9TH - TAMIL - UNIT - 9 - SPECIAL GUIDE - PDF

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

 சிறப்பு வழிகாட்டி

இயல் – 9                                                            அன்பெனும் அறனே          

ஒன்பதாம் வகுப்புதமிழ்

அ) பலவுள் தெரிக.

1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?

அ) கொம்பு          ஆ) மலையுச்சி                இ) சங்கு            ஈ) மேடு

2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை

அ) நிலையற்ற வாழ்க்கை            ஆ) பிறருக்காக வாழ்தல்   இ) இம்மை மறுமை

ஈ) ஒன்றே உலகம்

3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல்

அ) ஒரு சிறு இசை          ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்

4. யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

அ) குறிஞ்சி         ஆ) மருதம்         இ) பாலை         ஈ) நெய்தல்

 5. கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

அ) சொல் பின்வருநிலையணி      ஆ) பொருள் பின்வருநிலையணி

இ) சொற்பொருள் பின்வரு நிலையணி ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி

ஆ) குறுவினா

 1. தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?

தமிழ்ச்சான்றோர் :

          எல்லா மாந்தருக்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய பண்பு உள்ளது.

உரோமையச் சான்றோர் :

          நாம், நம்மவர் என்ற செருக்கோடு உரோமரைக் கருதியே வாழும் பண்பு.

 2. பிடிபசி களைஇய பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.

·         பிடிபசி – ஆறாம் வேற்றுமைத் தொகை

·         களைஇய – பண்புத்தொகை

·         பெருங்கை – பண்புத் தொகை

·         பெருங்கை வேழம் – இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்கத் தொகை

3. குறுந்தொகை – பெயர்க்காரணம் எழுதுக.

          குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.

4. நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன். இத்தொடரில் அமைந்துள்ள உருவகத்தைக் கண்டறிக.

          கவித்தேன் – தேன்கவி

            சுவைத்தேன் – தேன் சுவை

சிறுவினா

1. உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?

·         திருக்குறள் பற்றி, உயரிய கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலகத்திலேயே காண்பது அரிது என்பார்.

·         மக்கள் அனைவரும் சமம் என்பதை திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன.

2. கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.

·         மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.

·         அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும்.

·         ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைபிடித்து நடத்தல் வேண்டும்.

 3. பழங்களை விடவும் நசுங்கிப் போனது – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

          இடம் : கல்யாண்ஜி எழுதிய அக்கறை என்னும் கவிதை.

பொருள் :  கூடை சரிந்து பழங்கள் உருண்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

விளக்கம் : சைக்கிளிலிருந்து தக்காளி கூடை சரிந்து பழங்கள் உருண்டது. தங்களுக்கு தலைக்கு மேல் வேலை இருப்பதாய்க் கூறி கடந்தும்,நடந்தும் போயினர். பழங்களை விட நசுங்கிப் போனது. அடுத்தவர் மீதான அக்கறை.

 4. மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.

          செங்கல், சிமெண்ட், சல்லி,

                        கம்பி, சித்தாளு, கொத்தாளு

            பணம், கதவு, சாளரம்

                        அறைகள், ஏதும் இல்லா

            வசந்த மாளிகையாய் காட்சி தருகிறது

                        மணல் வீடு……..

5. “யா” மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.

·         யானை

·         ஈரத்தன்மைக் கொண்ட யா மரத்தின் படையை, ஆண் யானை பெண் யானையின் பசியையும், களைப்பையும் போக்கும் பொருட்டு உரித்து கொடுத்தது.

6. உருவக அணியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

·         உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி,

எ.கா : மையோ மரகதமோ மறிகடலோ - இஃது உருவக அணி

விளக்கம் : கண்ணனை மை, மரகதம், மறிகடல் என உருவகிக்கப் படுகிறது

நெடுவினா

 1. தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துகளைத் தனிநாயக அடிகளாரின்வழி நிறுவுக.

