8TH - TAMIL - NOTES OF LESSON - APRIL -1ST WEEK

 நாள்                 :         04- 04-2022     முதல்  09 - 04 - 2022         

மாதம்                           ஏப்ரல்         

வாரம்               :           ஏப்ரல்  முதல் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  1. திருக்குறள்

                                    2. கொங்குநாட்டு வணிகம்

கருபொருள்                            :

Ø  நீதிநூல்களின் வழியே வாழ்வியல் திறன்களை அறிதல்

Ø  தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø  தொழில்களின் வகைகளை உணர்தல்

உட்பொருள்                           :

Ø  தெரிந்து வினையாடல்,செங்கோன்மை,வெருவந்த செய்யாமை,சொல்வன்மை,அவைஅறிதல்

Ø  பழந்தமிழர் ஆண்ட கொங்கு நாட்டின் அன்றைய வணிகம் மற்றும் இன்றைய வணிகத்தை காணுதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  நீதிநூல்களின் வழியே வாழ்வியல் திறன்களை அறிதல்

Ø  தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø  தொழில்களின் வகைகளை உணர்தல்.

ஆர்வமூட்டல்                          :

Ø  திருக்குறள் கதை ஒன்றினைக் கூறி ஆர்வமூட்டல்

Ø  உனது வீட்டின் அருகே நடைபெறும் தொழிகள் என்னென்ன? உமது ஊரில் முக்கியமானத் தொழில் எது? போன்ற வினாக்கள் கேட்டு ஆரவமூட்டல்

படித்தல்                                  :

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  மனப்பாடக் குறளை இசை இராகத்துடன் பாடுதல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

நினைவு வரைபடம்                 :

                                                            திருக்குறள்



                                                            கொங்கு நாட்டு வணிகம்



                                                           

                                                           

தொகுத்து வழங்குதல்             :

திருக்குறள்

தெரிந்து வினையாடல்

·        செயல்திறன் உடையவரையும்,செய்வதற்குரிய காலமும் அறிந்து செயலாற்ற வேண்டும்

·        செயலை செய்யக் கூடிய நபரைக் கண்டறிந்து அவரிடம் அச்செயலை விடல்

செங்கோன்மை

·        நடுவுநிலைமை தவறாது நடத்துதே சிறப்பான ஆட்சி

·        அரசர் எல்லா உயிரிங்னகளையும் காப்பாற்றும் போது,அவருடைய குற்றமற்ற ஆட்சி அவரை காப்பாற்றும்

வெருவந்த செய்யாமை

·        குற்றத்தை முறையாக ஆராய்ந்து அக்குற்றம் மீண்டும் நிகழாவண்ணம் தண்டனை வழங்க வேண்டும்.

·        மக்களால் தூற்றப்படும் அரசர் விரைவில் அழிவார்.

சொல்வன்மை

§  அனைவரையும் தன்வயப்படுத்துவது சொல்லாற்றலின் சிறப்பு.

§  சிறந்த சொற்களை நாம் தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.

அவையறிதல்

·        அவையின் தன்மை அறிந்து பேச வேண்டும்.

·        அறிஞர் முன்னிலையில் பேசுவது நாம் பல நூல்கள் மூலம் கற்ற கல்வி பெருமை அடையும்.

கொங்கு நாட்டு வணிகம்

Ø   சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது. இவர்களின் தலைந கராக வஞ்சி விளங்கியது.

Ø  சேரர்களின் கொடி விற்கொடி ஆகும்

Ø  பனம்பூ இவர்களுக்குரிய பூ ஆகும்

Ø  சேலம், கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர்பெற்றன

Ø  இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோ டு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை யும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதா கக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.

Ø  உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர்

Ø  உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன

Ø  நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்துத

Ø  தமிழ்நாட்டின் ஹாலந்து என்றும் சிறப்பிக்கப்படுவது திண்டுக்கல்

Ø  தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில் தான் நடைபெறுகின்றது

Ø  கிரேக்க அறிஞர் தாலமி கரூரை சிறந்த உள்நாட்டு வணிகமாக குறிப்பிட்டு உள்ளார்

வலுவூட்டல்                             :

Ø  காணொளி காட்சிகள் மூலம் பாடப்பொருளை வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

Ø  சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது

Ø  தமிழகத்தின் ஹாலந்து எந்த மாவட்டம்?

Ø  முத்து நகரம் என சிறப்பிக்கப்படும் நகரம் எது?

Ø  மாங்கனிக்கு புகழ் பெற்ற ஊர் எது?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

 பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ணச் சொற்களைப் படித்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

தொடர் பணி                          :

Ø  உன் மனம் கவர்ந்த திருக்குறள் ஏதேனும் பத்து குறள் எழுதி வருக.

Ø  பல்வகைத் தொழில்கள் என்னும் தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post