9TH - NOTES OF LESSON - FEBRUARY - 3RD WEEK

 நாள்                 :           14-02-2022 முதல்  18-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. பெரியாரின் சிந்தனைகள்

                                              2. யாப்பிலக்கணம்

கரு பொருள்:

·        பெரியாரின் சிந்தனைகள் சமுதாய மாற்றத்திற்கு வழி வகுத்ததை உணர்ந்து கொள்ளுதல்

o   செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து, அலகிடல்

உட்பொருள்:

·        சமுதாய மாற்றத்தில் முக்கியப் புள்ளி தந்தை பெரியார் என்பதை அறிந்து கொள்ளுதல் 

·         தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்

·        யாப்பின் உறுப்புகளை அறிந்து அலகிட்டு வாய்பாடு எழுத கற்றுக் கொள்ளுதல்

கற்றல் விளைவுகள் :

Ø  தமிழரின் சிந்தனை மரபுகளை உணர்தல்.

Ø  செய்யுளின் உறுப்புகளை அறிந்து அலகிடல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகு த்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர்; இருபதாம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர். யார் அவர்? என்ற வினாவை கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

Ø  சில எளிய அசைகளை மாணவர்களைக் கூறச் செய்து, அசைகள் எவ்வாறு உருவாகின்றன? என்பதைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

                              வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

பெரியாரின் சிந்தனைகள்:

·        பெரியார்‘ என்றவுடன் நம்முடை ய நினைவுக்கு வருவது, அவரின் பகுத்தறிவுக் கொள்கை. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப் பி , அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.

·        மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் , இன்று மதத்தின் நிலமை என்ன ? நன்கு சிந்தித்துப்பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா ? பிரித்து வைப்பதற்காகவா?’ எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்

அலகிடுதல்:

·               கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம். இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. உ று ப் பியலி ல் யாப்பின் ஆறு உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.

ஆசிரியர் செயல்பாடு:

§  பெரியாரின் உயரிய சிந்தனைகளைத்தகுந்த சான்றுகள் மூலமும் காணொளிகள் மூலம் ஆசிரியர் விளக்க முற்படுதல்.

§  பெண்கள் முன்னேற்றம் மற்றும் நலத்திற்காக தந்தை பெரியார் முன்னெடுத்த செயல்களையும், அதற்காக செய்த சில போராட்டங்களையும் ஆசிரியர் விளக்க முற்படுதல்

§  செய்யுள் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று இவ்வகையில் தொடர்புடையவை என்பவற்றை ஆசிரியர் கரும்பலகை பயன்படுத்தி படிப்படியாக விளக்குதல்.

§  அலகிட்டு வாய்ப்பாடு எழுதும் முறையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாகக் கற்றுத்தருதல்

மாணவர் செயல்பாடு:

Ø  இந்திய தேசிய ராணுவம் உருவாவதிலும் அது செயல்பட்டதிலும் தமிழர் எத்தகைய பங்காற்றினர் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

Ø  இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

கருத்துரு வரைபடம்

பெரியாரின் சிந்தனைகள்

 

யாப்பிலக்கணம்

 

வலுவூட்டல்:

                                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

                                              மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை

மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  முக்கிய கருத்துகளை அறிதல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்

Ø  அசை. சீர், வாய்பாடு அறிதல்

Ø  திருக்குறள் அலகிடும் முறைகள் அறிதல்

மதிப்பீடு:

Ø  வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Ø   தந்தை பெரியாரின் இயற்பெயர் என்ன?

Ø  பெரியார் எவற்றையெல்லாம் எதிர்த்தார்?

Ø  பெரியார் எவ்வாறெல்லாம் புகழப் பெற்றார்?

Ø  அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Øஓரசைச் சீர்கள் மொத்தம்எத்தனை?

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post