10th Public Exam 2026 Tamil – Tentative Answer Key | Download Full Solution PDF

 


 அரசு பொதுத்  தேர்வு - மார்ச்  -2025-26

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக்குறிப்பு

11-03-2026

நேரம் :  3.00 மணி                                                                                மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) செப்பலோசை

1

2.

ஆ) வங்காள,ஆங்கில

1

3.

ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

1

4.

அ) வேற்றுமை உருபு

1

5.

அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது

1

6.

ஈ) செய்தி (1),(3) ஆகியன சரி

1

7.

ஈ) காற்றின் பாடல்

1

8.

ஈ) குழந்தையே வா!

1

9.

) சேர நாடு, சோழ நாடு

1

10.

ஈ) பாடல் ; கேட்டவர்

1

11.

ஈ) எ

1

12 .

ஆ) காசிக்காண்டம்

1

13 .

இ) அதிவீரராம பாண்டியன்

1

14 .

ஈ) கூறுதல்

1

15

) திருந்துற - வருக

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

v  தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர்.

2

17.

·        விருந்தினர் என்போர் யார்?

·        ஒரு நாட்டின் நாட்டு வளம், எதை உருவாக்குகிறது?

( பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

2

18.

Ø  துணிச்சல் : முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கிறது.

Ø  கருணை  : தாகங்கள் தீர்க்கிறது.

1

1

19

சிலம்பு, கிண்கிணி

கால்கள்

அரைஞாண்

இடுப்பு

சுட்டி

நெற்றி

குண்டலம், குழை

காதுகள்

சூழி

தலை

2

20

Ø  பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்

Ø  உணவுக்கானப்  பணத்தில் புத்தகம் வாங்குதல்

2

21.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

 சுற்றமாச் சுற்றும் உலகு

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

சேர்ரகளின் பட்டப் பெயர்களில்கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன்எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்மலையமான்எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

2

23

அ) சுடுதல்

ஆ) சுட்டல்

1

1

24.

அமர்ந்தான்அமர் + த் (ந்) + த் + ஆன்

அமர்பகுதி

த்சந்தி, த்-ந்- ஆனது விகாரம்

த்இறந்த கால இடைநிலை

ஆன்– ஆண்பால் வினைமுற்று விகுதி

1

1

25

கட்டுரையைப் படித்த சுபா.

2

26

அனைத்து புறத்திணைகளில் உள்ள பொதுவான செய்திகளையும் அவற்றுள் சொல்லாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை.

2

27

அ) மகிழ்ச்சி                   ஆ) கதைச் சொல்லி

2

27

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

 அ) குருதி        ஆ) அக்கா

2

28

அ) மலை என்பதற்கு மாலை என எழுதினான்.

ஆ) விடு என்பதற்கு வீடு என எழுதினான்

( பொருத்தமான வேறு பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

பகுதி – 3 – பிரிவு - 1

29

Ø  பல்வேறு துறைகள் வளர மொழிபெயர்ப்பு தேவை.

Ø  ஊடகம், விளம்பரம், திரைப்படங்கள் மூலம் எல்லா மொழி மக்களையும் அடைகின்றன.

Ø  மொழிபெயர்ப்பால் புதிய எண்ணங்கள் பரவுகின்றன.

1

 

1

 

1

30

இடம் :  எனது போராட்டம்” என்ற ம.பொ.சி அவர்களின் நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :

சென்னையை ஆந்திராவின் தலைநகராக மாற்ற முயன்றதை எதிர்த்து, ம.பொ.சி போராடினார்.

விளக்கம் :

சென்னை தமிழர்களின் நகரம் என்பதால், அதை காப்பாற்ற வேண்டும் என்று ம.பொ.சி தைரியமாக குரல் கொடுத்தார்.

1

 

 

1

 

 

1

31

அ) தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.

ஆ) பாய்மரக் கப்பல்

இ) கடுங்காற்று மணலை கொண்டு வந்து சேர்க்கிறது.

1

1

1

பகுதி -3 / பிரிவு - 2

32

v அன்னை மொழியானவள்

v   பாண்டியன் மகள்

v அழகான செந்தமிழானவள்

v   திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி

v   பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

3

33

v  உயிர் பிழைக்கும் வழி அறியேன்

v  உடலின் தன்மை     அறியேன்

v  உணவைத் தேடும் வழி அறியேன்

v  காட்டில் செல்லும் வழி அறியேன்

3

34அ

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

3

34ஆ

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

மார்கழித் திங்கள்

இருபெயரொட்டுப் பண்புத் தொகை

நடைபயிற்சி மேற்கொண்டனர்

வேற்றுமைத் தொகை

செங்காந்தள்

பண்புத் தொகை

அதிகாலை நேரம்

இருபெயரொட்டுப் பண்புத் தொகை

வீடு சென்றேன்

வேற்றுமைத் தொகை

3

36

செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

அணிப் பொருத்தம்

            ‘ இன்மை ‘ என்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை பயின்று வந்துள்ளது.

