காலாண்டுத் தேர்வு - 2026
தமிழ் – புத்தக மதிப்பீடு வினாக்கள்
எட்டாம் வகுப்பு
📘 இயல் 1 –
தமிழ் இன்பம்
1. தமிழ்மொழி வாழ்த்து
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
- ‘என்றென்றும்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) என் + றென்றும் ஆ) என்று + என்றும்
இ) என் + என்றும் ஈ) என்றும் + என்றும்
- ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) வான + மளந்தது ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது ஈ) வான் + மளந்தது
- அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல் _____.
அ) அறிந்ததுஅனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்தனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்
- வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல் _____.
அ) வானமறிந்த ஆ) வான்அறிந்த இ) வானம்அறிந்து ஈ) வான்மறிந்த
குறுவினா
- தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
- தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
சிறுவினா
- தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை
எழுதுக.
சிந்தனை வினா
- பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
கற்பவை கற்றபின்
- ‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை
இசையுடன் பாடி மகிழ்க.
2. ஆழிக்கு இணை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை __________
அணிந்துள்ளாள்.
அ) மாலையாக ஆ) ஆடையாக இ) அணிகலன்களாக ஈ) மகுடமாக
- பெரிய கப்பல்கள் __________ மீது செல்லும்.
அ) ஊழி ஆ) ஆழி இ) நாழி ஈ) தாழி
- ‘முத்தமிழ்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது __________.
அ) மூன்று + தமிழ் ஆ) முத்து + தமிழ் இ) மு + தமிழ் ஈ) முத் + தமிழ்
- ‘தன் அலையால் சங்கினைத்
தடுத்து நிறுத்திக் காக்கிறது’ – இத்தொடரில்
தன் என்னும் சொல் __________
குறிக்கிறது.
அ) அணிகலனைக் ஆ) கடலைக் இ) கப்பலைக் ஈ) தமிழைக்
தொகைச்சொற்களை விரித்து எழுதுக
- முத்தமிழ் : __________,
__________, __________.
- முச்சங்கம் : __________,
__________, __________.
- முச்சங்கு : __________,
__________, __________.
குறுவினா
- தமிழ் யாரால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்?
- இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?
சிறுவினா
- தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன
யாவை?
சிந்தனை வினா
- தமிழுக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள்
கருதுவன யாவை?
3. தமிழ் வரிவடிவ வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____
காரணமாக
அமைந்தது.
அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை
- வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______
என
அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ. சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்
கோடிட்ட இடத்தை நிரப்புக
- கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ______
என
அழைக்கப்பட்டன.
- எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக்
களைந்தவர் ______.
குறுவினா
- ஓவிய எழுத்து என்றால் என்ன?
- ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
- ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள்,
புள்ளிகள்
ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
- வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில்
ஏதேனும் இரண்டனை எழுதுக.
சிறுவினா
- எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
- தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
நெடுவினா
- எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
சிந்தனை வினா
- தற்போதைய தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய
பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
4. சொற்பூங்கா
மதிப்பீடு
- ஓரெழுத்து ஒருமொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள்
எழுதுக.
5. எழுத்துகளின் பிறப்பு
மதிப்பீடு
‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள
ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல்
இடுக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ,
ஏ
ஈ) அ, ஆ
- ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை
ஈ) மூக்கு
- வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
அ) மார்பு ஆ) தலை இ) மூக்கு ஈ) கழுத்து
- நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால்
பிறக்கும் எழுத்துகள் ____.
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) ப்,
ம்
- கீழ் உதடும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும்
எழுத்து _____.
அ) ம் ஆ) ப்
இ) ய் ஈ) வ்
பொருத்துக
- க், ங் – நாவின் இடை,
அண்ணத்தின்
இடை
- ச், ஞ் – நாவின் நுனி,
மேல்வாய்ப்பல்லின்
அடி
- ட், ண் – நாவின் முதல்,
அண்ணத்தின்
அடி
- த், ந் – நாவின் நுனி,
அண்ணத்தின்
நுனி
சிறுவினா
- எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
- மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
- ழகர, லகர,
ளகர
மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
📗 இயல் 2 –
இயற்கை
1. இயற்கையைப் போற்றுவோம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- கழுத்தில் இடுவது ______.
அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை
- கதிரவனின் மற்றொரு பெயர் ______.
அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
- ‘வெண்குடை’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) வெண் + குடை ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை ஈ) வெம்மை + குடை
- ‘அங்கண்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) அம் + கண் ஆ) அ + கண்
இ) அங் + கண் ஈ) அங்கு + கண்
- கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல் ______.
அ) கொங்குஅலர் ஆ) கொங்அலர்
இ) கொங்கலர் ஈ) கொங்குலர்
- அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல் ______.
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல் ஈ) அவனாளிபோல்
நயம் அறிக
- பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
- பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து
எழுதுக.
குறுவினா
- சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித்
தொடங்குகிறது?
- இயற்கை போற்றத்தக்கது ஏன்?
சிந்தனை வினா
- இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக்
கருதுகிறீர்கள்?
2. பட்டமரம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- மலர்களிலிருந்து வரும் __________ வண்டுகளை ஈர்க்கும்.
அ) மந்தம் ஆ) அந்தம் இ) சந்தம் ஈ) கந்தம்
- மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது __________
ஆகும்.
அ) சட்டை ஆ) பட்டை இ) மட்டை ஈ) கட்டை
- ‘வருமென்று’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது __________.
அ) வரு + மென்று ஆ) வரும் + மென்று
இ) வரும் + என்று ஈ) வரு + என்று
- கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல் __________.
அ) கிழிந்துஎழில் ஆ) கிழிந்தெழில் இ) கிழிந்தொழில் ஈ) கிழிந்தழில்
நயம் அறிக
- ‘பட்ட மரம்’ பாடலில்
இடம்பெற்றுள்ள எதுகை, மோனை,
இயைபுச்
சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
- பட்டமரம் எதனை நினைத்துக் கவலை அடைந்தது?
- பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?
- பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
சிறுவினா
- ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
சிந்தனை வினா
- மரங்கள் பட்டுவிடாமல் காக்க,
செய்ய
வேண்டியவையாக நீங்கள் கருதுவன யாவை?
3. ஈடில்லா இயற்கை – தமிழர் மருத்துவம் (நேர்காணல்)
மதிப்பீடு
- நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து
வினாக்களை எழுதுக.
- உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத்
திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் _____
பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை
- தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____
நீட்சியாகவே
உள்ளது.
அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின் ஈ) வாழ்வின்
- நோய்கள் பெருக மனிதன்__________ விட்டு விலகியதுதான்
முதன்மைக் காரணமாகும்.
அ) வீட்டை ஆ) உணவை இ) நாட்டை ஈ) இயற்கையை
- சமையலறையில் செலவிடும் நேரம் _____
செலவிடும்
நேரமாகும்.
அ) சுவைக்காக ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்விற்காக ஈ) உணவிற்காக
குறுவினா
- மருத்துவம் எப்போது தொடங்கியது?
- நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
- தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
சிறுவினா
- நோய்கள் பெருகக் காரணம் என்ன?
- பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள்
யாவை?
நெடுவினா
- தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும்
செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
- நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
4. வெட்டுக்கிளியும் சருகுமானும்
மதிப்பீடு
- ‘வெட்டுக்கிளியும்
சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
5. மயங்கொலிகள்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- சிரம் என்பது ------------------- (தலை / தளை)
- இலைக்கு வேறு பெயர் ------------------- (தளை / தழை)
- வண்டி இழுப்பது ------------------- (காலை / காளை)
- கடலுக்கு வேறு பெயர் ------------------- (பரவை /
பறவை)
- பறவை வானில் ------------------- (பறந்தது / பரந்தது)
- கதவை மெல்லத் ------------------- (திறந்தான் /
திரந்தான்)
- பூ ------------------- வீசும். (மனம் / மணம்)
- புலியின் ------------------- சிவந்து காணப்படும்.
(கன் / கண்)
- குழந்தைகள் ------------------- விளையாடினர். (பந்து /
பன்து)
- வீட்டு வாசலில் ------------------- இட்டனர். (கோலம் /
கோளம்)
மயங்கொலிப் பிழைகளைத் திருத்துக
- எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
- தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
- வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்லது.
குறுவினாக்கள்
- மயங்கொலி எழுத்துகள் யாவை?
- ண, ன,
ந
ஆகிய எழுத்துகள் (ஒலிகள்) பிறக்கும் முறையைக் கூறுக.
6. திருக்குறள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.
அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை
- பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.
அ) வலிமையற்றவர் ஆ) கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர்
- ‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) வல் + உருவம் ஆ) வன்மை + உருவம்
இ) வல்ல + உருவம் ஈ) வல்லு + உருவம்
- நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல் _____.
