நாள் : 14 -02-2022 முதல் 18-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஓடை
2. திருக்குறள்
கருபொருள் :
Ø பாடலை
ஓசை நயத்துடன் படித்துச் சுவைத்தல்
Ø வாழ்வியல்
நெறிமுறைகளை சங்க நூல்களின் வழியே அறிதல்
உட்பொருள் :
Ø நீரின்
முக்கியத்துவம் அறிதல்
Ø வாழ்வியல்
நெறிகளை அறிந்து பயன்படுத்துதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகளெக்ஷ்ட்
கற்றல் விளைவுகள் :
Ø பாடலில்
உள்ள நயங்களை அறிதல்.
Ø நீரின்
முக்கியத்துவம் உணர்தல்
Ø திருக்குறள்
வழி வாழ்வியல் நெறிகளை அறிந்து பயன்படுத்துதல்
ஆர்வமூட்டல் :
Ø நமது
உடலில் நீரின் பங்கு எவ்வளவு?
Ø பயிர்கள்
செழிப்பாக வளர எது முக்கியம்?
Ø மழை
இல்லாவிடில் உலகம் என்னவாகும்?
Ø திருக்குறள்
கதைகளைக் கூறல்
படித்தல் :
Ø பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்.
Ø திருக்குறளை சீர் பிரித்து
படித்தல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருள் அறிதல்
நினைவு வரைபடம் :
ஓடை
திருக்குறள்
தொகுத்து வழங்குதல் :
ஓடை
Ø பெயர் - வாணிதாசன்
Ø இயற்பெயர் – அரங்கசாமி
( எ ) எத்திராசலு
Ø புகழ் பெயர் : வேர்ட்ஸ்வொர்த்,
கவிஞரேறு,பாவலர் மணி
Ø இயற்றிய நூல்கள் : தமிழச்சி,
கொடிமுல்லை,தொடுவானம்,எழிலோவியம்,குழந்தை இலக்கியம்
Ø விருது : பிரெஞ்சு அரசு
“ செவாலியர் விருது “
Ø பாடலில் உள்ள எதுகை,
நயங்கள் அறிதல்
திருக்குறள்
Ø திருக்குறள் சிறப்பு
பற்றி அறிதல்
Ø நடுவுநிலைமை
: நடுநிலைமையுடன்
சரியாக செயல்படுதல்
Ø கூடா ஒழுக்கம்
: தீயவர்களின்
நட்பை கை விடுதல்
Ø கல்லாமை
: கல்வி பயிலாததால் ஏற்படும் தீமைகள்
Ø குற்றங்கடிதல்
: குற்றத்தை
சரியாக ஆராய்ந்து கூறல்
Ø இடனறிதல்
: தமக்குரிய இடம் அறிந்து சிறப்பாக
செயல்படுதல்
வலுவூட்டல் :
Ø நீரின் முக்கியத்துவத்தை
ஒவ்வொரு மாணவராக தங்களுக்கு அறிந்த கருத்தைக் கூற வைத்து வலுவூட்டல்.
Ø இன்றைய நிலையோடு திருக்குறள்
கருத்துகளை ஒப்பிட்டு வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø தமிழகத்தின் வோர்ட்ஸ்
வொர்த் என அழைக்கப்படுபவர் ___________
Ø வள்ளை பாட்டு என்பதன்
பொருள்________________
Ø பாடலில் காணப்படும் நயங்கள்
இரண்டு கூறு
Ø புகழாலும்,பழியாலும்
அறியப்படுவது __________
Ø நெடுமை + தேர் சேர்த்தெழுதுக
Ø சான்றோருக்கு அழகாவது
எது ?
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø பாடலை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்.
Ø பாடலில் காணப்படும் நயங்களை அறிதல்
Ø திருக்குறள் மனப்பாடக் குறளை மனனம் செய்யும் செய்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்
தொடர் பணி :
Ø மலை,அருவி,ஓடை,மரங்கள், வயல்கள் ஆகியன இடம் பெறுமாறு
ஓர் இயற்கைக்
காட்சியைப் படம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Ø நீ அறிந்த குறள்கள் பத்து குறள்களையும் மற்றும்
அதன் பொருளையும் எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை