நாள் : 07-02-2022 முதல் 12-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தமிழ் நாட்டில் காந்தி
கருபொருள் :
Ø வாழ்வின் எளிமையின் சிறப்பை
உணர்தல்
Ø சமூக மாற்றத்தில் காந்தியின்
பங்கினைத் தெரிந்து கொள்ளுதல்
உட்பொருள் :
Ø காந்தியடிகள்
சென்னைக்கு வந்த நிகழ்வு.
Ø பாரதியார்
பற்றி காந்தியின் மதிப்பீடு
Ø காந்தியின்
எளிமைத் திருக்கோலம்
Ø ஆடம்பரத்தை
வெறுத்தல்
Ø காந்தியின்
தமிழ்ப் பற்று
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காந்தி படம்
கற்றல் விளைவுகள் :
Ø வாழ்வின்
எளிமையின் சிறப்பை உணர்தல்
Ø சமூக
மாற்றத்தில் காந்தியின் பங்கு
Ø நிறுத்தற்
குறியீடு அறிந்து படித்தல்
ஆர்வமூட்டல் :
Ø காந்தியடிகளின்
இளமைக்கால நிகழ்வுகளைக் கூறி ஆர்வமூட்டல்.
படித்தல் :
Ø நிறுத்தற் குறி அறிந்து
படித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய சொற்களின் பொருளை
அகராதிக் கொண்டு அறிதல்
நினைவு வரைபடம் :
தமிழ்
நாட்டில் காந்தி
தொகுத்து வழங்குதல் :
Ø 1919 – காந்தி தமிழ்நாட்டில்
சென்னைக்கு வந்தார். ரெளலட் சட்டம் எதிர்த்து கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜி வீட்டில்
நடந்தது.
Ø பாரதியாரை பத்திரமாக
பாதுகாக்க வேண்டும் என காந்தியடிகள் இராஜாஜியிடம் கூறினார்.
Ø 1921 ஆம் ஆண்டு காந்தி
மதுரைக்கு வந்த போது இந்தியர்களில் பெரும்பாலான மக்கள் ஆடையில்லாமல் இருப்பதைக் கண்டு
எளிமைத் திருக்கோலம் பூண்டார்.
Ø கானாடு காத்தான் என்ற
ஊரில் தொண்டரின் வீட்டில் வெளிநாட்டுப் பொருள்களைக் கொண்டு ஆடம்பரமாக இருந்ததைக் கண்டு
காந்தி இந்திய பொருட்களைப் பயன்படுத்தக் கூறினார். ஆடம்பர வாழ்வினை வெறுத்தார்.
Ø அனைவரும் சமம் என்பதற்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அனைவரும் நுழைவதற்கு ஏற்பாடு செய்தார்.
Ø காந்தியடிகள் ஜி.யு.
போப் எழுதிய தமிழ்க்கையேடு நூலும், திருக்குறளும் மிகவும் கவர்ந்த நூல்.
Ø உ.வே.சாமிநாதன் அவர்களிடம் தமிழ் பயில வேண்டும் என காந்தியடிகள் ஆவல் கொண்டார்
வலுவூட்டல் :
Ø காந்தியின் எளிமை மற்றும்
சமூக நீதி, அவரின் தமிழ்ப்பற்று பற்றி மீண்டும் கூறி வலுவூட்டல்
Ø காந்தியின் வலையொளிப்
பதிவுகள் மூலம் வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø எந்தப் பெரியவரின் அடி
நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்தியடிகள் ஆவல் கொண்டிருந்தார்?
Ø உங்கள் வீட்டில் வெளிநாட்டுப்
பொருட்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
Ø உங்கள் பிறந்த நாளினை
நீங்கள் எவ்வாறு கொண்டாடுவீர்கள் ? ஏன்?
Ø காந்தியடிகள் எளிமைத்
திருக்கோலம் பூண காரணமாக இருந்த நிகழ்வு எது?
Ø காந்தியடிகளை கவர்ந்த
தமிழ் நூல்கள் எவை?
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்
தொடர் பணி :
Ø காந்தியடிகள் நடத்திய
அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை