10TH - TAMIL - UNIT 4 - UNIT QUESTION

 

                                                 இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022

இயல் வாரியான அலகுத் தேர்வுகள்      

வகுப்பு : 10                                                                                                                                      இயல் : 04

பாடம் : தமிழ்                                                                                                      மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                                                    2 × 1= 2

1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்              ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்             

இ) மருத்துவரிடம் நோயாளி                       ஈ) நோயாளியிடம் மருத்துவர்

2. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி      ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி         

இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி      ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

2. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                          5× 2= 10

1. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

2. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

3. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.              

4. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

அ. இயற்கை – செயற்கை            ஆ. விதி – வீதி

5. குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:- குறிப்பு – எதிர்மறையான சொற்கள்

அ. மீளாத் துயர்                        ஆ. அருகில் அமர்க

3. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                          3× 4= 12

1. மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

2. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடாவிளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

3.மொழிபெயர்க்க:-

               Malar: Devi,switch off the lights when you leave the room

               Devi : Yeah! We have to save electricity

               Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

               Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

               Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

3. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                         1× 4= 4

1. வாளால் அறுத்துச்- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

4.. நயம் பாராட்டுக:-                                                                                                     1× 6= 6

                              நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

                                             நேர்ப்பட வைத்தாங்கே

                              குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

                                             கோல வெறிபடைத்தோம்;

                              உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

                                             ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

                              பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                                             பாடுவதும் வியப்போ?                - பாரதியார்

5. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-                                                           1× 6= 6

 

CLICK HERE TO PDF

UNIT 5 - QUESTION 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post