10th-Tamil-1 mark - Book Inside Questions - Thirukkural - Unit - 5 @2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்

இயல் – 5 / திருக்குறள்

1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

  அருவினையும் மாண்ட தமைச்சு – இக்குறளில் அரிய செயலை செய்பவராக கருதப்படுபவர் – அமைச்சர்

 

2. மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக செய்பவர் – அமைச்சர்

 

3. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

 தீதின்றி வந்த பொருள் – இக்குறளில் தீமை என்பதை குறிக்கும் சீரைக் காண்க. – தீது

 

 

 

4. அருளொரும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

   புல்லார் புரள விடல் – இக்குறளில் புறந்தள்ளக் கூடியப் பொருளாக வள்ளுவர் குறிப்பிடுவது – இரக்கமும் அன்பும் இல்லாமல் வரும் பொருள்

 

5. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

   றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வரும் அணி – உவமை அணி

 

6. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

  எஃகதனிற் கூரிய தில் – இக்குறளில் பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் என வள்ளுவர் குறிப்பிடுவது – பொருள் ஈட்டுதல்

 

7. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

   அழுதகண் ணீரும் அனைத்து – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி – உவமை அணி

 

8. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

   இன்மையே இன்னா தது – இக்குறளில் பயின்று வரும் அணி – சொல்பொருள்

   பின்வருநிலையணி

 

9. இகழ்ந்தென்னா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

   உள்ளுள் உவப்ப துடைத்து – இக்குறளில் மகிழ்ச்சியைக் குறிக்கும் சீரைத் தேர்க – உவப்ப

 

10. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

    பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் -பயின்று வரும் அணி – சொல் பின்வருநிலை அணி

 

11. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன

   ஒப்பாரி யாம்கண்ட தில் – இக்குறளில் இடம் பெற்றுள்ள உவம உருபு – அன்ன

 

12. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

    மேவன செய்தொழுக லான் – இக்குறளில் பயின்று வரும் அணி – வஞ்சபுகழ்ச்சி அணி

 

13. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்

    கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி – உவமை அணி


14. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில்  பின்னரும் பலமுறை வருவது – சொல் பின் வருநிலை அணி

 

15. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது – சொல்பொருள் பின்வரு நிலையணி

 

16. ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது – வஞ்சப் புகழ்ச்சி அணி.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post