10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - KAMPARAMAYANAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      கம்பராமாயணம்


அறிமுகம்                   :

Ø  இயற்கை அமைப்பு படங்கள் கொண்டு மாணவர்களுக்கு எழக் கூடிய கற்பனைத் திறனை கூற வைத்து ஆயப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  சந்த நயமும்,தொடை நயமும் கொண்ட பாடல்களை மனனமாக பாடுதல், நா நெகிழ்,நா பிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்.

Ø செய்யுளினை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø செய்யுளில் உள்ள கடினச் சொற்களுக்கு பொருள் கூறல்

Ø செய்யுளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.

Ø செய்யுளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.

கருத்துரு வரைபடம்              :

கம்பராமாயணம்



 

 

விளக்கம்    :

            கம்பராமாயணம்

Ø  கம்ப ராமாயண குறிப்புகள் மற்றும் கம்பர் பற்றிய பெருமைகள்

Ø  பால காண்டம் – ஆற்றுப்படலம் – சரயு ஆற்றின் தோற்றத்தை வருணித்தல

Ø  பால காண்டம் – நாட்டுப்படலம் – இயற்கைக் காட்சியினை கலை நிகழ்வாக காணுதல்

Ø  நாட்டின் பெருமையினை மெய்யியல் வாயிலாக அறிதல்.

Ø  அயோத்தியா காண்டம் – கங்கை படலம் – இராமனின் அழகை வருணித்தல்

Ø  கங்கை காண் படலம் – குகனின் இயலாமையை அழகிய சந்த நயத்துடன் பாடுதல்

Ø  யுத்த காண்டம் – கும்ப கருணன் வதை படுவது

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  பாடலினை மனனம் செய்யும் திறன் பெறுதல்

Ø  பாடலில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.

Ø  பாடல் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன் பெறுதல்.

மதிப்பீடு                      :

LOT :

Ø  கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

Ø  கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்____________

                MOT :

Ø  நாட்டின் பெருமையை கம்பர் எவ்வாறு விவரிக்கிறார்?

Ø இராமனின் அழகினை எவ்வாறு வருணிக்கிறார்?

                HOT :

Ø  உங்கள் ஊர் அழகினை எவ்வாறு நீங்கள் வருணிப்பீர்கள்?

Ø  கம்பராமாயணத்தில் வேடன் என அறியப்படுபவர் யார்? அவரைப் பற்றிக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :         கம்பராமாயணம்

T1030 அழகியலும் கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து செய்யுளைப் படித்தல், அதனுள் பொதிந்துள்ள பொருள், சொல், ஓசை நயங்களை உணர்ந்து இலக்கியம் பயிலும் ஆர்வம் பெறுல். நா நெகிழ், நா பிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post