10th-Tamil-1 mark - Book Inside Questions - Unit - 7 @2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்

இயல் – 7

1. சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் – சங்க காலம்

2. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலம் – அறநெறிக் காலம்

3. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன் – இவ்வடிகளில் குறிப்பிடப்படுபவர் – ஆய்

4. மன்னர்களுக்குரிய அறத்தின் குறியீடுகள் – செங்கோலும், வெண் கொற்றக்குடையும்

5. நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் கண்டு, அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது யாருடைய கடமையாகக் கருதப்பட்டது? – அரசனின் கடமை

6. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தணடனை வழங்க வேண்டும் எனக் கூறுபவர் – ஊன் பொதிப் பசுங்குடையார்.

7. ‘ நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை ‘ எனக் கூறும் நூல் – மதுரைக் காஞ்சி

8. அறம் அறக் கண்ட நெறிமாண் அவையம் ‘ எனக் கூறுவது – புறநானூறு

9. மதுரையில் இருந்த அவையம் பற்றிக் கூறுவது – மதுரைக் காஞ்சி

10. தம்மை விட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக் கூடாது எனக் கூறுபவர் – ஆவூர் மூலங்கிழார்

11. எழுவரின் கொடைப் பெருமையைக் குறிப்பிடுவது – சிறுபாணாற்றுப் படை

12. ஆற்றுபடை இலக்கியங்கள் _________ இலக்கியங்களாகவே உள்ளன – கொடை

13. சேரர்களின் கொடைப் பதிவுகளைக் காட்டும் நூல் – பதிற்றுப்பத்து

14. ‘ இல்லோர் ஒக்கல் தலைவன் ‘, ‘ பசிப்பிணி மருத்துவன் ‘ என்றெல்லாம் போற்றப்பட்டவர்கள் – வள்ளல்கள்

15. வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்றுக் கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர் மகன்- பெருஞ்சாத்தன்.

16.வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை எனக் குறிப்பிடுபவர் – பெரும்பதுமனார்.

17. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன் ஆடுகோட்டுப் பாட்டுச் சேரலாதன் எனக் குறிப்பிடுபவர் -  நச்செள்ளையார்.

18. மறுமை நோக்கி கொடுக்கதாவன் என பரணரால் குறிப்பிடப்படுபவர் – பேகன்

19. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பமாக குமணன் வருந்தியதாக கூறுபவர் – பெருந்தலைச் சாத்தனார்.

20. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று கபிலரால் பாராட்டப்படுபவன் – மலையமான் திருமுடிக்காரி

21. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பேருள்ளம் கொண்ட பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடும் நூல் – புறநானூறு

22. பிறருக்கு உதவி செய்தலை உதவியாண்மை எனக் குறிப்பிடுபவர் – ஈழத்து பூதன் தேவனார்.

23. ‘ பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ‘ எனக் குறிப்பிடும் நூல் – கலித்தொகை

24. பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி உதவுதல் பற்றிக் குறிப்பிடுபவர் – நல்லந்துவனார்.

25. உண்மையான செல்வம் என்பதே பிறர் துன்பம் தீர்ப்பது தான் எனக் கூறுபவர் – நல்வேட்டனார்.

26. ‘ சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர், புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே எனக் குறிப்பிடும் நூல் – நற்றிணை

27. ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு ‘ எனக் குறிப்பிடுவது – தமிழ் இலக்கியங்கள்

28.  ‘ நிறைவடைகிறவனே செல்வன் ‘ எனக் குறிப்பிடுவது – சீன நாட்டுத் தவோவியம்

29. ‘பொய்யாச் செந்நா’, ‘ பொய்படுபறியா வயங்கு செந்நா’ என இலக்கியங்கள் குறிப்பிடுவது – வாய்மை

30. இன்பத்தின் கதவைத் திறப்பதும், துன்பத்தின் கதவைத்  திறப்பதும் எது? – நாக்கு

31. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறத்தின் தரம் – மூன்றாம் தரம்

32. தாம் சிந்தித்து அறிந்துக் கொள்ளும் அறம் -இரண்டாம் தரம்

33. இயல்பாக அறியும் அறம் – முதல் தரமானது

34. காஞ்சி மாநகரத்து சிற்றரசர் – போதிதர்மர்

35. பெளத்த சமயத்தின் ஒரு பிரிவிலிருந்து உருவானது – ஜென் தத்துவம்.

36. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை எனக் குறிப்பிடும் நூல் – கொன்றை வேந்தன்.

37. கிழமை பட வாழ் எனக் குறிப்பிடும் நூல் – ஒளவையார் ஆத்திசூடி

38. கிறித்துவிற்கு முன் தோன்றிய முன்னோடியும், கிறித்துவின் வருகையினை அறிவித்தவரும் யார்? – அருளப்பன் ( திருமுழுக்கு யோவான் )

39. அருளப்பனுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர் – கருணையன்

40. கருணையனின் தாயார் – எலிசபெத்

41. திருச்சியை ஆண்ட மன்னன் – சந்தாசாகிப்

42. இஸ்மத் சன்னியாசி என பட்டம் பெற்றவர் – வீரமாமுனிவர்

43. இஸ்மத் சன்னியாசி என்னும் சொல் எந்த மொழியைச் சார்ந்தது – பாரசீகம்.

