ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்
இயல் - 6
நெடுவினா - விடைகள்
1. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விளக்குக.
· குறிஞ்சி
o அருவிகள் பறைபோல் ஒலி எழுப்புகிறது.பைங்கிளிகள் தமிழிசை பாட, மயில்கள் தோகை விரித்து ஆட, இதனை குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கிறது.
o தீயிலிட்ட சந்தனத்தின் மணமும், உலையிலிட்ட மலைநெல்லரிசிச் சோற்றின் மணமும்,காந்தள் மலரின் மணமும் எங்கும் கமழ்ந்துக் கொண்டு இருக்கிறது.
· முல்லை
o நாகணவாய் பறவைகள்,குயில்கள்,வண்டுகள் பாவிசைத்து பாடுகிறது.
o ஆய்ர்கள் முக்குழல் இசையால் பசுக்களை ஒன்று சேர்ப்பர்.
o முதிரை,சாமை,கேழ்வரகு,குதிரை வாலி,நெல் இவற்றை அறுத்து கதிரடிக்கும் சத்தம் கேட்டு மான்கள் அஞ்சியோடும்.
· பாலை
o செந்நாய் தனது நிழலில் தனது குட்டிகளை இளைப்பாறச் செய்யும்.சிறுவர்கள் பாலைக் காய்களை அடிக்கும் சப்தம் கேட்டு பருந்துகள் அச்சத்தோடு பறந்தோடும்.
· மருதம்
o முல்லை நிலக் காட்டாறு பாய்ந்தோடும்.
o வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து மணம் பரப்பும்.
o தாமரைக் குளத்தில் சிறுவர்கள் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து மகிழ்வர்.வைக்கோற் போரில் ஏறி தென்னை இளநீரைப் பறித்து அருந்துவர்.
· நெய்தல்
o முத்துக்களையும்,பவளங்களையும் மலைபோல் கடற்கரையில் மக்கள் குவித்து வைப்பர்.
o காற்றினில் சிறகை உலர்த்திய தும்பி பெண்களின் முகத்தை கடந்து செல்வது முழுநிலவைக் கருமேகம் தொடர்ந்து செல்லும் காட்சிபோல் உள்ளது.