யாதும் ஊரே யாவரும் கேளீர் :

ஒரு நாட்டவர் பிற நாட்டவரோடு உறவு பாராட்ட விரும்பியுள்ளனர்.

கணியன் பூங்குன்றாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.

சமுதாயத்தின் குறிக்கோள் :

இலட்சியங்களைக் கடைபிடித்து வருவதால் சமுதாயம் முன்னேற்றம் அடைகிறது. “ பூட்கை இல்லோன் யாக்கை போல “ என புறநானூறும் கூறியுள்ளது.

வாழ்க்கை பண்படுதல்:

          பிறருக்காக பணி செய்யும் போது வாழ்க்கை புனிதமடைகிறது. “ என் கடன் பணி செய்து கிடப்பதே “ என்னும் குறிக்கோள் உடைய வாழ்க்கை, ஆளுமையை முழுமைப்படுத்துகிறது.

வள்ளுவருக்கு முந்தைய கொள்கை :

           மக்கள் அனைவரும் சமம். இதனை ஆல்பர்ட் சுவைட்சர்,” உயரிய கொள்கைகளை கொண்ட செய்யுட்களை, உலக இலக்கியம் எதிலும் காண்பது அரிது “ எனக் கூறியுள்ளார்.

பண்பாட்டில் பரந்த மனப்பான்மை :

            பிறருக்காக வாழ்வதே உயர்ந்த பண்பு. புலவர்கள் வடபுல இமயத்தையும், தென்புலமான தமிழ்நாட்டின் வளங்களையும் பாடியுள்ளனர்.

2. ’தாய்மைக்கு வறட்சி இல்லை ’ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.

முன்னுரை:


தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.

அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:


தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.

செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார்.

குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:


குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள்..

மனிதநேயம் புரிந்தாள்:


அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.

நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:


எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது

முடிவுரை:


வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.

.

மொழியை ஆள்வோம்

அ. மொழி பெயர்க்க :-

A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.

ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர்.

அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

ஒரு மான், ஒரு கடல் ஆமை, ஒரு காகம், ஓர் எலி ஆகியவை நட்பு கொண்டிருந்தன. ஒருநாள் வேடன் வலைவிரித்து மானைப் பிடித்து விட்டான். நண்பர்கள் மானைக் காப்பாற்ற திட்டம் தீட்டின. மானை, நீ இறந்ததுபோல் அசைவின்றி படுத்துக் கொள் என்றன. காகம், இறந்து போன மாதிரி படுத்திருந்த மான் மீது அமர்ந்து கொத்த தொடங்கியது. கடல் ஆமை வேடனின் வழிமறித்தது; அவனை அலைக்கழித்தது. வேடன் வலையில் அகப்பட்ட மான் இறந்து விட்டது என எண்ணி சென்று அதனை விட்டு விடுகிறான். கடல் ஆமை இன்னும் வேடனை அலைக்கழித்தபடியே இருக்கிறது. அதற்குள் எலி வலையைக் கடித்து மானைக் காப்பாற்றத் தொடங்கியது. மானை விடுத்த வேடன் கடலாமையைப் பிடிக்க எண்ணியபோது காகம் ஆமையை கொத்திக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து சென்று சிறிய கடலாமையை வேடனிடம் இருந்து காத்தது. இந்தப் பஞ்சதந்திரக் கதை குழுவாக இணைந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் பல சாதனைகளைப் புரியலாம் என்பதை உணர்த்துகிறது.

 

ஆ) பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று என்று கூறினார் பிள்ளைத் தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன அடடா என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.

          ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.

பிள்ளைத்தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.

அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுருபரரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ மிகச்சிறந்ததாகத் திகழ்கிறது.

இ) சொற்றொடர் உருவாக்குக.

1. செந்தமிழும் சுவையும் போல

          தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் செந்தமிழும் சுவையும் போல இணைந்திருங்கள்.

2. பசுமரத்தாணி போல

          சிறுவயதில் ஆசிரியர் கூறிய ஒழுக்க நெறிகள் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.

