நாள் : 21-02-2022 முதல் 26-2-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி- நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. இராமானுசர் நாடகம்
2. பா - வகை அலகிடல்
கருபொருள்:
@ கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து சொல்லப்படும் கருத்தை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்.
@ தமிழில் நான்கு பா வகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.
உட்பொருள்:
# தலைமுறைக்கு ஒரு முறை மூங்கில் மலர்வது போல, தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்கள் ஞானிகள். அத்தகைய நாடுகளில் குறிப்பிடத்தக்கவர் ஆகிய ராமானுஜரைப் பற்றி நாடக வடிவில் அறிதல்
# பல்வகைப் பாக்களையும் அவற்றிற்கான ஓசைகளையும் அறிதல்.
# தரப்பட்ட திருக்குறளை அலகிட்டு வாய்ப்பாடு எழுது அறிதல்.
பாட அறிமுகம்
Ø 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ எது தெரியுமா? என்ற வினாவை மாணவர்களிடையே எழுப்பி அவர்கள் கூறும் விடை மூலம்,” அரிதாக மலரும் குறிஞ்சி மலர் போல அரிதாக மலர்பவர்களே ஞானிகள் என்று கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்
Ø நாம் அன்றாடம் பேசும் சொற்களில் ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை அசைகள் உண்டு தெரியுமா? என்ற வினாவை கேட்டு, விளக்கம் அளித்து பாடத்தை அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம்,பாடநூல்,சுண்ணக்கட்டி, கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.
முக்கிய கருத்துகள்:
இராமானுசர் நாடகம்:
@ இராமானுசர் அவரது சீடர்களும் தன்னுடைய குருவான பூரணரைச் சந்திக்கச் செல்கிறார்.
@ நீண்டகாலமாக இராமானுசர் பூரணரிடம் கேட்டுக் கொண்டிருந்த கூடிய புனிதத் திருமந்திரத்தை அன்று இராமானுசருக்குச் சொல்வதாகப் பூரணர் உறுதியளித்தார்.ஆனால் திருமந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையை விதித்தார்.
@ திருமந்திரத்தை மற்றவருக்குச் சொன்னால் தனது குரு தன்னை தண்டிப்பார் என்று தெரிந்தும் மக்களின் நலன் வேண்டி திருமந்திரத்தை மக்களுக்கு இராமானுசர் எடுத்துக்கூறினார்.
@ தனது சீடருடைய பரந்த மனப்பான்மையை எண்ணி பூரணர் பெருமகிழ்ச்சி அடைந்தார்
பாவகை, அலகிடுதல்:
ü பா வெண்பா, ஆசிரியப்பா ,கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப்படும்
ü அவை முறையே செப்பலோசை, அகவலோசை ,துள்ளலோசை, தூங்கலோசை என்ற ஓசைகளை உடையன.
ü எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுள் உறுப்புகள் ஆகும்.
ü எழுத்து, அசை, சீர் ஆகிய உறுப்புகளைப் பற்றி அறிந்திருத்தல் மூலம் அலகிட்டு வாய்பாடு எழுத முடியும்.
ஆசிரியர் செயல்பாடு:
§ நிகழ்காலச் சான்றுகள் மூலம் இராமானுசர் எத்தகைய அற நோக்கு உடையவர் என்பதை விளக்குதல்
§ கரும்பலகை பயன்படுத்தி செயல் உறுப்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தெளிவுர எழுதி விளக்கியும், அலகிட்டு வாய்ப்பாடு எழுதத் தேவையான குறிப்புகளை விளக்கிக் கூறியும் மாணவர்களுக்கு அலகிட்டு வாய்ப்பாடு எழுத கற்றுத் தருதல்.
மாணவர் செயல்பாடு:
Ø மானுடம் தழைத்து அறம் மேலோங்கவே, சமயங்கள் உருவாக்கப்பட்டன என்பதை உணர்தல்.
Ø இராமானுசர் போன்ற சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதன் மூலம் ,பிறருக்குப் பயன்பட்டு வாழ்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளுதல்.
Ø யாப்பிலக்கணத்தின் முக்கிய கூறாகிய அலகிட்டு வாய்ப்பாடு எழுதக் கற்றுக் கொள்ளுதல்
கருத்துரு வரைபடம்:
இராமானுசர் நாடகம்
பாவகை,அலகிடுதல்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு :
- இராமனுசர் நாடகத்தின் மையக் கருத்தினை அறிதல்
- நற்பண்புகளை அறிதல்
- பா - வகை அறிதல்
- திருக்குறளை சீர் பிரித்து அசை பிரிக்கும் முறை அறிதல்
மதிப்பீடு:
Ø இராமானுசரின் குரு யார்?
Ø இராமானுசரின் சீடர் பெயர்கள் யாவை?
Ø நாடகத்தின் கதைக்களம் எந்த ஊரில் அமைந்துள்ளது?
Ø பா எத்தனை வகைப்படும்?
Ø நேர்+நிரை என்ற ஈரசைச்சீரின் வாய்பாடு என்ன?
தொடர்பணி:
# இராமானுசர் நாடகத்தை உரையாடல் வடிவில் எழுதிவரச் செய்தல்.
# 2 திருக்குறள்களைக் கொடுத்து வீட்டில் அலகிட்டு வாய்பாடு எழுதி வரச்செய்தல்