10TH - NOTES OF LESSON - MARCH - 1ST WEEK

 நாள்                 :           25-02-2022 முதல்  05-03-2022          

மாதம்               :             மார்ச்          

வாரம்               :           மார்ச்-  முதல்   வாரம்                                        

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :    1. ஜெயகாந்தன் - நினைவு இதழ்

கரு பொருள்:

Ø  மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.

Ø  @ ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்தி, சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.

உட்பொருள்:

Ø  கருத்தாழமும் வாசகர் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன், சமகாலக் கருத்துக்களையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்  ஜெயகாந்தன் என்பதை  மாணவர் அறிந்து கொள்ளுதல்.

Ø  ஜெயகாந்தம் படைப்புகள் அறிதல்

கற்றல் விளைவுகள் :

Ø  மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.

Ø   ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்தி, சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø     ஜெயகாந்தம் அவர்களின் குறிப்பினையும், அவரின் படைப்புகளில் உள்ள ஒரு கதையும் கூறி  பாடப்பொருளை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

                              வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

·        ஜெயகாந்தன் எதற்காக எழுதுகிறார் ?

·        மற்றவர்களின் பார்வையில் ஜெயகாந்தன் எவ்வாறு வெளிப்படுகிறார்?

·        ஜெயகாந்தன் எழுதிய நூல்களின் பட்டியல்

·        ஜெயகாந்தனின் படைப்புகளில் திரைப்படமான படைப்புகள்

·        முன்னுரையில் சிறப்பாக எழுதும் ஜெயகாந்தன்

·        ஜெயகாந்தன் அவர்களின் கவிதை ஆற்றல்

·        ஜெயகாந்தன் படைப்புகளில் தர்க்கத்திற்கு அப்பால் என்ற கதையினை காணல்

ஆசிரியர் செயல்பாடு:

Ø    ஜெயகாந்தன் குறித்து அறிமுகம் செய்தல்

Ø    ஜெயகாந்தன் படைப்புகளை கூறல்

Ø    ஜெயகாந்தன் சிறப்புகளையும், அவர் படைத்த நூல்களுக்கு கிடைத்த விருதுகளையும் கூறல்.

Ø    தர்க்கத்திற்கு அப்பால் கதையின் மையக் கருத்தினை கூறல்

மாணவர் செயல்பாடு:

Ø    சிறந்த எழுத்தாளர் பற்றி அறிந்து கொள்ளுதல்

Ø    ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை அறிதல்

Ø    அவர் வென்ற விருதுகளை அறிதல்

Ø    தர்க்கத்தற்கு அப்பால் என்ற கதையினை உணர்தல்.

Ø    மாணவர்கள் தாங்களும் சிறந்த படைப்புகளை படைக்க முயற்சித்தல்

கருத்துரு வரைபடம்

ஜெயகாந்தம் நினைவு இதழ்

 


 

வலுவூட்டல்:

                                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

                                              மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை

மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  ஜெயகாந்தம் பற்றி அறிதல்

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள தொடர்களை படித்தல்

Ø  எளியத் தொடர்களைப் படித்தல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்

Ø  தர்க்கத்திற்கு அப்பால் கதையின் மையக் கருத்தினை அறிதல்

மதிப்பீடு:

Ø  ஜெயகாந்தன் வென்ற விருதுகள் யாவை?

Ø  ஜெயகாந்தன் யாரைப்பற்றி கவிதைப் படைத்துள்ளார்?

Ø  ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு செய்த நூல்கள் யாவை?

Ø  ஜெயகாந்தனின் எந்த நூல்கள் திரைப்படமாக வெளிவந்தது?

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post