👉 🔥 6th தமிழ் மூன்றாம் பருவத் தேர்வு 2026 Answer Key வெளியானது – FREE PDF

 



 சேலம் –  மூன்றாம் பருவத்  தேர்வு- ஏப்ரல்-2026

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.30 மணி                                                                              மதிப்பெண் : 60

பகுதி – 1

I) சரியான விடையைத் தேர்வு செய்க - 6

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ) காவிரிக் கரை

1

2.

ஆ) மதுரை

1

3.

அ) தாயாக

1

4.

ஈ) அன்பு

1

5.

ஆ) வளையல்

1

II) கோடிட்ட இடம் நிரப்புக.         - 2

6.

ஈகை

1

7.

முயல்

1

III) பொருத்துக - 4

8.

செல்வம்

1

9

மிகுதி

1

10

பெரும்பரப்பு

1

11

அழகு

1

IV) சேர்த்து எழுதுக- 4

12

எதிரொலிக்க

1

13

தம்முயிர்

1

V) பிரித்து எழுதுக- 4

14

இனிமை + ஓசை

1

15

தோரணம் + மேடை

1

VI) ஓரிரு வார்த்தையில் விடையளி                    6 X 2 = 12

16

Ø    தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.

Ø ஜி,யு,போப் எழுதிய “ தமிழ்கையேடு “ தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

2

17

தொண்டு செய்பவராக தம்மை ஆக்கிக்கொண்டால் இன்ப நிலை தானே வந்து சேரும்.

2

18

பெயர்ச்சொல், வினைச்சொல்,இடைச்சொல்,உரிச்சொல்

2

19.

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதே அறிவின் பயன்.

2

20

இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

2

21

தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்.

2

22

காளிதாசன் , கம்பன்

2

23

காற்றின் தூய்மையும், நீரின் உயர்வும்

2

VII) ஓரிரு வரிகளில் மூன்றனுக்கு மட்டும் விடையளி   3 X 3 = 9

24

நாம் சோர்ந்து தளர்ந்து படுக்காமல் விடாமுயற்சியுடன் நடந்தால் பூமி நமக்கு பாதையாகும்.

3

25

Ø  வீடுகளைச் சுற்றி வலுவான மதில் சுவர்கள் அமைக்கப்படிருக்கும்.

Ø  அனைத்தும் மாடி வீடுகளாக இருக்கும்.

Ø  வீட்டின் மேடைகள் மணிகளால் அழகுப்படுத்தப்பட்டிருக்கும்.

3

26

Ø  ஜி.யு.போப் எழுதிய  “ தமிழ்க்கையேடு “ தமிழ் கற்கும் ஆர்வத்தை உண்டாக்கியது.

Ø  1937 – இல் சென்னை இலக்கிய மாநாட்டில் உ.வே.சாமிநாதரின் வரவேற்புரை கேட்டு மகிழ்ந்தார்.

Ø  “ இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை உண்டாகிறது “ என்றுக் கூறினார்.

3

27

தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி,“என்னைத் தொடாதீர்கள். என் நோய் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். என் உறவினர்களே என்னை வெறுத்து விலக்கி விட்டனர். என்னுடன் பேசுவதில்லை. என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது” என அழுதார் மூதாட்டி. இதைக் கேட்ட அன்னை தெரசா கண்ணீர் விட்டார்

3

28

·       ஆறு வகைப்படும்

·       பொருட் பெயர்

·       இடப்பெயர்

·       காலப் பெயர்

·       சினைப் பெயர்

·       பண்புப் பெயர்

·       தொழிற் பெயர்

3

VIII) அடிமாறாமல் எழுதுக                                                             2 + 4= 6

29

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்     

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

2

30

தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவலென்று செய்வேன் பராபரமே!

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

4

IX) ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி                                                         1 X 7= 7

31அ

Ø  சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது.

Ø  மைசூரிலிருந்து ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரை படை வந்து விட்டது.

Ø  வேலு நாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.

Ø  முதலில் காளையார் கோவில் கைபற்றுதல்.

Ø  ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள் படைப்பிரிவுக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்.

Ø  விசயதசமி நாளில் படைகள் உள்ளே நுழையலாம் என வேலுநாச்சியார் கூறினார்.

Ø  உடையாளுக்கு நடுகல் நடப்பட்டது.

Ø  வேலுநாச்சியார் படைகள் உள்ளே சென்று ஆங்கிலேயர் படையைத் தோற்கடித்தது.

Ø  சிவகங்கை மீட்கப்பட்டது.

7

31ஆ

தேசிய ஒருமைப்பாடு

முன்னுரை

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியர்களின் ஒற்றுமை

ஒருமைப்பாடு வளர்ப்போம்

முடிவுரை

முன்னுரை :

          ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பொன்மொழி. நம் முன்னோர்கள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

வேற்றுமையில் ஒற்றுமை :

          அனைவரும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். தேசிய ஒருமைப்பாட்டை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாம் அடுத்தவர்களை நம்முடைய உடன் பிறந்தவர்களாக நினைக்க வேண்டும்.

இந்தியர்களின் ஒற்றுமை :

          இந்தியா மொழிகள், இனங்கள், சமயங்கள் இருந்தாலும்  நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வினால் எப்போதும் ஒற்றுமை அடைகிறார்கள். இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் போது ஒவ்வொரு இந்தியர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையை உணர்கின்றனர்.

ஒருமைப்பாடு வளர்ப்போம்

          நாடு முன்னேற ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேசப் பற்று மிகவும் முக்கியம். வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையினை வளர்த்து கொள்வதால் தான் இந்தியா பலமான நாடாக வளர்ச்சி அடைய முடியும்.

முடிவுரை :

          உலக அளவில் இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் போது நாம் பெருமை அடைகிறோம். இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய நாட்டிற்கு பெருமைச் சேர்ப்போம்.

7

IX) கடிதம் எழுதுக                                                             1 X 6= 6

32

அனுப்புநர்

க. இளவேந்தன்

 மாணவச்செயலர்,

10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

 அரசினர் உயர்நிலைப்பள்ளி,

  வளையசெட்டிப்பட்டி,

பெறுநர்

  மேலாளர்,

  தமிழ்விதைப் பதிப்பகம்,

  சென்னை-600 001.

பெருந்தகையீர்,

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

நாள் : 01-09 -2021     

இடம்: கோரணம்பட்டி                                        தங்கள் உண்மையுள்ள,

                                                                          க.இளவேந்தன்.

                                                                    (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

தமிழ்விதைப் பதிப்பகம்,

சென்னை-600 001

6

XI ) அனைத்து வினாவிற்கும் விடையளி       5 X 1 = 5

33

அ)அந்தச் சட்டை என்னுடையது.

ஆ) இந்தப் பையன் தான் வெற்றிப் பெற்றான்

1

34

அ) மாதம், கிழமை             ஆ) எண், ஓடும் நீர்

1

35

அ) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்ததது

( ஏதேனும் 1 தொடர் எழுதினால் போதும் )

1

36

அ) அங்கே                  ஆ) எங்கே

1

37

அ) மனித நேயம்          ஆ) கருணை

1

விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் வழிகாட்டி-  8072426391

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

 PDF LINK

click here

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post