3. உள்ளங்கை நெல்லிக்கனி போல்

          தமிழாசிரியர் நடத்திய இலக்கணங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகப் புரிந்தது.

4. அத்தி பூத்தாற் போல

          என் சித்தப்பாவின் வருகை அத்தி பூத்தாற் போல மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.

5. மழைமுகம் காணாப் பயிர் போல

          தந்தையை இழந்த குடும்பம் மழைமுகம் காணாப் பயிர் போல வறுமையில் வாடி இருந்தது.

 

ஈ) வடிவம் மாற்றுக.

பாடலில் காணும் இலக்கிய வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காள மேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காசு
அலாதொருவர் பகர ஒணாதே.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

சயங்கொண்டான்; விருத்தம் என்னும்

ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா

அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;

கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;

வசைபாடக் காள மேகம்;

பண்பாய பகர்சந்தம் படிக்காசு

அலாதொருவர் பகர ஒணாதே.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

 

இலக்கிய வடிவம்

புகழ் பெற்றோர்

வெண்பா

புகழேந்தி

பரணி

செயங்கொண்டார்

விருத்தம்

கம்பன்

கோவை,உலா,அந்தாதி

ஒட்டக்கூத்தர்

கலம்பகம்

இளஞ்சூரியர், முதுசூரியர் – இரட்டையர்

வசைக்கவி

காளமேகம்

சந்தம்

படிக்காசுப்புலவர்

 

உ) நூல் மதிப்புரை எழுதுக.

நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக.

திருக்குறள்

 

இனம்,மதம்,மொழி,நாடு என அனைத்தையும் கடந்து உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை நூலாகக் கருதப்படுவது வான்புகழ் வள்ளுவன் எழுதிய திருக்குறளாகும்.

     முப்பாலையும் கற்றுணர்ந்தால் வீடுபேறு தானே கிடைக்கும் என்பதால்தான் என்று எனக்குத்தோன்றுகிறது.நூல் வைப்பு முறை,பாக்கள் அமைப்பு,இலக்கணப் பிறழ்ச்சியின்மை என அனைத்துமே திருக்குறளில் மிகச்செம்மையாக உள்ளது.

    ”அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்”  என்று ஔவையார் திருக்குறளைப் புகழ்ந்துரைத்தது எவ்வளவு பொருத்தமானது எனத் திருக்குறளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

ஊ) நயம் பாராட்டுக.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

தம்முயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உள்ளம்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தை மிக விழைந்த தாலே” – வள்ளலார்

திரண்ட கருத்து:

எந்த ஒரு வேறுபாட்டையும் வெளிப்படுத்தாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி, தன் உள்ளத்துள்ளே ஒத்த அன்புடையவராய் இருப்பவரை இறைவன் உவந்து ஏற்கிறார் அத்தகைய உள்ளம் உடையவர்களே சித்துருவாய்த் திகழும் எம்பெருமான் நடம்புரியும் இடம் ஆகும். எல்லா வல்ல இறைவன் அடிக்கு ஏவல் புரியும் சிந்தைமிக இருந்ததால் எவ்வுயிரிடத்தும் அன்புடன் வாழ விழைந்தேன்.

மையக்கருத்து:

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி உயிர்களுக்கு ஏவல் செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்ற கருத்தை மையமாக வைத்து வள்ளலார் இப்பாடலைப் புனைந்துள்ளார்.

மோனை நயம்:

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.

சான்று:

            த்துணையும் வ்வுயிரும் டையவராய் வக்கின்றார்.

எதுகை நயம்:

செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:

த்துணையும், த்துரிமை, சித்துரு, வித்தகர்.

சந்த நயம்:

சந்தம் தமிழுக்குச் சொந்தம்” என்பதை உணர்த்தும் வகையில் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவல் ஓசையுடன் மையம் பொருந்த அமைந்துள்ளது.

