📘 இளந்தமிழ் – ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடை
பருவம் : 1
இயல் : 2
பாடம் : இயற்கை இன்பம் – முதலெழுத்தும் சார்பெழுத்தும்
✍️ வினா – விடை
1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- உயிர் எழுத்து 12 , மெய்யெழுத்து 18 ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள்.
- பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதற் காரணமாக இவை இருப்பதால் இவை முதல் எழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.
2. சார்பெழுத்துகள் எத்தனை? அவையாவை?
- சார்பெழுத்துகள் 10.
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகார குறுக்கம்
- ஒளகார குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
- மகரக் குறுக்கம்
3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம் பெறும்?
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...
