10TH - TAMIL - UNIT 5 - UNIT QUESTION

    இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022

இயல் வாரியான அலகுத் தேர்வுகள்      

வகுப்பு : 10                                                                                                                           இயல் : 05

பாடம் : தமிழ்                                                                                          மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                                                     3× 1= 3

1. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

) அருமை + துணை                ) அரு + துணை      ) அருமை + இணை  ) அரு + இணை

2. இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா. அதோ,அங்கே நிற்கும்என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.

) ஐய வினா,வினா எதிர் வினாதல்            ) அறிவினா,மறைவிடை

) அறியா வினா,சுட்டு விடை                    ) கொளல்வினா,இனமொழிவிடை

3.“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

) தமிழ்                   ) அறிவியல்                           ) கல்வி                   ) இலக்கியம்

2. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                          5× 2= 10

1..செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

2. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!

மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?

  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

3. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.              

4. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க:-

அ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

ஆ. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

5. கலைச்சொல் அறிக:-         அ. EMBLEM                              ஆ. INTELLECTUAL

3. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                          3× 3= 9

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

2. . முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.-இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

3. வினா வகையையும், விடை வகையையும் சுட்டுக:-

1. “ காமராசர் நகர் எங்கே இருக்கிறது ? “ “ இந்த வழியாகச் செல்லுங்கள் “ – என்று விடையளிப்பது.

2. “ எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “ எனக்கு யார் எழுதித் தருவார்கள் ?” என்று விடையளிப்பது

4. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                                                1× 3= 3

1. “ அருளைப் பெருக்கி “- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

5. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                               3× 5= 15

1. பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக

2. நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக:-                                                        

3. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post