நாள் : 07-03-2022 முதல் 12-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பாதம்
கருபொருள் :
Ø பிறர் பொருளை விரும்பாமை
ஓர் அறம் என்பதனை உணர்தல்.
உட்பொருள் :
Ø கற்பனை கதையின் நுட்பத்தை
அறிதல்
Ø ஒற்றைக்
காலணி அதிசயத்தை வியத்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
Ø பிறர் பொருளை விரும்பாமை
ஓர் அறம் என்பதனை உணர்தல்.
ஆர்வமூட்டல் :
Ø மாணவர்கள்
தாங்கள் அறிந்த கதையினைக் கூற வைத்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø கதை சொல்லி போக்கில்
பாட்ததைப் படித்தல்
Ø நிறுத்தற் குறி அறிந்து
குரலில் ஏற்றத்தாழ்வுக் கொண்டுப் படித்தல்.
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய சொற்களின் பொருளை
அகராதிக் கொண்டு அறிதல்.
நினைவு வரைபடம் :
பாதம்
தொகுத்து வழங்குதல் :
பாதம்
Ø கதை
மாந்தர்கள் : மாரி, சிறுமி
Ø கதையின்
மையப் பொருள் : காலணி
Ø மையக்
கருத்து: பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாமல் வாழும் போது தமது நிலை தாமாக உயரும்.
Ø ஆசிரியர்
: எஸ்.இராமகிருஷ்ணன்
Ø எழுதிய
நூல்கள்: உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்
Ø கதை
அமைந்த நூல் : தாவரங்களின் உரையாடல்
Ø கற்பனைக் கதைகளில் வரும்
அறத்தை உணர்த்துதல்
வலுவூட்டல் :
Ø மாணவர்களை பங்கேற்று
நடிக்க வைத்து அதன் வழியாக அறச்சிந்தனையை மாணவர்களுக்கு ஊட்டி பாடப்பொருளை வலுவூட்டல்.
மதிப்பீடு :
Ø காலணி தைக்கும் தொழிலாளி
பெயர் என்ன?
Ø அவர் எந்த பாதத்தின்
காலணியை தைத்துக் கொடுத்தார்?
Ø அந்த காலணியின் தன்மை
எப்படி இருந்தது?
Ø இந்த கதையை எழுதிய ஆசிரியர்
யார்?
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø கற்பனை கதையின் வழியே அறச்சிந்தனையை வளர்த்தல்.
தொடர் பணி :
Ø இதே காலணி உங்களுக்கு
கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்பது குறித்து எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை