🌊 கிழவனும் கடலும் 🐟
ஆறாம் வகுப்பு தமிழ் – படக்கதை
📖 கதை
- சாண்டியாகோ என்ற வயது முதிர்ந்த மீனவர் ஒருவர் இருந்தார்.
- அவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பார்.
- அவர் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பி வந்ததில்லை.
- ஆனால் தொடர்ந்து 84 நாட்களாக அவருக்கு மீன் கிடைக்கவில்லை.
- மனோலின் என்ற சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக முதல் 40 நாட்கள் அவருடன் கடலுக்குச் சென்றான்.
- 40 நாட்களாக மீன் கிடைக்காததால், சிறுவனின் பெற்றோர் அவனை வேறொரு படகிற்கு அனுப்பிவிட்டனர்.
- எண்பத்தி ஐந்தாவது நாள் சாண்டியாகோ மீண்டும் கடலுக்குச் சென்றார்.
- நீண்ட நேரம் முயற்சி செய்த பிறகு அவருக்கு ஒரு பெரிய சுறா மீன் கிடைத்தது.
- அந்த மீனை மகிழ்ச்சியுடன் கரைக்குக் கொண்டு வந்தார்.
- ஆனால் வழியில் வந்த மற்ற மீன்கள் அந்த பெரிய மீனைத் தின்றுவிட்டன.
- இறுதியில் அந்த மீனின் எலும்புக்கூடு மட்டுமே மிச்சமிருந்தது.
- சாண்டியாகோ மனம் தளரவில்லை.
- அவரது முயற்சியையும் துணிவையும் பார்த்த மனோலின் மீண்டும் அவரிடம் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ள வந்தான்.
🌟 நீதி
- முயற்சிக்கு வயது தடை இல்லை.
- தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...