அ) நெடுதேர் ஆ) நெடுத்தேர் இ) நெடுந்தேர் ஈ) நெடுமைதேர்
- ‘கடல்ஓடா’ எனத் தொடங்கும்
குறளில் பயின்று வந்துள்ள அணி _____.
அ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி ஈ) பிறிதுமொழிதல் அணி
குறுவினா
- சான்றோர்க்கு அழகாவது எது?
- பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
- ‘வருமுன்னர்க் காவாதான் ...’
எனத் தொடங்கும் குறளில் உள்ள உவமை அணியை விளக்குக.
- பிறிதுமொழிதல் அணி என்பது யாது?
திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக
- தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
- தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்
அல்லது.
கோடிட்ட இடத்தை நிரப்புக
- வலியில் நிலைமையான் வல்லுருவம் ______
புலியின்தோல் ______மேய்ந் தற்று. - விலங்கொடு _____ அனையர் ______
கற்றாரோடு ஏனை யவர்.
📕 இயல் 3 –
கல்வி
1. பாடறிந்து ஒழுகுதல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- நம்மை _____ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரைப் ஆ) அகழ்வாரைப் இ) புகழ்வாரைப் ஈ) மகிழ்வாரைப்
- மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
அ) சிறை ஆ) அறை இ) கறை ஈ) நிறை
- ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பாட் + அறிந்து ஆ) பா + அறிந்து இ) பாடு + அறிந்து
ஈ) பாட்டு + அறிந்து
- முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல் _____.
அ) முறையப்படுவது ஆ) முறையெனப்படுவது
இ) முறைஎனப்படுவது ஈ) முறைப்படுவது
குறுவினா
- பண்பு, அன்பு ஆகியவை பற்றிக்
கலித்தொகை கூறுவன யாவை?
- முறை, பொறை என்பவற்றுக்குக்
கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
சிறுவினா
- நமக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களாக நல்லந்துவனார்
கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
- வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநலன்களாக நீங்கள்
கருதுவன யாவை?
2. புத்தியைத் தீட்டு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____
இன்றி
வாழ்ந்தார்.
அ) சோம்பல் ஆ) அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி
- ‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கோ + அப்பா ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா ஈ) கோ + இல்லப்பா
- பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல் _____.
அ) பகைவென்றாலும் ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும் ஈ) பகைவனின்றாலும்
நயம் அறிக
- ‘புத்தியைத் தீட்டு’ பாடலில்
இடம்பெற்றுள்ள எதுகை, மோனை,
இயைபுச்
சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
- யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
- பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
சிறுவினா
- புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர்
கூறுவன யாவை?
சிந்தனை வினா
- உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை
எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
3. கல்வி கரையில – பல்துறைக் கல்வி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.
அ) விளக்கு ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு
- கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.
அ) இளமை ஆ) முதுமை
இ) நேர்மை ஈ) வாய்மை
- இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக்
கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில் ஆ) நாட்டில்
இ) பள்ளியில் ஈ) தொழிலில்
நிரப்புக
- உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது __________
என்னும்
அறிவுக்கலை.
- புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு போன்றது.
- வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது _____
இன்பம்
ஆகும்.
பொருத்துக
- இயற்கை ஓவியம் – சிந்தாமணி
- இயற்கைத் தவம் – பெரியபுராணம்
- இயற்கைப் பரிணாமம் – பத்துப்பாட்டு
- இயற்கை அன்பு – கம்பராமாயணம்
குறுவினா
- இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
- தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
- திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின்
பெயர்களை எழுதுக.
சிறுவினா
- தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை
எழுதுக.
- அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
நெடுவினா
- காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும்
செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
- திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள்
எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
கற்பவை கற்றபின்
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
4. ஆன்ற குடிப்பிறத்தல்
மதிப்பீடு
- திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன்
கதையைச் சுருக்கி எழுதுக.
5. வினைமுற்று
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
- மாடு வயலில் புல்லை மேய்ந்தது.
– இத்தொடரில் உள்ள வினைமுற்று _____.
அ) மாடு ஆ) வயல் இ) புல்
ஈ) மேய்ந்தது
- பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ) ஓடாது
- பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
அ) செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய
சிறுவினா
- வினைமுற்று என்றால் என்ன?
- தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
- ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும்
இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
