🔥 7ஆம் வகுப்பு-தமிழ் இயல் 1–3 | முதல் பருவத் தேர்வு-26- முழுத்தொகுப்பு வினாக்கள்!

 


7ஆம் வகுப்பு தமிழ் – முதல் பருவம்-2026

  தமிழ் – புத்தக மதிப்பீடு வினாக்கள்


இயல் 1 – அமுதத் தமிழ்

1. எங்கள் தமிழ்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. நெறி’ என்னும் சொல்லின் பொருள் ______.

அ) வழி  ஆ) குறிக்கோள்  இ) கொள்கை   ஈ) அறம்

  1. குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) குரல் + யாகும்   ஆ) குரல் + ஆகும்  இ) குர + லாகும்   ஈ) குர + ஆகும்

  1. வான் + ஒலி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) வான்ஒலி  ஆ) வானொலி  இ) வாவொலி   ஈ) வானலி

குறுவினா

  1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
  2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

சிறுவினா

  1. எங்கள் தமிழ்’ என்னும் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

சிந்தனை வினா

  1. கவிஞர், தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

மதிப்பீடு

  1. எங்கள் தமிழ்” பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
  2. கொடுக்கப்பட்டுள்ள நாமக்கல் கவிஞரின் பாடலைப் படித்துச் சுவைக்க.

2. ஒன்றல்ல இரண்டல்ல

மதிப்பீடு

கீழ்க்கண்ட செயல்பாடுகள்

  1. தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
  2. தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. படைவெற்றி கொண்டவனைப் பாடும் இலக்கியம் ______.

அ) கலம்பகம்   ஆ) பரிபாடல்  இ) பரணி   ஈ) அந்தாதி

  1. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில்  ஆ) முகில்  இ) துகில்          ஈ) துயில்

  1. இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) இரண்டு + டல்ல                   ஆ) இரண் + அல்ல

இ) இரண்டு + இல்லை               ஈ) இரண்டு + அல்ல

  1. தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) தந்து + உதவும்                     ஆ) தா + உதவும்

இ) தந்து + தவும்                         ஈ) தந்த + உதவும்

  1. ஒப்புமை + இல்லாத’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) ஒப்புமைஇல்லாத  ஆ) ஒப்பில்லாத  இ) ஒப்புமையில்லாத ஈ) ஒப்புஇல்லாத

குறுவினா

  1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
  2. ஒன்றல்ல இரண்டல்ல’ பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

சிறுவினா

  1. தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

சிந்தனை வினா

  1. தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

3. பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. மொழியின் முதல்நிலை கேட்கல், ______ ஆகியனவாகும்.

அ) படித்தல் ஆ) பேசுதல்   இ) எழுதுதல்   ஈ) வரைதல்

  1. ஒலியின் வரிவடிவம் ______.

அ) பேச்சு     ஆ) எழுத்து            இ) குரல்       ஈ) பாட்டு

  1. தமிழின் கிளைமொழிகளுள் ஒன்று ______.

அ) உருது    ஆ) இந்தி               இ) தெலுங்கு         ஈ) ஆங்கிலம்

  1. பேச்சுமொழியை ______ வழக்கு என்றும் கூறுவர்.

அ) இலக்கிய          ஆ) உலக              இ) நூல்        ஈ) மொழி

சரி / தவறு

  1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
  2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
  3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
  4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
  5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

வகைப்படுத்துக

  1. பேச்சுமொழி, எழுத்துமொழி பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் ஊடகங்களை வகைப்படுத்துக:

வானொலி    தொலைக்காட்சி    செய்தித்தாள்          நூல்கள்   திரைப்படம் மின்னஞ்சல்

குறுவினா

  1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?
  2. பேச்சுமொழி என்றால் என்ன?
  3. வட்டாரமொழி எனப்படுவது யாது?

சிறுவினா

  1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் நான்கினை விளக்குக.
  2. கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

சிந்தனை வினா

  1. இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

4. ஆளுக்கு ஒரு வேலை – பொம்மலாட்டம்

மதிப்பீடு

  1. உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
  2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் ஏதேனும் ஐந்தினைத் தேர்ந்தெடுத்து, சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

5. குற்றியலுகரம், குற்றியலிகரம்

மதிப்பீடு

  1. ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுக; அவற்றில் குற்றியலுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
  2. குற்றியலுகை எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகை வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
  3. குற்றியலுகை எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடிக்குக.
    • எடுத்துக்காட்டு: ஒன்று – 1 + ½ + ½ = 2
  4. கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகையை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.

கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகை வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக:

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து.

பொருந்தாத சொற்களை எடுத்தெழுதுக:

  1. பசு, விடு, ஆறு, கரு
  2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
  3. ஆறு, மாசு, பாகு, அது
  4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு
  5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

குறுவினா

  1. குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
  2. குற்றியலிகரம் என்றால் என்ன?

இயல் 1 – மொழியை ஆள்வோம்

கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக – “தாய்மொழிப் பற்று”

குறிப்புகள்:

  • மொழி பற்றிய விளக்கம்
  • தாய்மொழி
  • தாய்மொழிப் பற்று
  • தாய்மொழிப் பற்று கொண்ட சான்றோர்
  • நமது கடமை
  • முடிவுரை

மொழியோடு விளையாடு

  1. தொகைச் சொற்களை விரித்து எழுதுக:
    • முக்கனி
    • முத்தமிழ்
    • நாற்றிசை
    • ஐந்திணை
    • அறுசுவை
  2. இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக:
    • மழலை பேசும் ______ அழகு.
    • இனிமைத் தமிழ் ______ எமது.
    • அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை ______ பழகும்.
    • அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி ______.
    • நீ அறிந்ததைப் பிறருக்குச் ______.
    • எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது ______.
    • உழவர்கள் நாற்று ______ வயலுக்குச் செல்வர்.
    • குழந்தையை மெதுவாக ______ என்போம்.

படிப்போம்; பயன்படுத்துவோம்

Media                      Periodical                 Linguistics      Puppetry

Phonology                Orthography             Journalism      Dialogue


இயல் 2 – இயற்கை

காடு

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. வாழை, கன்றை ______.

அ) ஈன்றது   ஆ) வழங்கியது     இ) கொடுத்தது       ஈ) தந்தது

  1. காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) காடு + தொல்லாம்                 ஆ) காடு + எல்லாம்

இ) கா + தொல்லாம்                    ஈ) கான் + எல்லாம்

  1. கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______.

நயம் அறிக

  1. பாடலில் உள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

குறுவினா

  1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
  2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

சிறுவினா

  1. காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் சுரதா கூறுவனவற்றை எழுதுக.

சிந்தனை வினா

  1. காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் சுரதா கூறக் காரணம் என்ன?

7. அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ______.

அ) பச்சை இலை   ஆ) கோலிக்குண்டு          இ) பச்சைக்காய்      ஈ) செங்காய்

  1. சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ______.

அ) மண் ஒட்டிய பழங்கள்                    ஆ) சூடான பழங்கள்

இ) வேகவைத்த பழங்கள்                     ஈ) சுடப்பட்ட பழங்கள்

  1. பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

அ) பெயர + றியா              ஆ) பெயர் + ரறியா

இ) பெயர் + அறியா           ஈ) பெயர + அறியா

  1. மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

அ) மன + மில்லை            ஆ) மனமி + இல்லை

இ) மனம் + மில்லை         ஈ) மனம் + இல்லை

  1. நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) நேற்றுஇரவு      ஆ) நேற்றிரவு        இ) நேற்றுரவு         ஈ) நேற்இரவு

குறுவினா

  1. நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
  2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

சிறுவினா

  1. நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் ராஜமார்த்தாண்டன் கூறுவன யாவை?

சிந்தனை வினா

  1. பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஏன் பார்க்க விரும்பவில்லை?

8. தமிழரின் கப்பற்கலை

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ______.

அ) கலம்      ஆ) வங்கம்             இ) நாவாய்    ஈ) ஓடம்

  1. தொல்காப்பியம் கடற்பயணத்தை ______ வழக்கம் என்று கூறுகிறது.

அ) நன்னீர்   ஆ) தண்ணீர்         இ) முந்நீர்    ஈ) கண்ணீர்

  1. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ______.

அ) சுக்கான்            ஆ) நங்கூரம்          இ) கண்ணடை      ஈ) சமுக்கு

கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை ______ கப்பல்கள் எனப்பட்டன.
  2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ______.
  3. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு ___

பொருத்துக

  1. எரா – திசைகாட்டும் கருவி
  2. பருமல் – அடிமரம்
  3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர்
  4. காந்த ஊசி – குறுக்கு மரம்

குறுவினா

  1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
  2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் அல்லது பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
  3. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

சிறுவினா

  1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
  2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.
  3. கலங்கரை விளக்கம் – சிறுகுறிப்பு வரைக.

சிந்தனை வினா

  1. தற்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன்?

9. விலங்குகள் உலகம்

  1. ஏதேனும் மூன்று வனவிலங்குகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

10. நால்வகைக் குறுக்கங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. வெட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.

அ) அரை     ஆ) ஒன்று   இ) ஒன்றரை          ஈ) இரண்டு

  1. மகரக்குறுக்கம் இடம்பெறாத சொல் ______.

அ) போன்ம்  ஆ) மருண்ம்          இ) பழம் விழுந்தது   ஈ) பணம் கிடைத்தது

  1. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ______.

அ) ஐகாரக் குறுக்கம்                  ஆ) ஔகாரக் குறுக்கம்

இ) மகரக் குறுக்கம்                    ஈ) ஆய்தக் குறுக்கம்

குறுவினா

  1. ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?
  2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
  3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

11. இயல் 2 – திருக்குறள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. வாய்மை எனப்படுவது ______.

அ) அன்பாகப் பேசுதல்      ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

இ) தமிழில் பேசுதல்          ஈ) சத்தமாகப் பேசுதல்

  1. ______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

அ) மன்னன்                              ஆ) பொறாமை இல்லாதவன்

இ) பொறாமை உள்ளவன்          ஈ) செல்வந்தன்

  1. பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

அ) பொரு + செல்வம்                 ஆ) பொருட் + செல்வம்

இ) பொருள் + செல்வம்              ஈ) பொரும் + செல்வம்

  1. யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

அ) யா + எனின்      ஆ) யாது + தெனின் இ) யா + தெனின் ஈ) யாது + எனின்

  1. தன் + நெஞ்சு’ என்பதனைச் சேர்த்து எழுதுக.

அ) தன்நெஞ்சு       ஆ) தன்னெஞ்சு    இ) தானெஞ்சு        ஈ) தனெஞ்சு

  1. தீது + உண்டோ’ என்பதனைச் சேர்த்து எழுதுக.

அ) தீதுண்டோ        ஆ) தீதுஉண்டோ   இ) தீதிண்டோ        ஈ) தீயுண்டோ

  1. கண்நின்று’ எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள முரண்தொடைக் சொற்கள்

அ) கண்நின்று – முன்னின்று              ஆ) கண்நின்று – சொல்லினும்

இ) சொல்லினும் – சொல்லற்க             ஈ) கண்அற  - சொல்லற்க

 

குறுவினா

  1. எப்போது தன் நெஞ்சே தன்னை வருத்தும்?
  2. வாழும் நெறி யாது?
  3. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
  4. சொற்பொருள் பின்வருநிலை அணி எவ்வாறு வரும்?

இயல் 2 – மொழியை ஆள்வோம்

கடிதம் எழுதுக:

நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.

மொழியோடு விளையாடு

 கொடுக்கப்பட்டுள்ள சொற்களை இணைத்துப் புதிய சொற்களை அமைக்குக:

வாழை         தயிர்             கூடு             திடல்            பாட்டு           குருவி         கொய்யா       சோறு           பழம்             பறவை           விளையாட்டு          கூட்டம்        அவலை       போட்டி        காய்

  1. எடுத்துக்காட்டு: வாழை + காய் = வாழைக்காய்

படிப்போம்; பயன்படுத்துவோம்

 Parable                    Natural Resource                Forestry           Conservator of Forest


இயல் 3 – நாடு, சமூகம்

12. விடுதலைத் திருநாள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. வானில் முழுநிலவு அழகாக ______ அளித்தது.

அ) தயவு      ஆ) தரிசனம்          இ) துணிவு   ஈ) தயக்கம்

  1. இந்த ______ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

அ) வையம்   ஆ) வானம்             இ) ஆழி       ஈ) கானகம்

  1. சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

அ) சீவ + நில்லாமல்                   ஆ) சீவன் + நில்லாமல்

இ) சீவன் + இல்லாமல்               ஈ) சீவ + இல்லாமல்

  1. விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

அ) விலம் + கொடித்து                ஆ) விலம் + ஒடித்து

இ) விலன் + ஒடித்து                  ஈ) விலங்கு + ஒடித்து

  1. காட்டை + எரித்து’ என்பதனைச் சேர்த்து எழுதுக.

அ) காட்டைஎரித்து                     ஆ) காட்டையெரித்து

இ) காடுஎரித்து                           ஈ) காடுயெரித்து

  1. இதம் + தரும்’ என்பதனைச் சேர்த்து எழுதுக.