3

37

சீர்

அசை

வாய்பாடு

அரி-யவற்-றுள்

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

எல்-லாம்

நேர்+ நேர்

தேமா

அரி-தே

நிரை+நேர்

புளிமா

பெரி-யா-ரை

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

பே-ணித்

நேர்+ நேர்

தேமா

தம-ரா

நிரை+ நேர்

புளிமா

கொளல்

நிரை

மலர்

இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி - 4

38

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பொருள்

முடிவுரை

முன்னுரை :-

          இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவியில்  தண்டலை மயில்கள் ஆட எனத் தொடங்கும் உரையைக் காண்போம்.

பொருள் :-

Ø  மயில்கள் அழகுற ஆடுகிறது.

Ø  தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.

Ø  மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.

Ø  குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல உள்ளது.

Ø  அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.

Ø  வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசை போல இருக்கிறது

முடிவுரை :-

·                  இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவியில் தண்டலை மயில்கள் ஆட எனத் தொடங்கும் உரையைக் கண்டோம்.

5

38ஆ

v   ஒழுக்கமே சிறப்பைத் தருவது.

v   ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய் பேணிக் காக்க வேண்டும்.

v   ஒழுக்கமாக வாழ்பவர் மேன்மை அடைவர்.

v   ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாத பழிகளை அடைவர்.

v   உலகத்தோடு ஒத்து வாழாதவர். பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவராகக் கருதப்படுவார்.

5

39அ

இடம்,நாள் ( வலப்புறம் )

விளித்தல்

கடிதப் பகுதி

இப்படிக்கு, ஒப்பம்                                                                             

உறை மேல் முகவரி

5

39ஆ

அனுப்புநர்

பெறுநர்

ஐயா,

பொருள்

இணைப்பு                                                                              

இப்படிக்கு

இடம்                                                       

நாள்

உறை மேல் முகவரி

5

40

அ)

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத   

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ள காட்சி

பூட்டிய பூட்டு கல்லாமை பற்றி என எழுது என்றது

புத்தகம் படிப்பு உன்னை உயர்த்தும் என எழுது என்றது.

5

41

நூலக உறுப்பினர் படிவம்

_______________நீலகிரி ___________மாவட்ட  நூலக ஆணைக்குழு

மைய / கிளை/ஊர்ப்புற நூலகம் _____மைய நூலகம்_________________

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண் :           100                                         உறுப்பினர் எண் :  100

1. பெயர்                                                                       :  புகழேந்தி

2. தந்தை பெயர்                                                         :  மதிவேந்தன்

3. பிறந்த தேதி                                                           :  01-06-2010

4. வயது                                                                      :  15

5. படிப்பு                                                                      :  பத்தாம் வகுப்பு

6. தொலைபேசி எண்                                                :  86XXX - XXXXX

7. முகவரி                                                                 :  7, பூம்பொழில் தெரு, பாரதி

                                                                              நகர், நீலகிரி.

(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் )                                                                 

நான் _______நீலகிரி-மைய______ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய

இத்துடன் காப்புத்தொகை ரூ 100 சந்தா தொகை ரூ 50 ஆக மொத்தம் ரூ._____150______ ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும்

விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.                                                                                                 

  தங்கள் உண்மையுள்ள,

இடம் : நீலகிரி (அ) பாரதி நகர்                                                  புகழேந்தி

நாள் :  11-03-26

திரு / திருமதி / செல்வன் / செல்வி ____ குமார். செ ___ அவர்களை

எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.         

                                                                          பிணைப்பாளர் கையொப்பம்

அலுவலக முத்திரை                                                  ( பதவி மற்றும் அலுவலகம் )

   ( மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்      உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி / நகராட்சி / ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள் )

5

42அ

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற

எழுகின்றான். அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்தகாட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக்கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லாஇடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.          

5

42ஆ

அறம்

நன்மை

பொறுமை

சண்டை, கோபம் குறையும்

பண்புடன் பேசுதல்

நண்பர்கள் அதிகரிப்பார்கள்

மூத்தவர்களை மதித்தல்

நல்ல வழிகாட்டல் கிடைக்கும்

உதவி மனப்பான்மை

அனைவரின் அன்பும் கிடைக்கும்

ஒழுக்கம்

வாழ்க்கையில் உயர்வு பெற முடியும்

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்கு கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும் தொடர்வன நிகழ்த்துக் கலைகள்.

2. தலையில் கரகம் வைத்து ஆடுவது கரகாட்டம். தோளில் காவடி வைத்து ஆடுவது காவடியாட்டம்.

3 .மயிலாட்டம், குதிரையாட்டம், புலியாட்டம்

4. ஒயிலாட்டம்

5. நிகழ்த்துகலைகள் உழைப்பாளிகளின் உணர்வு வெளிப்பாடு; வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி.

5

பகுதி - 5

43அ

குறிப்புச்சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு

Ø  உறவினரை மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

Ø  அமர இடம் கொடுத்து தண்ணீர் தந்தேன்.

விருந்து உபசரிப்பு

Ø  அவர்களுக்காக சிறப்பு உணவுகள் செய்து கொடுத்தேன்.

Ø  அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து கவனித்தேன்.

நகர் வலம்

Ø  உணவுக்குப் பிறகு எங்கள் ஊரின் நல்ல இடங்களை காட்டிச் சென்றேன்.

Ø  ஊரின் சிறப்புகளை விளக்கினேன்.

இரவு விருந்து

Ø  இரவில்  உணவு செய்து விருந்தளித்தேன்.

Ø  அவர்கள் மகிழ்ச்சியாக உணவு உட்கொண்டனர்.

பிரியா விடை

Ø  அவர்கள் செல்லும்போது பேருந்து நிறுத்தம் வரை அழைத்து சென்றேன்.

Ø  அன்புடன் வழியனுப்பினேன்.

8

43ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

காற்று மாசுபாடு

மரங்கள் நடுதல்

பொதுப்போக்குவரத்து

நெகிழி கட்டுபாடு

விழிப்புணர்வு

முடிவுரை

முன்னுரை :  

காற்று இல்லையேல் உயிர் இல்லை. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை காண்போம்.

காற்று மாசுபாடு :

  • மனித செயலால் காற்று மாசடைகிறது.
  • இது ஆரோக்கியத்துக்கும் இயற்கைக்கும் தீங்கு.

மரங்கள் நடுதல் :

  • மரங்கள் ஆக்ஸிஜனை அளிக்கும்.
  • மரம் நடுவது காற்றை தூய்மைப்படுத்தும்.

பொதுப் போக்குவரத்து :

  • தனி வாகனத்தை விட பஸ், ரயில் பயன்படுத்த வேண்டும்.
  • மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்.

நெகிழி கட்டுப்பாடு :

  • நெகிழி எரிப்பது காற்றை மாசுபடுத்தும்.
  • புதை எரிபொருள்களை குறைக்க வேண்டும்.

விழிப்புணர்வு :

  • மக்கள் மாசுபாட்டின் தீமைகளை அறிய வேண்டும்.
  • பள்ளி, ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை :
காற்று தூய்மையாக இருந்தால் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

8

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

காலி இடமும் -குடும்ப விருப்பமும்

முருங்கை நடுதல்

முருங்கை வளர்ச்சி

முருங்கையின் உறவு

பறவைகள்

வீழ்ந்த முருங்கை

முடிவுரை

முன்னுரை :

இயற்கையை நேசிக்கும் குடும்பத்தின் உணர்வை கதை எடுத்துரைக்கிறது.

காலி இடமும் குடும்ப விருப்பமும் :

·        பாட்டி – பசு வளர்க்கலாம்

·        அம்மா – காய்கறி செடி நடலாம்

·        தங்கை – பூச்செடி

·        அப்பா – முருங்கை நடலாம் என்றார்.

முருங்கை நடுதல் :

·        அப்பா முருங்கை நட்டார், அம்மா உதவினார்.

·        முருங்கை குடும்பத்தின் அன்பு மரமாக ஆனது.

முருங்கை வளர்ச்சி :

·        தளிர் விட்டது, பசுமையாக வளர்ந்தது.

·        மரம் அவர்களின் வாழ்க்கையில் இணைந்தது.

முருங்கையின் உறவு :

·        கீரை வாசனை, நிழல், பறவைகள்—all வாழ்க்கையின் பகுதி.

·        அதன் அருகே படித்து எழுதினர்.

பறவைகள் :

·        பறவைகளின் இல்லம் அது.

·        அவற்றின் குரல் இனிமை.

வீழ்ந்த முருங்கை :

·        புயலில் மரம் விழுந்தது.

·        குடும்பம் துயருற்றது.

·        சிறிய கிளை மீண்டும் முளைத்தது.

முடிவுரை :

மரம் உயிர்போல் நேசிக்கப்பட்டது. பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பதே கதையின் பாடம்.

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத்தொடர்

ஒலிக்குறிப்பு

தோணிபடும் பாடு

முடிவுரை

முன்னுரை :

பா. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” கதையில் புயலின் கொடுமை நன்றாக வருணிக்கப்பட்டுள்ளது.

