🔥 10th Tamil இயல் 1–7 | மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான Ultra Easy 10 வரிகள் நெடுவினா PDF Download

 


இயல் – 1

மிகவும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி

நெடுவினாக்கள்

1️. நாட்டு வளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

நாட்டு வளமும் சொல்வளமும்

சொல்வளம்

முடிவுரை

முன்னுரை :

தமிழ்மொழி ஒவ்வொன்றுக்கும் தனித்த சொற்கள் கொண்டது. பாவாணர், நாட்டு வளமும் சொல்வளமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்கிறார்.

நாட்டு வளமும் சொல்வளமும் :

  • நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது.
  • சொல்வளம் நாட்டு வளத்தை காட்டுகிறது.
  • விளைபொருட்கள் அதிகம் என்றால் சொல்வளமும் பெருகும்.

சொல்வளம் :

  • சம்பா நெல்வகைகள் : ஆவிரம்பூச்சம்பா, குண்டுச்சம்பா.
  • தாள் – நெல், தண்டு – கீரை, கோல் – மிளகாய்.
  • கிளை, இலை, காய் முதலியவற்றுக்கும் தனித்த சொற்கள் உண்டு.

முடிவுரை :
தமிழ் மொழி சொல்வளம் நிறைந்தது. அது நாட்டு வளத்தையும் மக்களின் அறிவையும் காட்டுகிறது.

2️. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை;அறிக!    - கண்ணதாசன்.

மோனை நயம் :

முதல் எழுத்து ஒன்றிவருதல் – விஞன், ருப்படு

எதுகை நயம் :

இரண்டாம் எழுத்து ஒன்றிவருதல் – ருப்படு, ருப்பட

சந்த நயம் :

இசையோடு பாட எளிதாக அமைந்தது.

இயைபு நயம் :

இறுதி ஒலி ஒன்றிவருதல் – தெய்வம், செல்வம்

முரண் நயம் :

முரண்பாடு – ஆக்கல் × அழித்தல்

முடிவுரை :

கவிதையில் பல நயங்கள் இருந்து இனிமையையும் ஆழ்ந்த அர்த்தத்தையும் தருகின்றன.

3️. புயலிலே ஒரு தோணி” கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும் பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

குறிப்புச்சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத்தொடர்

ஒலிக்குறிப்பு

தோணிபடும் பாடு

முடிவுரை

முன்னுரை :

பா. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” கதையில் புயலின் கொடுமை நன்றாக வருணிக்கப்பட்டுள்ளது.

புயல் வருணனை :

·        கொளுத்தும் வெயில்

·        மேகங்கள் கும்மிருட்டு

·        இடி முழக்கம்

·        அலை மலை போல் எழுதல்

அடுக்குத் தொடர் :

·        நடுநடுங்கி, தாவித் தாவி, விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·        சிலுசிலு, மரமரப்பு, ஙொய்ங் புய்ங்

தோணி படும் பாடு :

·        தாவி விழுந்து சுழல்கிறது

·        தடுமாறிச் செல்கிறது

முடிவுரை :
வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு மூலம் புயலின் கொடுமையும், தோணியின் துயரமும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

இயல் – 2

நெடுவினாக்கள்

1️. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

காற்று மாசுபாடு

மரங்கள் நடுதல்

பொதுப்போக்குவரத்து

நெகிழி கட்டுபாடு

விழிப்புணர்வு

முடிவுரை

முன்னுரை :   காற்று இல்லையேல் உயிர் இல்லை. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை காண்போம்.

காற்று மாசுபாடு :

  • மனித செயலால் காற்று மாசடைகிறது.
  • இது ஆரோக்கியத்துக்கும் இயற்கைக்கும் தீங்கு.

மரங்கள் நடுதல் :

  • மரங்கள் ஆக்ஸிஜனை அளிக்கும்.
  • மரம் நடுவது காற்றை தூய்மைப்படுத்தும்.

பொதுப் போக்குவரத்து :

  • தனி வாகனத்தை விட பஸ், ரயில் பயன்படுத்த வேண்டும்.
  • மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்.

