நாள் : 21-02-2022 முதல் 26-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. புதுமை விளக்கு
கருபொருள் :
Ø பாடலின் பொருள் அறிய
அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
Ø அறநெறிச்சாரப் பாடலில்
உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்
உட்பொருள் :
Ø இறைவழிப்பாடில்
சடங்குகளை விட உள்ள தூய்மை முக்கியம் அறிதல்.
Ø ஆழ்வார்கள்
பற்றி அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்
கற்றல் விளைவுகள் :
Ø பாடலின் பொருள் அறிய
அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
Ø அறநெறிச்சாரப் பாடலில்
உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்
ஆர்வமூட்டல் :
Ø தற்காலத்தில்
உள்ள சமயங்கள் மற்றும் சமய வழிபாடு குறித்து கேட்டறிந்து ஆர்வ மூட்டல்
படித்தல் :
Ø நிறுத்தற் குறி அறிந்து
படித்தல்
Ø சீர் பிரித்து படித்தல்
Ø மனப்பாடப் பாடலை இனிய
இராகத்தில் பாடுதல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய சொற்களின் பொருளை
அகராதிக் கொண்டு அறிதல்
நினைவு வரைபடம் :
புதுமை
விளக்கு
தொகுத்து வழங்குதல் :
Ø பொய்கை ஆழ்வார் – காஞ்சிபுரத்திற்கு
அருகில் உள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்
Ø நாலாயிர திவ்வியப் பிரபந்ததில்
உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியது
Ø பூமி – அகல்விளக்கு
Ø நெய் – ஒலிக்கின்ற கடல்
Ø ஒளி – கதிரவன்
Ø பூதத்தாழ்வார்
Ø சென்னையை அடுத்துள்ள
மாமல்லபுரத்தில் பிறந்தார்
Ø நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்
இரண்டாம் திருவந்தாதி இவர் பாடியது.
Ø அந்தாதி : அந்தம் – முடிவு
, ஆதி – தொடக்கம்
Ø திருமாலைப் போற்றிப்
பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப்
பிரபந்தம்
Ø இதனைத் தொகுத்தவர் -
நாதமுனி.
வலுவூட்டல் :
Ø பாடல் பொருளை மீண்டும் விளக்கி அதனை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிட்டு
கூறி வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø அந்தாதி
என்பது யாது?
Ø நாலாயிர
திவ்வியப் பிரபந்தம் யாரால் தொகுக்கப்பட்டது?
Ø முதலாழ்வார்கள்
யாவர்?
Ø பொய்கை ஆழ்வார் நெய்யாக
எதனை ஒப்பிடுகிறார்?
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை
மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்
தொடர் பணி :
Ø முதலாழ்வார்கள் பெயர்களையும்
அவர்கள் எழுதிய பாடல் எந்த தொகுப்பில் உள்ளது என்பதனை அறிந்து எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை