Salem District 9th Tamil 2nd Mid Term Answer Key 2025 | Full Solution PDF Download-2025



 சேலம் – இரண்டாம் இடைப் பருவத்தேர்வு  -2025

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                                            மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 6

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ) களர்நிலம்

1

2.

ஆ) தொடு உணர்வு

1

3.

ஆ) பட்டம் செய்திருக்கிறேன்

1

4.

ஈ) கனக சுப்புரத்தினம்

1

5.

ஈ) பாரதி தாசன்

1

6.

இ) உலகம்

1

பகுதி – 2

7

பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

2

8

ü   சமைக்கும் பணி, பெண்களுக்கு தவிர்க்க முடியாத கடமை எனவும், அது தாய்மார்களுக்கே உரியது  என நிலவும்  வழக்கம் இருக்கிறது.

ü   இவ்வழக்கம் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமெனில் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

2

9

குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, பிசிராந்தையார்

2

10.

v மூவறிவு – கரையான், எறும்பு

v நாலறிவு – நண்டு, தும்பி, வண்டு

2

11.

Ø  பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.

Ø  முதல் வினையைச் சார்ந்து அதன் வினைபொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.

Ø  பேச்சுமொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் உள்ளது.

2

12

அ) நல்ல தமிழில் எழுதுவோம்

ஆ) பவளவிழியும் பரிசுக்கு உரியவள்

2

13

அ) தன்னார்வலர்             ஆ) பெருங்கடல்

2

14.

அ) ஆசை, குற்றம்           ஆ) படை வீரன்

2

15

Ø  ஒளவையார்

Ø  ஒக்கூர் மாசாத்தியார்

Ø  காவற்பெண்டு

Ø  ஆதிமந்தி

Ø  பாரிமகளிர்

Ø  நச்செள்ளையார்

3

16

Ø  தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

Ø  சென்னை மாகாண சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர்.

Ø  இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.

Ø  சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்.

Ø  சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

Ø   தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.

Ø  1930 -அடையாற்றில் அவ்வை இல்லம், 1962 – புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

3

17

அ) வேறுபடுத்துவது                 ஆ) பெற்றிருக்கின்றன

3

18

அ) வானூர்தி செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல்

ஆ) உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால் தான் பெண்களுக்கு விடுதலை பறிபோனது

இ) பொருத்தமான தலைப்புக்கு மதிப்பெண் வழங்கலாம்

3

19.

புத்தகத் திருவிழா

செப் – 18. தஞ்சாவூர்.

தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

3

20

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே*

3

பகுதி – 4 எவையேனும் – இரண்டு  

21

பெண்கல்வி – ஒப்பீடு

முடிவுரை

முன்னுரை

         பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற நூலில் பெண்கல்வி கல்வி முதன்மையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கல்விக்கான கருத்துகள் இன்றைய சூழலுடன் ஒப்பிடுவதை இக்கட்டுரையில் காணலாம்.

பெண்கல்வி - ஒப்பீடு 

Ø  சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழ்நாடு சிறந்து விளங்கியது.

Ø  இடைப்பட்ட காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து.

Ø  சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என கருதினர்.

Ø  அறிவுடைய மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன் பாடியுள்ளார்.

Ø  பெண்கள் உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ ஆண்களும் துணை செய்கிறார்கள்.

Ø  இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள்.

Ø  கல்வியில் சிறந்து விளங்கிய பெண் முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Ø  இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள்.

முடிவுரை

         சமைப்பது பெண்களுக்கே உரியது எனவும், அது அவர்களது கடமை என கருதும் வழக்கம் நாட்டில் நீக்க வேண்டுமெனில் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

4

22

பொருத்தமான விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்குக

4

23

காட்சிக்குப் பொருத்தமான கவிதைக்கு மதிப்பெண் வழங்குக.

4

பகுதி – 5 – எவையேனும் இரண்டு

24

சாதனைப் பெண்கள் குறித்து குறிப்பு சட்டம் இட்டு உரிய பதில் எழுதி

இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

6

25

முன்னுரை

நூலகம்

நூல்கள்

முடிவுரை

குறிப்பு சட்டம் இட்டு உரிய பதில் எழுதி

இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

6

26

அனுப்புதல்

பெறுதல்

விளித்தல், பொருள்

கடிதச் செய்தி

இப்படிக்கு,

நாள்,இடம், உறைமேல் முகவரி

 

6

விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் – வழிகாட்டிக் குழு

www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com



.... இளந்தமிழ் வழிகாட்டி - இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-வினாத்தாள்-3-2025... ....

🔥 PDF பதிவிறக்கம் காத்திருப்பு 🔥

15
வினாடிகள் மீதம்
இளந்தமிழ் வழிகாட்டிகள்
15 விநாடிகள் காத்திருப்பு

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post