44. இஸ்மத் சன்னியாசி என்னும் சொல்லின் பொருள் – தூய துறவி

45. தேம்பா + அணி எனப் பிரித்தால் பொருள் தருவது – வாடாத மாலை

46. தேன் + பா + அணி எனப் பிரித்தால் பொருள் தருவது – தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

47. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் – சூசையப்பர் என்னும் யோசோப்பு

48. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 3615

49. தேம்பாவணி படைக்கப்பட்ட நூற்றாண்டு – 17ஆம் நூற்றாண்டு

50. தமிழின் முதல் அகராதி – சதுரகராதி

51. கல்யாண சுந்தரம் என்ற இயற்பெயர்க் கொண்டவர் – கல்யாண்ஜி

52. கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்று தந்த நூல் – ஒரு சிறு இசை ( 2016)

53. நாளுக்கு ஒரு முறை மலர்வது – சண்பகம்

54. ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது – பிரம்ம கமலம்

55. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது – குறிஞ்சி

56. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது – மூங்கில்

57. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வெண் பாரிதண் பறம்பு நாடே – இதில் பறம்பு என புறநானூறு குறிப்பிடும் ஊர் அமைந்துள்ள மாவட்டம் – சிவகங்கை

58. யாப்பின் உறுப்புகள் – ஆறு

59. வெண்பாவிற்கு உரிய ஓசை – செப்பல்

60. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை – அகவல்

61. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை – தூங்கல்

62. கலிப்பாவிற்கு உரிய ஓசை – துள்ளல்

63. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது – அகவற்பா

64. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்களில் அமைந்துள்ள பா – அகவற்பா

65. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை – துள்ளல் ஓசை

66. வெண்பாக்கள் வகைகள் – ஐந்து

67. ஆசிரியப்பாக்கள் வகைகள் – நான்கு

68. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வருவது – வெண்பா

69. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு பெற்ற பாவகை – அகவற்பா ( ஆசிரியப்பா )

70. இருவர் உரையாடுவது போன்ற ஓசை தருவது – செப்பலோசை

71. சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை தருவது – அகவலோசை

72. கன்று துள்ளினாற் போன்று சீர் தோறும் துள்ளி வரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை வருவது – துள்ளலோசை

73. சீர் தோறும் துள்ளாது தாழ்ந்தே வரும் ஓசை – தூங்கலோசை

74. விண்ணப்பம் போட்டவுடனே அரசு வேலை கிடைத்து விடும் என கபிலன் நினைத்தான். இத்தொடருக்கான சரியான மரபுத் தொடரைக் காண்க – மனக்கோட்டை

75. முகிலன் கவனமாக படித்து தேர்வில் வெற்றி பெற்றான். இத்தொடர் உணர்த்தும் மரபுத் தொடரைக் காண்க – கண்ணும் கருத்தும்.

76. கர்ணன் தன்னிடம் இருந்த செல்வங்களை மற்றவர்களுக்கு தாராளமாக செலவு செய்தான். இத்தொடரின் மரபுத் தொடரைக் காண்க – அள்ளி இறைத்தல்

77. கபிலன் தன் கோபத்தை தள்ளி வைத்து சிந்தித்தான். இத்தொடரின் சரியான மரபுத் தொடரைக் காண்க – ஆறப்போடுதல்

78. தாயை இழந்த கருணையன் மிகவும் வருந்தினான் -இத் தொடருக்கு பொருத்தமான உவமையைக் காண்க – மழை முகம் காணாப் பயிரைப் போல

79. இளமையில் கற்ற கல்வி என்றும் நிலையாக இருக்கும். இத்தொடருக்குரிய சரியான உவமையைக் காண்க – சிலை மேல் எழுத்து போல

80. தாய் தன் மகளை மிகவும் கவனமாக பாதுகாப்புடன் வளர்த்து வந்தாள். இத்தொடரின் உவமையைக் காண்க – கண்ணினைக் காக்கும் இமை போல

81. கானடை என்பதைப் பிரித்தால் சரியாக பொருந்தாத தொடரைக் காண்க – கால் + உடை = காலால் உடைத்தல்

82. வருந்தா + மரை என பிரித்தால் பொருள் தரும் சரியான தொடர் -  துன்புறாத மான்

83. பிள் + நாக்கு எனப் பிரித்தால் சரியான பொருள் தரும் தொடர் – பிளவுபட்ட நாக்கு

84. பல +கை + ஒலி என பிரித்தால் சரியான பொருள் தரும் தொடர் – பல கை தட்டும் ஓசை

85. SCEPTOR என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் -  செங்கோல்

86. GRATUITY என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் – பணிக்கொடை

87. CHARITY என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் – ஈகை

88. அறமும் அரசியலும் என்ற நூலை எழுதியவர் – மு.வரதராசனார்

89. தமிழரின் தத்துவ மரபு என்ற நூலை எழுதியவர் – அருணன்

90. எண்ணங்கள் என்ற நூலை எழுதியவர் -  எம்.எஸ். உதய மூர்த்தி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post