நாள் : 14-02-2022 முதல் 18-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பெரியாரின் சிந்தனைகள்
2. யாப்பிலக்கணம்
கரு பொருள்:
·
பெரியாரின் சிந்தனைகள் சமுதாய மாற்றத்திற்கு
வழி வகுத்ததை உணர்ந்து கொள்ளுதல்
o செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து, அலகிடல்
உட்பொருள்:
·
சமுதாய மாற்றத்தில்
முக்கியப் புள்ளி தந்தை பெரியார் என்பதை அறிந்து கொள்ளுதல்
·
தந்தை
பெரியாரின் சமுதாயப் பணிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்
·
யாப்பின் உறுப்புகளை
அறிந்து அலகிட்டு வாய்பாடு எழுத கற்றுக் கொள்ளுதல்
கற்றல் விளைவுகள் :
Ø
தமிழரின்
சிந்தனை மரபுகளை உணர்தல்.
Ø
செய்யுளின்
உறுப்புகளை அறிந்து அலகிடல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø
பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக
மக்களைத் தம் பகு த்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர்; இருபதாம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர்.
யார் அவர்? என்ற வினாவை கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
Ø
சில எளிய அசைகளை மாணவர்களைக் கூறச் செய்து, அசைகள்
எவ்வாறு உருவாகின்றன? என்பதைக் கூறி பாடத்தை அறிமுகம்
செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள்
சுருக்கம்:
பெரியாரின் சிந்தனைகள்:
·
‘பெரியார்‘ என்றவுடன்
நம்முடை ய நினைவுக்கு வருவது, அவரின் பகுத்தறிவுக் கொள்கை.
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு?
எப்படி? என்ற வினாக்களை எழுப் பி , அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
·
மதங்கள் என்பன மனித
சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் ,
இன்று மதத்தின் நிலமை என்ன ? நன்கு
சிந்தித்துப்பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை
ஒற்றுமைப்படுத்துவதற்காகவா ? பிரித்து வைப்பதற்காகவா?’
எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்
அலகிடுதல்:
·
கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம். இது பாக்கள்
பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. உ று ப் பியலி ல் யாப்பின்
ஆறு உறுப்புகளான எழுத்து, அசை, சீர்,
தளை, அடி, தொடை ஆகியவை
விளக்கப்படுகின்றன.
ஆசிரியர் செயல்பாடு:
§ பெரியாரின் உயரிய சிந்தனைகளைத்தகுந்த சான்றுகள் மூலமும்
காணொளிகள் மூலம் ஆசிரியர் விளக்க முற்படுதல்.
§
பெண்கள் முன்னேற்றம் மற்றும்
நலத்திற்காக தந்தை பெரியார் முன்னெடுத்த செயல்களையும், அதற்காக
செய்த சில போராட்டங்களையும் ஆசிரியர் விளக்க முற்படுதல்
§
செய்யுள் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று இவ்வகையில் தொடர்புடையவை
என்பவற்றை ஆசிரியர் கரும்பலகை பயன்படுத்தி படிப்படியாக விளக்குதல்.
§
அலகிட்டு வாய்ப்பாடு எழுதும் முறையில்
மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாகக் கற்றுத்தருதல்
மாணவர் செயல்பாடு:
Ø
இந்திய தேசிய ராணுவம் உருவாவதிலும் அது
செயல்பட்டதிலும் தமிழர் எத்தகைய பங்காற்றினர் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
Ø
இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம்
அறிதல்.
கருத்துரு வரைபடம்
பெரியாரின்
சிந்தனைகள்
யாப்பிலக்கணம்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல்
குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக்
கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை
மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
Ø முக்கிய கருத்துகளை அறிதல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களை
படித்தல்
Ø அசை. சீர், வாய்பாடு அறிதல்
Ø திருக்குறள் அலகிடும் முறைகள்
அறிதல்
மதிப்பீடு:
Ø
வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Ø
தந்தை பெரியாரின் இயற்பெயர் என்ன?
Ø
பெரியார் எவற்றையெல்லாம் எதிர்த்தார்?
Ø
பெரியார் எவ்வாறெல்லாம் புகழப் பெற்றார்?
Ø
அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Øஓரசைச் சீர்கள் மொத்தம்எத்தனை?
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள
மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி, வணக்கம் – தமிழ்விதை