10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 7 - MEI KEERTHI

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      அக்டோபர்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 7

தலைப்பு          :      மெய்க்கீர்த்தி


அறிமுகம்                   :

Ø  பள்ளியின் கல்வெட்டுகள் மூலம் காணப்படும் தகவல்களை ஒரு மாணவர் அறிந்து அதை வகுப்பில் கூற வைத்து பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  காப்பியம், மெய்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø மெய்க்கீர்த்தி விளக்கம் அளித்தல்

Ø கல் இலக்கியம் என்பதன் பொருள் கூறல். அது எவ்வாறு எழுதப்படுகிறது? எனவும் விளக்குதல்

Ø இரண்டாம் இராசராச சோழன் சிறப்புகள் மற்றும் பட்டங்கள் பற்றி விளக்குதல்.

Ø மெய்க்கீர்த்தி பாடல் அடிகளை சீர் பிரித்து வாசித்தல்

Ø பொருள் புரியா சொற்களுக்கு பொருள் கூறல்.

Ø பாடல் வழியே கூறப்பட்டுள்ள ராசராச சோழன் நாட்டு வளம் மற்றும் ஆட்சி சிறப்பு பற்றி விளக்குதல்

Ø அவற்றை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

கருத்துரு வரைபடம்              :

மெய்க்கீர்த்தி

விளக்கம்    :

            மெய்க்கீர்த்தி


o   இரண்டாம் இராச ராச சோழன் – சிறப்பு

o   இரண்டாம் இராச ராச சோழன் பெற்ற பட்டங்கள்

o   மெய்க்கீர்த்தி பாடப்பகுதி : 1. நாட்டின் வளம்   2. ஆட்சி சிறப்பு

o   கல்வெட்டில் மன்னரை புகழ்வது

o   புலவர்களால் எழுதப்பட்டு அது கல் தச்சர்களால் எழுதப்படும் இலக்கியம் கல் இலக்கியம்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய சொற்களுக்கு பொருள் காணுதல்

Ø  இராசராச சோழன் பற்றி அறிதல்

Ø  கல் இலக்கியம் பற்றி அறிதல்

Ø  இராச இராச சோழன் ஆட்சி சிறப்பு பற்றியும், அவன் நாட்டின் வளங்களையும் பற்றி அறிதல்

Ø  மெய்க்கீர்த்தியில் உள்ள நயங்களை உணர்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  மெய்க்கீர்த்தி என்பது  __________

Ø  யாருடைய மெய்க்கீர்த்தியாக கருதப்படுகிறது?

                MOT :

Ø  இரண்டாம் இராசராச சோழனுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டங்கள் யாவை?

Ø மெய்க்கீர்த்தியில் உள்ள நயங்களைக் கூறுக

                HOT :

Ø  கல்வெட்டுகள் மூலம் அறியப்படுவது யாது?

Ø  மெய்க்கீர்த்திகளின் சங்க கால நிகழ்வுகளை எவ்வாறு அறிய முடிகிறது?

கற்றல் விளைவுகள்                  :         மெய்க்கீர்த்தி

T1036 வேந்தர்களின் சிறப்புணர்த்தும் கல்வெட்டு இலக்கியமான மெய்க்கீர்த்தியின் தனித்தன்மை உணர்ந்து படித்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post