ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்
இயல் - 5
நெடுவினா - விடைகள்
1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க:-
ü மூவலூர் இராமாமிர்தம்
o தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி
o எழுத்தாளர்
o திராவிட இயக்க செயல்பாட்டாளர்
o தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்
o தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.
ü முத்து லட்சுமி :
o தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
o இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
o சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
o சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி
o அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
ü நீலாம்பிகை அம்மையார்
o மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்
o தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.
o தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன் இவர் எழுதிய நூல்கள்
2. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிடுக.
· சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழநாடு சிறந்து விளங்கியது.
· இடைப்பட்ட காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து.
· சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என கருதினர்
· அறிவுடைய மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன் பாடியுள்ளார்.
· பெண்கள் உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ ஆண்களும் துணை செய்கிறார்கள்.
· இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள்.
· கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள், முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே
· இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள்.
3. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
· உலகமெங்கும் வாழும் மக்களுக்குப் பட்டறிவை நூலகம் தருகிறது. எழுத்தறிவு பெற்றோர் மிகுந்துள்ள நிலையில் மனவளம் பெருக வேண்டும்.
· வீட்டு நிலை மாற, வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்.
· வீடுகளில் நற்பண்புகள் காண வேண்டுமெனில் வெள்ளி, பித்தளை, உடைகள், மருந்துகள், அணிகலன் போன்றவை இருப்பது போன்று புத்தகங்களும் இருக்க வேண்டும்.
· உணவு,உடை,அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதும் முதலிடம் புத்தகசாலைக்குத் தர வேண்டும்.
· இதயத்தைப் பண்படுத்துவன புத்தகங்களே, மக்களின் மனவளத்தை அதிகப்படுத்துவன நூல்களே
· சுப நிகவுகளில் புத்தகங்களை பரிசாக வழங்க முன் வர வேண்டும்.
· உலக அறிவைத் தரக் கூடிய நூல்களும், வீட்டிற்கோர் திருக்குறளும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.