👉 🔥 7th தமிழ் மூன்றாம் பருவத் தேர்வு 2026 Answer Key வெளியானது – FREE PDF


 சேலம் – மூன்றாம் பருவத்  தேர்வு  -ஏப்ரல்-2026

ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.30 மணி                                                                              மதிப்பெண் : 60

பகுதி – 1

I) சரியான விடையைத் தேர்வு செய்க - 6

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ) பாண்டிய

1

2.

ஆ) மாரி

1

3.

அ) பிறப்பால்

1

4.

ஆ) குயில்

1

5.

இ) ஞானம் + சுடர்

1

6.

அ) முதுமொழி

1

II) கோடிட்ட இடங்களை நிரப்புக.         - 4

7.

பொதிகை

1

8.

துன்பம்

1

9.

வாய்மையை

1

10.

எட்டு

1

11

நான்கு

 

III) பொருத்துக - 4

12

வேறுபாடுகள்

1

13.

உயர்வு

1

14.

அறம்

1

15.

கருணை

1

IV) எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி   6 x 2 =12

16

அங்கவை         சங்கவை

2

17

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

2

18

தன்னுடைய துன்பம் நீங்க திருமாலின் அடிகளுக்கு பாமாலை சூட்டினார்.

2

19

வன்சொல் என்னும் களை

2

20

மூன்று.    ஆண்பால், பெண்பால், பலர்பால்

2

21

மிக்க பசி, ஓயாத நாடு, அழிவு செய்யும் பகை இவை இல்லாமல் இருப்பதே சிறந்த நாட்டின் இயல்புகள்.

2

22

நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்.

2

23

தமது கல்வியைவிட நாட்டின் விடுதலை மேலானது என எண்ணி காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துக் கொண்டார்.

2

24

ஆறு வகைப்படும்

அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா

2

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி   2 x 3 =6

25

·       தாமிரபரணி ஆற்றின் மூலம் உழவுத் தொழில் நடைபெறுகின்றது.

·       குளத்துப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன.

·       இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது.

3

26

·       சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.

·       உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது.

·       அவர்களே தலைவர்கள் ஆவர்.

·       மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது பொறுமை

3

27

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே எனத் தோன்றும்படி கூறுவது உருவக அணி

3

VI) அடிமாறாமல் எழுதுக                                     4 + 2 = 6

28அ

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு – நீர் உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முன்றிலோ இல்    - முன்றுறை அரையனார்

4

28ஆ

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

2

VII) கடிதம் எழுதுக                                              1 X 5 = 5

29அ

ஒற்றுமையே உயர்வு

குறிப்புச்சட்டம்

முன்னுரை

ஒற்றுமையின் பயன்கள்

ஒற்றுமையின் முக்கியத்துவம்

முடிவுரை

முன்னுரை

         உலக அமைதியும் வளர்ச்சியும் உலக மக்களின் ஒற்றுமையில் தான் இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தால் நாட்டின் வளர்ச்சியானது பிரிவின்மை இல்லாமல் இருக்கும். வாங்க இந்த பதிவில் ஒற்றுமையே உயர்வு பற்றிய கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

ஒற்றுமையின் பயன்கள்

          மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் போக பணம், அந்தஸ்த்து, மதம், பொருளாதார நிலை போன்ற பல காரணங்கள் காணப்படுகின்றன.

          இல்வாழ்வின் ஒற்றுமையே ஊரின் ஒற்றுமையாய், நாட்டின் ஒற்றுமையாய், உலகின் ஒற்றுமையாய் வளர்ச்சி அடையும். அவ்வளர்ச்சியிலே கல்வியின் மாண்பைநாம் பார்க்கலாம். 

ஒற்றுமையின் முக்கியத்துவம்

          ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்தால் தான் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

உலகம் முழுவதும் பிரிவு இல்லாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைவரும் சமம் என்று நினைக்க வேண்டும்.

முடிவுரை

          ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்று பாரதியார் நமக்கு பாடலின் மூலம் எடுத்துரைத்துள்ளார். மற்றவர்களுக்கு உதவுதல், விட்டு கொடுக்கும் மனப்பான்மை மற்றும் இரக்கம் போன்ற நல்ல குணங்களை வளர்த்து ஒற்றுமையாக வாழ்வோம். அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு ஒரு நல்ல உதாரணம்.

5

29ஆ

02-01-2024

ஈரோடு

அன்புள்ள மாமாவிற்கு,

          வணக்கம். இங்கு அனைவரும் நலம். நீங்கள் அனைவரும் நலமா?. எங்கள் ஊரில் 15-01-2024 முதல் 17-01-2024 வரை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டும் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த முறை நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் அவசியம் திருவிழாவில் கலந்துக் கொள்ள வேண்டும். உங்கள் வரவை எதிர்ப்பார்த்துக் காத்து இருக்கிறோம்.