நெகிழி கட்டுப்பாடு :

  • நெகிழி எரிப்பது காற்றை மாசுபடுத்தும்.
  • புதை எரிபொருள்களை குறைக்க வேண்டும்.

விழிப்புணர்வு :

  • மக்கள் மாசுபாட்டின் தீமைகளை அறிய வேண்டும்.
  • பள்ளி, ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை :
காற்று தூய்மையாக இருந்தால் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.


2️. பிரும்மம்” கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பை விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

காலி இடமும் -குடும்ப விருப்பமும்

முருங்கை நடுதல்

முருங்கை வளர்ச்சி

முருங்கையின் உறவு

பறவைகள்

வீழ்ந்த முருங்கை

முடிவுரை

முன்னுரை :

இயற்கையை நேசிக்கும் குடும்பத்தின் உணர்வை கதை எடுத்துரைக்கிறது.

காலி இடமும் குடும்ப விருப்பமும் :

·        பாட்டி – பசு வளர்க்கலாம்

·        அம்மா – காய்கறி செடி நடலாம்

·        தங்கை – பூச்செடி

·        அப்பா – முருங்கை நடலாம் என்றார்.

முருங்கை நடுதல் :

·        அப்பா முருங்கை நட்டார், அம்மா உதவினார்.

·        முருங்கை குடும்பத்தின் அன்பு மரமாக ஆனது.

முருங்கை வளர்ச்சி :

·        தளிர் விட்டது, பசுமையாக வளர்ந்தது.

·        மரம் அவர்களின் வாழ்க்கையில் இணைந்தது.

முருங்கையின் உறவு :

·        கீரை வாசனை, நிழல், பறவைகள்—all வாழ்க்கையின் பகுதி.

·        அதன் அருகே படித்து எழுதினர்.

பறவைகள் :

·        பறவைகளின் இல்லம் அது.

·        அவற்றின் குரல் இனிமை.

வீழ்ந்த முருங்கை :

·        புயலில் மரம் விழுந்தது.

·        குடும்பம் துயருற்றது.

·        சிறிய கிளை மீண்டும் முளைத்தது.

முடிவுரை :

மரம் உயிர்போல் நேசிக்கப்பட்டது. பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பதே கதையின் பாடம்.


3️. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

         வளரும் விழி வண்ணமேவந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

         விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

         நடந்த இளந்தென்றலேவளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

         பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

காற்றைப் பாராட்டுதல் :

·        பாதி மலர் போல் மெல்லிய காற்று.

·        காலை நேர குளிர் காற்று.

·        இளந்தென்றல் தமிழ்போல் இனிமை.

மோனை நயம் :

·        முதல் எழுத்து ஒன்றி வருதல்.
உதா: லர்ந்தும் – லராத – ளரும் – ண்ணமே

எதுகை நயம் :

·        இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல்.
உதா: ர்ந்தும் – மராத

சந்த நயம் :

·        இசையோடு பாட எளிதாக அமைந்தது.

இயைபு நயம் :

·        இறுதி ஒலி ஒன்றி வருதல்.
உதா: வண்ணமே – அன்னமே

முரண் நயம் :

·        முரண்பாடு.
மலர்ந்தும் × மலராத, விடிந்தும் × விடியாத

பொருள் நயம் :

·        காற்றைச் சிறப்பித்தும் தமிழை உயர்த்தியும் பாடல் அமைந்தது.

முடிவுரை :

இப்பாடல் காற்றின் இனிமையையும், தமிழின் அழகையும் கவிதை நயத்துடன் எடுத்துரைக்கிறது.

 

இயல் – 3

நெடுவினாக்கள்

1. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

விருந்தினர்

தமிழர் மரபு

தனித்து உண்ணாமை

அல்லிலும் விருந்து

இன்மையிலும் விருந்து

விருந்தை எதிர்கொள்ளுதல்

முடிவுரை

முன்னுரை

சங்க காலத் தமிழர்கள் விருந்தினரை அன்புடன் வரவேற்ற நல்ல மக்கள். அவர்களின் விருந்தோம்பல் இக்கட்டுரையில் காணலாம்.

விருந்தினர்

Ø  விருந்தினர் என்றால் புதிதாக வரும் மனிதர்கள்.

