10TH - TAMIL - WEEKLY TEST - APRIL 1ST WEEK


மாதம் : ஏப்ரல்                                                     வாரம் : முதல் வாரம்        

வகுப்பு : 10                                                          இயல் : 07

பாடம் : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                        4 × 1= 4

1. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

) திருப்பதியும்,திருத்தணியும்    ) திருத்தணியும்,திருப்பதியும்   

 ) திருப்பதியும் திருச்செந்தூரும் ) திருப்பரங்குன்றமும் பழனியும்

2. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-

) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்        ) மிகுந்த செல்வம் உடையவர்   

) பண்பட்ட மனித நேயம்                                          ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

3. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__________________

) நாட்டைக் கைப்பற்றல்             ) ஆநிரை கவர்தல்                 

) வலிமையை நிலைநாட்டல்       ) கோட்டையை முற்றுகையிடல்

4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது_____________

) திருக்குறள்          ) புறநானூறு          ) கம்பராமாயணம்     ) சிலப்பதிகாரம்

II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                           4× 2= 8

1. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர்சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

 2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

4. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

III அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                           3× 4= 12

1. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

2. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

3. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;

  பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

  கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

  தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

               ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

               ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

               ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

) காருகர்பொருள் தருக.

) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

 

IV. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                  1× 4= 4

1.தூசும் துகிரும்- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

V. கடிதம் எழுர்துக                                                                                           1× 6= 6

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

5. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கையாக எழுதுக                                             1× 6= 6

இடம்பள்ளிக் கலையரங்கம்                                                                             நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்புஇதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின் நன்றியுரை.

DOWNLOAD PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post