                                                நன்றி.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

இரா.முகில்

உறை மேல் முகவரி.

பெறுதல்

         இரா. கார்த்திகேயன்,

          20, பாரதியார் தெரு,

          கம்பர் நகர்,

          சேலம் – 636015.

5

VII) ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக                                     1 X 6 = 6

30அ

பெங்களூரில் அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கதாசிரியர் தனது மூன்றாவது சம்பளத்தில் ஒரு மிதிவண்டியை வாங்கினார். மிதிவண்டியில் செல்வதுதான் அவருடைய பொழுதுபோக்கு.

ஹாசன் வழியாக மங்களூரு செல்ல வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் ஒருமுறை புறப்பட்டார். பகலில் வெப்பமும் இரவில் கடும் மழையும் பெய்தது. மிதிவண்டிச் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஒட்டுகிற கருவிகளும் காற்றடிக்கும் கருவியும் இல்லாததால் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டே நடந்தார்.

மழையின் வேகத்தையும் மீறி ஒரு குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது. குரல் வந்த திசையில் இருந்த சிறுவன் ஒரு துண்டு கொண்டு வந்து தந்தான். தன் அம்மாவிடம் அம்மா பாவம்மா இவரு” என்று கூறிவிட்டு அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தான்.

டில்லிக்கு , இமயமலைக்கு மிதிவண்டியில் செல்ல முடியுமா என்று கேட்டான். செல்ல முடியும் அவர் கூறினார். அச்சிறுவன் எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை. ஆனா அம்மா வாங்கித் தரமாட்றாங்க” என்று ஏக்கத்துடன் கூறினான். அவர் அவனிடம் “நீ பெரியவனானதும் வாங்கித் தருவார்கள்’ என்று சமாதானப்படுத்தினார்.

மறுநாள் காலை மிதிவண்டியைச் சரி செய்த பின்னர் அச்சிறுவன் மிதிவண்டியை ஓட்டினான்.மழை வந்துவிட்டது. மழைநின்றதும் புறப்பட்டார். ஆனால் அச்சிறுவன் கேட்டுக் கொண்டதால் அவனுக்கு மிதிவண்டியைக் கொடுத்து ஓட்டச் செய்தார்.  அச்சிறுவனைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார். சிறுவன் மிதிவண்டியைக் கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று திரும்பினான்.

அரிசிக்கெரே நெருங்கியதும் வீடுகள் தென்பட்டன. அச்சிறுவன், “இன்னும் கொஞ்ச தாரம்தான் எங்க மாமா வீடு. அது வரைக்கும் நானே மிதிவண்டியில் போய் வரட்டா? கொஞ்ச நேரம் அவங்க மிதிவண்டியைத் தொட்டுட்டா என்னா கத்து கத்துவாங்க தெரியுமா? இப்ப அவங்க முன்னால நான் போய் எறங்கினதுமே அதிசயப்படுவாங்க. அதுவரைக்கும் போய் வரட்டா?” என்று கேட்டான். அவரும் சரி என்றார். அவனும் மிதிவண்டியில் பாய்ந்து விட்டான்.

சாலை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆட்டோக்கள், லாரிகள் என வேகவேகமாகச் செல்லும் வாகனங்கள் அவர் சட்டென அச்சிறுவனைப்பற்றி யோசித்தார். அச்சிறுவனுடைய குடும்பம், அவன் ஆசை , அவன் வேகம் எல்லாம் அவர் மனதில் அலைமோதின. எதிர்பாராத விதமாக முன்னால் வந்து நின்ற ஹாசன் பேருந்தில் சட்டென்று ஏறி உட்கார்ந்து விட்டார். வண்டியும் உடனே கிளம்பி விட்டது.

6

30ஆ

·       தீயணைப்பு மீட்புப் பணி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

·       மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

·       ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் உருள வேண்டும்

 

VIII) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                         5 X 2= 10

31

அ) குன்றின் மேலிட்ட விளக்கு போல          

ஆ) பசு மரத்தாணிப் போல

2

32

அ) வேளாண்மை                   ஆ) செல்வம்

2

33.

அ) மாணவி     ஆ) அரசன்

2

34

உயர்திணை : ஆசிரியர், முகிலன்

அஃறிணை : புத்தகம், குதிரை

2

35

அ) மலையின் உயரம் இந்தப் பனைமரம்

ஆ) அழகில் சிறந்தது மயில்

2

 விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் வழிகாட்டி-  8072426391

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

 pdf link

click here

 


 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post