Ø  அவர்களை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

தமிழர் மரபு

Ø  தமிழர்கள் இல்லறம் நடத்துவதில் விருந்தை முக்கியமாகக் கருதினர்.

Ø  விருந்தினரைப் போற்ற முடியாவிட்டால் வருத்தப்பட்டனர்.

தனித்து உண்ணாமை

Ø  தமிழர்கள் தனியாக உண்பது தவறு என்று நினைத்தனர்.

Ø  கிடைத்த உணவை பிறருக்கும் பகிர்ந்து கொடுத்தனர்.

அல்லிலும் விருந்து

Ø  இரவு நேரம் வந்தாலும் விருந்தினரை வரவேற்று உணவு கொடுத்தனர்.

இன்மையிலும் விருந்து

Ø  வீட்டில் உணவு இல்லை என்றாலும் விருந்து அளித்தனர்.

Ø  தானியம், பொருள் இல்லாதபோதும் விருந்து செய்தனர்.

விருந்தை எதிர்கொள்ளுதல்

இரவில் கதவை மூடுவதற்கு முன் “உணவு தேவையா?” என்று கேட்டுப் பார்த்தனர்.

முடிவுரை

சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் மிக உயர்ந்தது. இன்று அது குறைந்திருந்தாலும், பழைய தமிழர் பண்பு போற்றத்தக்கது.


2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்

கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதிக் கொண்டு விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை

பசி கொண்டவருக்கு உணவளிப்பது நல்ல பண்பு. கோபல்லபுரத்து கதையில் அன்னமய்யா இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர்.

தேசாந்திரி

Ø  வயலில் சோர்வாக வந்த ஒரு ஆள் அன்னமய்யாவுடன் வந்தான்.

Ø  அவன் பசியும் தாகமும் கொண்டிருந்தான்.

Ø  தண்ணீர் கொடுத்து மரநிழலில் அமர வைத்தார்கள்.

கருணை அன்னமய்யா

Ø  அன்னமய்யா அவன் பசியைக் கண்டு பரிதாபப்பட்டார்.

Ø   கம்மஞ் சோறும் துவையலும் அளித்து உணவளித்தார்.

Ø  அவன் அரைச் சோறு உண்டு நிம்மதி பெற்றான்.

முடிவுரை

அன்னமய்யா தனது பெயருக்கு ஏற்றபடி அன்பும் கருணையும் கொண்டவர். பசி கொண்டவருக்கு உதவியதால் அவரது செயல் போற்றத்தக்கது.


3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

குறிப்புச்சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு

Ø  உறவினரை மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

Ø  அமர இடம் கொடுத்து தண்ணீர் தந்தேன்.

விருந்து உபசரிப்பு

Ø  அவர்களுக்காக சிறப்பு உணவுகள் செய்து கொடுத்தேன்.

Ø  அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து கவனித்தேன்.

நகர் வலம்

Ø  உணவுக்குப் பிறகு எங்கள் ஊரின் நல்ல இடங்களை காட்டிச் சென்றேன்.

Ø  ஊரின் சிறப்புகளை விளக்கினேன்.

இரவு விருந்து

Ø  இரவில்  உணவு செய்து விருந்தளித்தேன்.

Ø  அவர்கள் மகிழ்ச்சியாக உணவு உட்கொண்டனர்.

பிரியா விடை

Ø  அவர்கள் செல்லும்போது பேருந்து நிறுத்தம் வரை அழைத்து சென்றேன்.

Ø  அன்புடன் வழியனுப்பினேன்.

இயல் – 4

நெடுவினாக்கள்

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விளக்குக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை

இடைக்காடனை மன்னன் இகழ்ந்து பேசியதால் ஏற்பட்ட நிகழ்வை இங்கு காண்கிறோம்.

மன்னனும் இடைக்காடனும்

Ø  குலேசப் பாண்டியன் முன் பாடிய இடைக்காடனின் பாடலை மன்னன் இகழ்ந்தான்.

இறைவனிடம் முறையிடல்

Ø  என்னை அல்ல; உன்னை இகழ்ந்தான்” என இடைக்காடன் இறைவனிடம் முறையிட்டான்.