புயல் வருணனை :

·        கொளுத்தும் வெயில்

·        மேகங்கள் கும்மிருட்டு

·        இடி முழக்கம்

·        அலை மலை போல் எழுதல்

அடுக்குத் தொடர் :

·        நடுநடுங்கி, தாவித் தாவி, விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·        சிலுசிலு, மரமரப்பு, ஙொய்ங் புய்ங்

தோணி படும் பாடு :

·        தாவி விழுந்து சுழல்கிறது

·        தடுமாறிச் செல்கிறது

முடிவுரை :

      வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு மூலம் புயலின் கொடுமையும், தோணியின் துயரமும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர் வளர்த்த தமிழ்

சொல்வளம் மிக்கது

வளர்தமிழ்

முடிவுரை

முன்னுரை :
தமிழ் பண்டைய காலத்திலிருந்து சான்றோரால் வளர்க்கப்பட்ட அழகிய மொழியாகும். இனிமையும் செழுமையும் நிறைந்த இந்த மொழி உலக மொழிகளுள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழின் தொன்மை :
தமிழ் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். அதன் தொன்மையும் பெருமையும் பற்றி “என்றுமுள தென்தமிழ்” என்று கம்பர் புகழ்ந்து கூறியுள்ளார்.

சான்றோர் வளர்த்த தமிழ் :
பல சான்றோர்கள் தமிழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகித்துள்ளனர். ஜி.யு.போப் திருக்குறளை உலகம் அறியச் செய்தார். வீரமாமுனிவர் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினார். உ.வே.சாமிநாதர் பல பழைய தமிழ் நூல்களைத் தேடி எடுத்து அச்சிட்டு உலகிற்கு வழங்கினார்.

சொல்வளம் மிக்கது :
தமிழ் செழுமையான சொல்வளம் கொண்ட மொழியாகும். ஒரே பொருளுக்கு பல சொற்கள் உள்ளதால் தமிழின் செம்மை மற்றும் வளம் வெளிப்படுகிறது.

வளர்தமிழ் :
தமிழ் முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) வடிவில் வளர்ந்தது. மூன்று சங்கங்களின் மூலம் தமிழ் இலக்கியம் பெரிதும் வளர்ச்சி பெற்றது.

முடிவுரை :
சான்றோர்களின் அரிய பணியால் தமிழ் இன்று உலகப் புகழ் பெற்ற செம்மொழியாகத் திகழ்கிறது. தமிழ் மொழியை நாம் காப்பாற்றி வளர்த்தல் நம் கடமையாகும்.

8

45ஆ

கலைத்திருவிழா

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

கலைத்திருவிழா நிகழ்விடம்

கலை நிகழ்ச்சிகள்

கவர்ந்த கலைநிகழ்ச்சி

கலைகள் வளர்ப்போம்

முடிவுரை

முன்னுரை :
கலை என்பது நம் ஊர் மக்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் சிறப்பான ஒன்றாகும். கலைகள் மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் சிந்தனையையும் காட்டுகின்றன.

கலைத்திருவிழா நிகழ்விடம் :
அரசு சேலத்தில் கலைத்திருவிழா நடைபெறும் என்று அறிவிப்பு வந்தது. அதன்படி சேலத்தில் உள்ள நேரு கலையரங்கில் இந்த விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களுக்கு அனைத்து அரங்குகளும் எங்கு உள்ளன என்பதைக் காட்டும் வரைபடமும் அமைக்கப்பட்டிருந்தது.

கலை நிகழ்ச்சிகள் :
விழாவில் பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரகாட்டம் மிகவும் அழகாக நடைபெற்றது. அதேபோல் காவடியாட்டமும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பொய்க்கால் குதிரையாட்டத்தில் குதிரை வடிவில் ஆடிய கலைஞர்களின் திறமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் கூத்து அரங்குகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.

கவர்ந்த கலைநிகழ்ச்சி :
சிற்ப அரங்கில் மண், சோப்பு மற்றும் காய்கறி போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் மிகவும் அழகாகவும் பார்ப்பவர்களை கவர்ந்தவையாகவும் இருந்தன.

கலைகள் வளர்ப்போம் :
இவ்வாறான கலைத்திருவிழாக்கள் நமது பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வளர்க்க உதவுகின்றன. எனவே நம் அனைவரும் கலைகளை மதித்து வளர்க்க வேண்டும்.

முடிவுரை :
இந்த கலைத்திருவிழா சூழல் பாதுகாப்பு எல்லோருக்கும் முக்கியம் என்பதை உணர்த்தியது. அதே நேரத்தில் நம் பாரம்பரிய கலைகளை காப்பாற்றி வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தது.

8

விடைக்குறிப்பு ஆக்கம் :

இளந்தமிழ் வழிகாட்டிக் குழு – 8072426391

2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான வழிகாட்டி நூல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள. Whatsapp செய்து,. உங்களுக்கான வழிகாட்டியின் மாதிரிப் பக்கங்களைப் பெறுங்கள்.

www.tamilvithai.com      www.kalvivithaigal.com

click here to get pdf

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post