இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 1 இயல் : 1
அறிவியல் ஆக்கம் கலங்கரை விளக்கம்
மனப்பாடப்பாடல்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை*…….
- கடியலூர் உருத்திரங் கண்ணனார்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேயாமாடம் எனப்படுவது ______.
அ) வைக்கோலால் வேயப்படுவது ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது ஈ) துணியால் மூடப்படுவது
2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக் கோடிட்ட சொல்லின் பொருள் ______.
அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலை
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.
அ) மீன்கள் ஆ) மரக்கலங்கள் இ) தூண்கள் ஈ) மாடங்கள்
4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.
அ ) ஞெகிழி ஆ) சென்னி இ) ஏணி ஈ) மதலை
குறுவினா
1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
கலங்கரை விளக்கம் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைக்கிறது.
2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்
சிறுவினா
1. கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.
· கலங்கரை விளக்கம் தூண் போல தோற்றமளிக்கிறது.
· ஏற முடியாத உயரத்தை கொண்டுள்ளது.
· சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது.
· இரவில் துறை அறியாமல் இருக்கும் மரக்கலங்களை தன்னை நோக்கி
அழைக்கிறது.
சிந்தனை வினா
1. கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என
நீங்கள் கருதுகிறீர்கள்?
- கடல் ஆய்வு செய்பவர்கள்
- மீனவர்கள்
- கப்பற் படை வீரர்கள்
- கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்