நாள் : 07-03-2022 முதல் 12-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச்- இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தேம்பாவணி
கரு பொருள்:
Ø மனித மாண்புகளையும்,விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின்
உட்பொருளை அறிய முற்படுதல்
உட்பொருள்:
Ø ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø பாடல் பொருள் அறிதல், மன்னம்
செய்யும் திறன் வளர்த்தல்.
கற்றல் விளைவுகள் :
Ø மனித மாண்புகளையும்,விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின்
உட்பொருளை அறிய முற்படுதல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø உனக்குத் தெரிந்த சமயங்களின் பெயர்களையும், அவற்றின் புனித நூல்களின்
பெயர்களையும் கேட்டறிந்து அதன் மூலமாகப் பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள்
சுருக்கம்:
·
சாதாரண உயிரினங்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் மனிதம்
·
தேமாவணி – நூற் குறிப்பு
·
தேம்பா + அணி = தேம்பாவணி – வாடாத மாலை
·
தேன் + பா + அணி – தேம்பாவணி – தேன் போன்ற இனிய
பாடல்களின் தொகுப்பு
·
ஆசிரியர் : வீரமாமுனிவர்
·
இயற் பெயர் : கான்சுடான்சு சோசப் பெசுகி
·
எழுதிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலக்கியங்கள்,
உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள்,மொழிபெயர்ப்பு நூல்கள்
·
இஸ்மத் சன்னியாசி – தூய துறவி
·
கருணையன் தாயார் எலிசபெத் அவர்களுடன் கானகத்தில்
வாழ்ந்து வந்தார்.
·
அச்சூழலில் அவரின் தாயார் இறந்து விட கருணையன்
அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்கு கொள்கிறது.
ஆசிரியர் செயல்பாடு:
Ø வீரமாமுனிவர் பற்றி அறிமுகம்
செய்தல்
Ø தேம்பாவணி பற்றி கூறல்
Ø பாடல்களை சீர்ப்பிரித்து
வாசித்துக் காட்டி, மாணவர்களையும் வாசிக்க வைத்தல்.
Ø மனப்பாடப்பாடலை மனனம் செய்யும்
திறன் வளர்த்தல்.
மாணவர் செயல்பாடு:
Ø வீரமாமுனிவர் பற்றி தெரிந்துக்
கொள்ளுதல்.
Ø தேம்பாவணி பற்றிய குறிப்புகளை
அறிதல்.
Ø பாடல்களை சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய சொற்களை அடையாளம் காணுதல்
Ø பாடல் பொருளை இன்றைய வாழ்வியல்
சூழல்களோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம்
தேம்பாவணி
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப்
பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக்
கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை
மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
Ø வீரமாமுனிவர் பற்றி
அறிதல்
Ø வண்ண எழுத்துகளில் உள்ள
தொடர்களை படித்தல்
Ø எளியத் தொடர்களைப்
படித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களை
படித்தல்
Ø மனப் பாடலை மனனம் செய்தல்
மதிப்பீடு:
Ø இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் யாது?
Ø வீரமாமுனிவர் படைத்த நூல்கள் யாவை?
Ø கருணையன் என அழைக்கப்படுவபவர் யார்?
Ø இயேசுவின வருகையை அறிவித்த முன்னோடி யார்?
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள
மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி, வணக்கம் – தமிழ்விதை