8TH - TAMIL - NOTES OF LESSON - MARCH - WEEK -2

 நாள்                 :         07 - 03 -2022     முதல்  12 - 03 - 2022         

மாதம்                           மார்ச்           

வாரம்               :           மார்ச்   இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  1. எச்சம்

                                    2. கல்வி அழகே அழகு

கருபொருள்                            :

Ø  எச்சச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

Ø  நீதி நூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்.

உட்பொருள்                           :

Ø  எச்சச் சொற்கள் பற்றியும், அதன் வகைகள் பற்றியும் அறிதல்

Ø  குமரகுருபரர் பற்றியும், அவர் தம் பாடல் வழி புலப்படும் அறக்கருத்தினை உணர்தல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  எச்சச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

Ø  நீதி நூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்.

ஆர்வமூட்டல்                          :

Ø  வினைமுற்று சொற்களை கரும்பலகையில் எழுதி அவற்றிலிருந்து வினாக்கள் கேட்டுப் பாடப்பொருளை ஆர்வ மூட்டல்

Ø  ஊரடங்கு காலத்தில் நீ எப்படி கல்வி கற்றாய்? என மாணவர்களிடம் வினவி பாடப்பொருளை ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

நினைவு வரைபடம்                 :

  எச்சம்



                                                            கல்வி அழகே அழகு

                                                           



தொகுத்து வழங்குதல்             :

எச்சம்

Ø  முற்று பெறாத வினைச்சொல் - எச்சம்

Ø  எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம்

Ø  பெயரெச்சம் இரண்டு வகை : 1. தெரிநிலைப் பெயரெச்சம்             2. குறிப்பு பெயரெச்சம்

Ø  எச்சம் வினையைக் கொண்டு முடிந்தால் – வினையெச்சம்

Ø  வினையெச்சம் இரண்டு வகை : 1. தெரிநிலை வினையெச்சம்        2. குறிப்பு வினையெச்சம்

கல்வி அழகே அழகு

Ø  ஆசிரியர் : குமரகுருபரர்

Ø  காலம் : 17ம் நூற்றாண்டு

Ø  இயற்றிய நூல்கள் : கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

Ø  மக்களுக்கு தேவையான நீதிகளைச் சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

Ø  அணிகலன்களுக்கு அழகு கூட்ட அணிகலன் தேவை இல்லை,

Ø  கற்றவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியே அழகு

 

வலுவூட்டல்                             :

Ø  காணொளி காட்சிகள் மூலம் பாடப்பொருளை வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  முற்று பெறாத வினைச்சொல் ___________

Ø  அழகிய மரம் என்பது _________

Ø  குறிப்பு வினையெச்சம் எவ்வாறு வரும்?

Ø  கற்றவர்களுக்கு அழகு தருவது ____________

Ø  குமரகுருபரர் இயற்றிய நூல்கள்?

Ø  இப்பாடலில் காணப்படும் நயங்களைச் சுட்டுக.

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

 பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   எளிய வகை செயல்களின் சொற்களை எழுதுதல்.

Ø   மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்

Ø   அன்றாடம் மாணவர் செய்யக் கூடிய எளிய வகை செயல்பாடுகளை வகைப்படுத்துதல்

தொடர் பணி                          :

Ø  “ வந்த “ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறுத் தொடர்களை எழுதுக.

Ø  கல்வி குறித்த பழமொழிகளை திரட்டி எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post