அ) இதந்தரும்        ஆ) இதம்தரும்       இ) இதத்தரும்        ஈ) இதைத்தரும்

குறுவினா

  1. பகத்சிங் கண்ட கனவு யாது?
  2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

சிறுவினா

  1. இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

சிந்தனை வினா

  1. நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

13. தேசியம் காத்த செம்மல் – பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.

அ) தூத்துக்குடி      ஆ) காரைக்குடி     இ) சாயல்குடி  ஈ) மன்னார்குடி

  1. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் ______.

அ) ராஜாஜி   ஆ) நேதாஜி            இ) காந்திஜி            ஈ) நேருஜி

  1. தேசியம் காத்த செம்மல்’ என பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் .

அ) ராஜாஜி             ஆ) பெரியார்           இ) திரு.வி.க.         ஈ) நேதாஜி

குறுவினா

  1. முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
  2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கக் காரணம் யாது?
  3. முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.

சிறுவினா

  1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்பு பற்றி எழுதுக.
  2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?

சிந்தனை வினா

  1. சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

14. கப்பலோட்டிய தமிழர் – வ.உ. சிதம்பரனார்

மதிப்பீடு

  1. வ.உ. சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.

15. ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

மதிப்பீடு – பகுபதம் / பகாப்பதம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ______.

அ) 40          ஆ) 42         இ) 44          ஈ) 46

  1. எழுதினான்’ என்பது ______.

அ) பெயர்ப் பகுபதம்                    ஆ) வினைப் பகுபதம்

இ) பெயர்ப் பகாப்பதம்                  ஈ) வினைப் பகாப்பதம்

  1. பெயர்ப் பகுபதம் ______ வகைப்படும்.

அ) நான்கு   ஆ) ஐந்து     இ) ஆறு       ஈ) ஏழு

  1. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ______.

அ) பகுதி      ஆ) விகுதி   இ) இடைநிலை     ஈ) சந்தி

பொருத்துக

  1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
  2. வினைப் பகுபதம் – மன்
  3. இடைப் பகாப்பதம் – நனி
  4. உரிப் பகாப்பதம் – பெரியார்

சரியான பகுபத உறுப்பை எழுதுக

போவாள் – போ + வ் + ஆள்’

  • போ – ______
  • வ் – ______
  • ஆள் – ______

நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்’

  • நட – ______
  • க் – ______
  • கின்று – ______
  • ஆன் – ______

 

பிரித்து எழுதுக

  1. பார்த்தான்
  2. பாடுவார்

குறுவினா

  1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
  2. பதத்தின் இருவகைகள் யாவை?
  3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  4. விகுதி எவற்றைக் காட்டும்?
  5. பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

இயல் 3 – மொழியை ஆள்வோம

பயிற்சிகள்

பின்வரும் தொடர்களில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருளை எடுத்து எழுதுக.

  1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
  2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
  3. கொற்கைத் துறைமுகத்தில் பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
  4. திருக்குறளை எழுதியவர் யார்?
  5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.       நான் கவிதை எழுதுவேன்.

  1. கீழ்க்கண்ட தலைப்பில் கட்டுரை எழுதுக:

நான் விரும்பும் தலைவர்”


இயல் 3 – மொழியோடு விளையாடு

  1. இடைச்சொல்ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.
    • வீடு கட்டினான் வீடு + ஐ + கட்டினான் வீட்டைக் கட்டினான்
  2. கடல் பார்த்தாள் – ______
  3. புல் தின்றது – ______
  4. கதவு தட்டும் ஓசை – ______
  5. பாடல் பாடினாள் – ______
  6. அறம் கூறினார் – ______
  7. அகம் என முடியும் சொற்களை எழுதுக.
    • எடுத்துக்காட்டு: நூலகம்
  8. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

கண்                       அழகு                     கண்ணழகு            கண்ணுண்டு

மண்                       உண்டு

விண்

பண்

  1. கோடிட்ட இடங்களைத் தமிழ் எண்ணைக் கொண்டு நிரப்புக:
    • எனது வயது ______.
    • நான் படிக்கும் வகுப்பு ______.
    • தமிழ் இலக்கணம் ______ வகைப்படும்.
    • திருக்குறளில் ______ அதிகாரங்கள் உள்ளன.
    • இந்தியா ______ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

 


இயல் 3 – படிப்போம்; பயன்படுத்துவோம்

Ballad                      Elocution                   Courage                  Unity             Sacrifice Slogan                  Political Genius          Equality

 CLICK TO PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post