12TH - TAMIL - TWO MARK QUESTIONS ( UNIT 4 to 8 )

 திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி

2021 - 2022

2 மதிப்பெண் வினா விடைகள்

வகுப்பு -12                பொதுத்தமிழ்

இயல் - 4

1. வெண்பாவிற்குரிய தளைகள் யாவை? 

வெண்பாவிற்குரிய தளைகள் 

இயற்சீர் வெண்டளை 

வெண்சீர் வெண்டளை 


2. ஒரு விகற்பம்ää பல விகற்பம் என்றால் என்ன? 

ஒரு விகற்பம் என்றால் வெண்பாவின் எல்லா அடிகளும் ஒரே எதுகை பெற்று வருவது ஆகும். 

பல விகற்பம் என்றால் வெண்பாவின் அடிகளில் வேறு வேறு எதுகை பெற்று வருவது ஆகும். 


3. வசனம்- கவிதை வேறுபாடு தருக 

வசனம் 

சொற்களைச் சேர்க்கும் போது எதுகைää போன்றவை அமையாமல் அடியளவை அறிந்திடாமல் அமைக்கின்ற இலக்கிய வடிவம் தான் வசனம் ஆகும். 

கவிதை 

சொற்களைச் சேர்க்கும் போது யாப்பு முறைப்படி எதுகை மோனை போன்ற தொடை நயங்களைச் சேர்த்துää குறளடிää சிந்தடிää அளவடிää நெடிலடிää கழிநெடிலடி போன்ற அடியளவை அறிந்து வார்த்தைகளை அமைப்பதே கவிதையாகும். 


4. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை? 

மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் 

நிகண்டுää நன்னூல் காரிகை தண்டியலங்காரம் நீதி நூல்கள் கணிதத்தில் கீழ்வாயிலக்கம்  மேல்வாயிலக்கம் குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் ஆத்திசூடி கொன்றைவேந்தன் போன்றவை அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்களாகும். 

இயல்:5

1. கலிவிழா-ஒலிவிழா – விளக்கம் தருக 

கலிவிழா - திருமயிலையில் நடைபெறும் எழுச்சி மிக்க விழா 

ஒலி விழா - திருமயிலையில் நடைபெறும் ஆரவார விழா 

2. ‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே” தொடருக்குப் பதவுரை எழுதுக. 

அறச்செயல்கள் செய்கின்றவர்கள் நிறைந்திருக்கும் சென்னைப் பகுதியில் கந்தகோட்டத்தில் அமைந்திருக்கின்ற திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! 

இயல்:6

1. ஒருமுக எழினி பொருமுக எழினி – குறிப்பு வரைக 

ஒருமுக எழினி 

மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது ஒருமுக எழினி. 

பொருமுக எழினி 

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது பொருமுக எழினி. 


2. மனத்தை அதன்போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்? 

மனத்தை அதன்போக்கில் செல்லவிடக்கூடாது 

மனத்தை அது செல்லுகின்ற வழியிலெல்லாம் செல்லவிட்டால் தீமையில் அகப்பட்டு அல்லல்பட நேரிடும். 

எனவேதான்ää மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல் தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும் என்கிறது வள்ளுவம். 

3. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக. 

உவமை: 

உருண்டு வரும் பெரிய தேரினைச் செலுத்துவது மிகச் சிறிய அச்சாணி. 

பொருள்: 

அதுபோல உருவத்தில் சிறியவராயினும் மிகப்பெரிய செயல்களைச் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவர்களாக இருப்பர். எனவே ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழ்தல் கூடாது. 

இவ்வாறு அச்சாணி என்னும் உவமை உருவில் சிறியவரின் வலிமையோடு பொருத்தப்பட்டுள்ளது. 


4. மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது? 

ஒருவன் ஒரு செயலை நன்முறையில் செய்து முடிப்பதற்குத் துணையாக அமைவது மன உறுதியே. 

எனவேதான்ää வள்ளுவர் நல்ல சிறப்பான செயல்பாட்டிற்கு மனஉறுதியே வேண்டும். மற்றவைகள் எல்லாம் வலிமைகள் ஆகாது என்கிறார். 


5. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்? 

கள் உண்பவர்கள் நஞ்சுண்பவர் என வள்ளுவர் இடித்துரைக்கிறார். 


6. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை? 

அரசரோடு நட்புப் பாராட்டினாலும் தகுதி அல்லாதவற்றைச் செய்தல் கூடாது. 

7. பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது? 

பகைவராலும் அழிக்க முடியாத அரண் அறிவு ஆகும். 


8. அஞ்சத் தகுந்தனää அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது? 

உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் 

வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. 


9. வறுமையும் சிறுமையும் தருவது எது? 

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழைக் கெடுத்துச் சிறுமையும் வறுமையும் தருவது சூது ஆகும். 


10. நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி காரணத்தைக் குறிப்பிடவும். 

பிடித்த குறள்: 

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 

சொல்லிய வண்ணம் செயல்” 

காரணம்: 

எந்தச் செயலையும் இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எல்லோருக்கும் எளியது சொல்லியபடி செய்து முடித்தல் அரியது. 

அதாவது சொல்லும்ää செயலும் ஓரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதால் இக்குறள் பிடிக்கும். 


11. உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்? 

நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிட பெரிய துன்பம் தரும் பகையும் இல்லை. 

12.இலக்கணக்குறிப்பு தருக. 

ஒரீஇ - சொல்லிசையளபெடை 

படுப்பதூஉம் - செய்யுளிசையளபெடை 

சொல்லுதல் - தொழிற்பெயர். 

13. கீழ்நீர்க் குளித்தானைத் தீத்தூர் இ யற்று – பொருள் கூறுக 

நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது என்பது இத்தொடரின் பொருளாகும். 


14. பெருந்தேர் - புணர்ச்சி விதி கூறுக. 

பெருமை 10 தேர் 

விதி 1: ‘ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ விகுதி கெட்டு பெரு 10 தேர் என்றானது. 

விதி 2: ‘இனமிகல்’ என்னும் விதிப்படி ‘ந்’ தோன்றி பெருந்தேர் என்றானது. 

இயல் - 7

1. அறிவுடை வேந்தனின் நெறி குறித்து பிசிராந்தையார் கூறுவன யாவை? 

‘அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே 

கோடி யாத்துää நாடு பெரிது நந்தும்” 

அறிவுடை அரசன்ää வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடுää கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும். 

2. செவியறிவுறூஉ துறையை விளக்குக. 

செவியறிவுறூஉ துறை: 

அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்ää செவியறிவுறூஉ என்னும் துறையாகும். 

சான்று: 

‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே” என்றுத் தொடங்கும் பாடல். 


இயல் - 8

1. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்? 


இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் புலம்பியது 

இறைமகனுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களைக் கண்டு மனம் பொறுக்காத மக்கள்ää 

‘இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! 

வானம் இடிந்து விழவில்லையே! 

கடல்நீர் வற்றிப்போகவில்லையே! 

இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ” என வருந்திப் புலம்பினர். 

click here to pdf

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post