அணிநயம்:

எவ்வுயிரும் தம்முயிர் போல” என்பதில் உவமையணி இடம்பெற்றுள்ளது

மொழியோடு விளையாடு

அ) எழுத்துகளை முறைப்படுத்தி சொற்களைக் கண்டுபிடி.

    • புன்பமொப்லமைழி  – பன்மொழிப்புலமை.
    • யனிநேம்தம் – மனிதநேயம்.
    • கச்வப்ஞ்புசிழ்ச – வஞ்சப்புகழ்ச்சி.
    • தைக்விதுகபு – புதுக்கவிதை.
    • டுசிப்காட்ப – காஞ்சிப்பட்டு

ஆ) அகராதி காண்க.

    • குரிசில் – பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்.
    • தலையளி – முகமலர்ந்து கூறுதல், அன்பு, அருள்.
    • நயம் – நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுண்மை , அருள்.
    • உய்த்தல் – செலுத்துதல், நடத்துதல், நுகர்தல், அனுப்புதல், அறிவித்தல், நீக்குதல்.
    • இருசு – நேர்மை, வண்டியச்சு, மூங்கில்.

இ) தொகைக் சொற்களைக் கொண்டு பத்தியைச் சுருக்குக.

சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.


மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்களின் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.

ஈ) வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுக.

பூங்கொடி நேற்று பள்ளிக்குச் …………………………. (செல்). தன் தோழிகளைக் ………………………….(காண்)மகிழ்ச்சியுடன் ………………………….(உரை). பின்னர் வங்கிக்குப் ………………………….(போ) தான் கூடுதலாகச்………………………….(செலுத்து) தொகையை திரும்பப் பெற்று(பெறு)க் ………………………….(கொள்)வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு …………………………. (வேண்டு) பொருள்களை வா)ங்கி (வா). அங்கு ………………………….(நில்) பேருந்தில் ………………………….(ஏறு) வீடு ………………………….(திரும்பு).

பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள்(செல்). தன் தோழிகளைக் கண்டு(காண்)மகிழ்ச்சியுடன் உரையாடினாள்(உரை). பின்னர் வங்கிக்குப் போய்(போ) தான் கூடுதலாகச் செலுத்திய(செலுத்து) தொகையை திரும்பப் பெற்று(பெறு)க் கொண்டு (கொள்)வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற  (நில்) பேருந்தில் ஏறி(ஏறு) வீடு திரும்பினாள்(திரும்பு).

உ) பொருத்தமான தமிழ் எண்களைக் கொண்டு நிரப்புக.

தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் ௨௪௭

இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்று  பிரிவாகப் பிரிக்கப்படும்.௧௨  உயிரெழுத்துகள் ௧௮  மெய்யெழுத்துகள் ஆகிய ௩௦  எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.  இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் ௧௦  வகைப்படும்.

உ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ளக் காட்சி

ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி

சமூக விளைவைக் காட்டும் காட்சி

நிற்க அதற்குத் தக

நான் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால்..

அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்

இயன்றவரை பிறருக்கு உதவுவேன்.

பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பேன்………………………………

·         அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்

    • அனைவரையும் ஈடுபாட்டுடன் பணிபுரியச் செய்வேன்.
    • என் கீழ் பணிபுரிவோரின் சுக துக்கங்களில் பங்கு கொள்வேன்.
    • அன்பு கலந்த கண்டிப்புடன் கடமையாற்றுவேன்.

கலைச் சொல்லாக்கம்

·         மனிதம் – Humane

·         ஆளுமை – Personality

·         பண்பாட்டுக் கழகம் – Cultural academy

·         வசனகவிதை – free verse

·         உவமையணி – Simitee

·         உருவக அணி – Metabhor


சிறப்பு வழிகாட்டி ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,

சேலம்.

8667426866,8695617154

15 விநாடிகள் காத்திருக்கவும்

நன்றி 

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 

வலைப்பக்கம் :

WWW.TAMILVITHAI.COM                               WWW.KALVIVITHAIGAL.COM




YOUTUBE :

https://youtube.com/user/000ramakrishnan

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post