதும் தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி – தும்பை

48. போரில் வெற்றி பெற்ற அரசனைப் பற்றி பாடும்  திணை – வாகை

49. மங்கிய வெண்ணிறம் கொண்ட கொத்து கொத்தாக மலரும் பூ – வாகை

50. அரசனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியற்றைப் புகழ்ந்து பாடுவது – பாடாண் திணை

51. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் பொதுவான செய்திகளையும், கூறப்படாத செய்திகளையும் கூறுவது – பொதுவியல் திணை

52. கைக்கிளை என்பது – ஒரு தலைக் காமம்

53. பெருந்திணை என்பது – பொருந்தாக் காமம்

54. மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே – இத்தொடரில் உள்ள தமிழ் எண்களை அடையாளம் காண்க. - ௩ , ௪ , ௩

55. முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள் – இத்தொடரில் உள்ள தொகைச் சொற்களை எடுத்தெழுதுக – முப்பால், ஐந்திணை

56. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் – கற்றல்

57. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை – கரு

58. கல் சிலை ஆகுமெனில், நெல் _______ ஆகும் – சோறு

59. குரலில் இருந்து பேச்சு எனில் விரலில் இருந்து – எழுத்து

60. மீன் இருப்பது நீரில் ; தேன் இருப்பது – பூவில்

61. MONARCHY என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் – முடியாட்சி

62. REBELLION என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் – கிளர்ச்சி

63. என் கதை என்ற நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கம்

64. வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் – இராஜம் கிருஷ்ணன்

65. நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் -  ந. முத்துசாமி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post