இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 1 இயல் : 1
அறிவியல் ஆக்கம் கவின் மிகு கப்பல்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக் கோடிட்ட சொல்லின் பொருள் ____________.
அ) நிலம் ஆ) நீர் இ) காற்று ஈ) நெருப்பு
2. மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்
3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____________.
அ) காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்
4. 'பெருங்கடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.
அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்
5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.
அ) இன்றுஆகி ஆ) இன்றிஆகி இ) இன்றாகி ஈ) இன்றா ஆகி
6. எதுகை இடம்பெறாத இணை ____________.
அ) இரவு- இயற்கை ஆ) வங்கம் - சங்கம் இ) உலகு - புலவு ஈ) அசைவு - இசைவு
பொருத்துக.
1. வங்கம் - பகல்
2. நீகான் - கப்பல்
3. எல் - கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி - நாவாய் ஓட்டுபவன்
விடை
1. வங்கம் - கப்பல்
2. நீகான் - நாவாய் ஓட்டுபவன்
3. எல் - பகல்
4. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
குறுவினா
1. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது
2. நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?
வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்து செலுத்தும்
சிறுவினா
1. கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
· புலால் நாற்றமுடைய பெரிய கடலினை பிளந்து செல்லும் நாவாய்.
· வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்
· கலங்கரை விளக்கின் ஒளியால் நாவாய் ஓட்டுபவன் திசையறிந்து செலுத்துவான்
சிந்தனை வினா
தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
· கடல் வழி பயணம்
· தரை வழி பயணம் எப்போதும் மேற்கொள்கிறோம்.
· கடல் வழிப் பயணத்தில் நீரின் மேல் கப்பல் செல்வதில் மிகுந்த ஆனந்தம்
· கடல் உயிரினங்கள் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக செல்லலாம்
தமிழரின் கப்பற்கலை - வினா - விடைகளைக் காண