9TH - NOTES OF LESSON - FEBRUARY - 4TH WEEK

 நாள்                 :           21-02-2022 முதல்  26-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - நான்காம் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :          தாய்மைக்கு வறட்சி இல்லை

கரு பொருள்:

·        மனிதம் சார்ந்த படைப்புகளைப் படைப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழக் கற்றுக்கொள்ளுதல்.

உட்பொருள்:

·        எது வறண்டாலும் மனிதம் வறண்டுவிடக் கூடாது என்பது பன்னெடுங்கால விழைவாகவும் செய்தியாகவும் திகழ்கிறது. தமிழ்ச் சிறுகதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை, சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதை வாயிலாக அறிதல்

·         சு.சமுத்திரம் அவர்களின் படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

கற்றல் விளைவுகள் :

·        மனிதம் சார்ந்த படைப்புகளைப் படைப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழக் கற்றுக்கொள்ளுதல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  தங்கள் தாயாரின் பணிகளை குறித்து கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

                        வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

தாய்மைக்கு  வறட்சி இல்லை:

·        கர்நாடக மாநிலம், குல்பர்கா நகர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு வறுமையான குடும்பம் வாழ்ந்து வந்தது.

·        ஒருநாள் அங்கு வந்த அரசு அதிகாரி அந்த வறுமையான குடும்பத்திற்கு உணவளித்து உதவி செய்ய முற்பட்டார்.

·        ஆனால் பசியை விட மானம் பெரிது என்று எண்ணிய அந்த குடும்பத்தினர் இந்த உணவை வாங்குவதற்குத் தயங்கினர்.

·        ஒரு வழியாக அவர் அளித்த உணவை வாங்கியதும், அவர்களுடைய குழந்தைகளோடு வளர்ந்து வந்த நாய்க்குட்டிகளும் பசியால் ஒலியெழுப்பின.

·        அந்த ஏழைத் தாய் தன்னிடம் இருந்த உணவை அந்த நாய்க் குட்டிகளுக்கு ஊட்டிவிட்டாள். 

·        அவனது தட்டில் உணவு குறைய குறைய தாய்மை கூடிக்கொண்டே சென்றது. 

ஆசிரியர் செயல்பாடு:

§  ஆசிரியர், தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற இந்த சிறந்த கதையை உடல் மொழிகள் மூலமும் மெய்ப்பாடுகள் மூலமும் மாணவர்களுக்குப் பொருள் விளங்குமாறு எடுத்துக் கூறுதல்.

§  இக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்து தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற கதையை நாடகமாக நடித்துக் காட்டச் செய்தல்

மாணவர் செயல்பாடு:

Ø  மாணவர்கள் வறுமையை விடத் தன்மானம் பெரிது என உணர்தல்.

Ø   தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை அறிந்துகொள்ளுதல்.

கருத்துரு வரைபடம்

 தாய்மைக்கு வறட்சி இல்லை



வலுவூட்டல்:

                                   விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

o   கதையின் சுருக்கத்தை கூறல்

o   கதையின் முக்கிய கருத்தை உணர்தல்

மதிப்பீடு :

Ø  கதை நடக்கும் களம் எந்த மாநிலத்தில் இருந்தது?

Ø   ஏழை குடும்பத்திற்கு உதவி செய்த அதிகாரி என்ன மொழி பேசினார்?

Ø   அதிகாரி அந்த குடும்பத்திற்கு என்ன உணவு கொடுத்தார்?

Ø   ”தாய்மைக்கு வறட்சி இல்லை” என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

தொடர்பணி:

·       தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற  சிறுகதையை உரையாடல் வடிவில் எழுதி வரச் செய்தல்.

________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post