6TH - NOTES OF LESSON - APRIL - 1ST WEEK

 நாள்                 :           04-04-2022 முதல்  09-04-2022         

மாதம்                           ஏப்ரல்           

வாரம்               :         ஏப்ரல் - முதல் வாரம்                                     

வகுப்பு              :             ஆறாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. மனித நேயம்

கருபொருள்                            :

Ø   உதவி செய்யும் பண்பைப் பெறுதல்.

Ø  நம்மால் முடிந்த உதவியினை செய்ய முற்படுதல்

உட்பொருள்                           :

Ø  வள்ளலார், அன்னை தெரசா, கைலாஷ் சத்யார்த்தி போன்றோரின் உதவி செய்யும் குணம் அறிந்து போற்றுதல்

Ø  அவர்களை போலவே நாமும் பிறருக்கு பயன்படும் படி வாழ்தல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,

கற்றல் விளைவுகள்                 :

Ø  உதவி செய்யும் பண்பைப் பெறுதல்.

Ø  நம்மால் முடிந்த உதவியினை செய்ய முற்படுதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  வள்ளலார் வாழ்வில் நடந்த அற்புதங்களையும், அவரின் உதவி குணத்தையும் மாணவர்களுக்கு கூறி ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  பாடப்பகுதியினைப் பத்தியாகப் பிரித்து ஆசிரியர் வாசித்தல்

Ø  ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் பின் தொடர்ந்து வாசித்தல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø   பொருளை உணர்ந்து படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருளை அகராதியில் கண்டு பொருள் எழுதுதல்

நினைவு வரைபடம்                 :

மனிதநேயம்

 

 


 

                                                           

தொகுத்து வழங்குதல்             :

 

மனித நேயம்

Ø  எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும்.

Ø  வள்ளலார் மக்களின்  பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடினார்.

Ø  வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்.

Ø  மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார் அன்னை தெரசா

Ø  அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது

Ø  பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. அதற்காக அவர் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார் கைலாஷ் சத்யார்த்தி

Ø  குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.

வலுவூட்டல்                             :

Ø  வரைபடத்தாள் மற்றும் கற்பித்தல் கருவிகள் மூலம் பாடத்தினை கற்பித்து வலுவூட்டல்

 

மதிப்பீடு                                 :

Ø  எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ---------

Ø  தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ---------- காட்டியவர் வள்ளலார்.

அ) கோபம் ஆ) வெறுப்பு இ) கவலை ஈ) அன்பு

Ø  கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ---------

Ø  யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

Ø  அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø  பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø  வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø  பாடலைச் சீர்ப் பிரித்துப் படித்தல்

தொடர் பணி                          :

Ø  மனித நேயம் குறித்து செய்தித்தாளில் வந்த செய்திகளை திரட்டி தொகுப்பு உருவாக்குக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post