இறைவன் நீங்குதல்

Ø  புலவரின் துயரை உணர்ந்த இறைவன் கோயிலை விட்டு வையை ஆற்றின் தென்புறக் கோயிலுக்கு நீங்கினான்.

மன்னன் முறையிடல்

Ø இறைவன் நீங்கியதை உணர்ந்த மன்னன் தன் தவறை ஒப்புக்கொண்டு புலவரிடம் மன்னிப்பு கேட்டான்.

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

Ø  இடைக்காடனைப் பேணி கௌரவித்து, இறைவனின் மனத்தை மகிழச் செய்தான்.

முடிவுரை

Ø  புலவரின் குரலை இறைவன் கேட்டு செயல் படுத்தார்.

Ø  இதன் மூலம் புலவரின் பெருமை சமூகத்துக்குச் செயலால் விளங்கியது.


2. கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்-மேல் படிப்பு

முடிவுரை

முன்னுரை

புத்தகம் பறிக்கப்பட்ட அவமானம் மேரியின் வாழ்க்கையில் கல்வி தீபம் ஏற்றியது.

மேரி

Ø  சாம்–பாட்சி மகளான மேரி ஏழை குடும்பத்தில் வாழ்ந்தாள்.

அவமானம்

Ø  பென் வில்ஸன் வீட்டில் “உனக்குப் படிக்கத் தெரியாது” என்று இகழப்பட்டு மனம் உடைந்தாள்.

புதிய நம்பிக்கை

Ø  மிஸ் வில்ஸன் ஊக்கமளித்ததால் மேரியில் கல்வி கற்கும் ஆசை அதிகரித்தது.

கல்வி

Ø  ஐந்து மைல் நடந்தே பள்ளிக்குச் சென்று ஆர்வத்துடன் படித்தாள்.

Ø  பட்டமளிப்பு விழாவில் “இவர் படிக்கவும் எழுதவும் கூடியவர்” எனப் பாராட்டப்பட்டது.

உதவிக்கரம் – மேல்படிப்பு

Ø  ஒருவர் அனுப்பிய பண உதவியால் மேல்படிப்பிற்குச் செல வாய்ப்பு கிடைத்தது.

Ø  கிராமமெங்கும் அவளைக்கொண்டு பெருமைப்பட்டனர்.

முடிவுரை

Ø  மேரியின் சாதனை கல்வியின் வலிமையை நிரூபிக்கிறது.

Ø  கல்வி வாழ்க்கையை உயர்த்தும் என்பதற்கு மேரி சிறந்த எடுத்துக்காட்டு.


3. தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை

         மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

குறிப்புச்சட்டம்

தமிழின் இலக்கிய வளம்

கல்வி மொழி

பிறமொழி இலக்கியங்கள்

அறிவியல் கருத்துகள்

பிற துறைக் கருத்துகள்

தமிழுக்குச் செழுமை

முடிவுரை

தமிழின் இலக்கிய வளம்

Ø  தமிழின் இலக்கியப் பழமையை வளர்க்க மொழிபெயர்ப்பு முக்கிய பங்காற்றுகிறது.

கல்வி மொழி

Ø  மொழிபெயர்ப்பு மூலம் உலகறிவு தமிழ்க்கல்வியில் எளிதாகச் சேர்க்கப்படுகிறது.

பிறமொழி இலக்கியங்கள்

Ø  பிறமொழி நூல்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுவதால் இலக்கிய வளம் செழிக்கிறது.

Ø  தாகூரின் “கீதாஞ்சலி” மொழிபெயர்ப்பு உலகப் புகழ் பெற்றது இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துகள்

Ø  அறிவியல் சொற்கள் தமிழில் உருவாக மொழிபெயர்ப்பு பெரும் உதவி செய்கிறது.

Ø  ‘Tele’ என்ற ஆங்கிலச் சொல் ‘தொலை’ என மொழிமாற்றம் செய்யப்பட்டு புதிய தமிழ்ச்சொற்கள் உருவானது.

பிற துறைக் கருத்துகள்

Ø  மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, சமூக அறம் என பல துறைகளும் மொழிமாற்றத்தால் வளர்ந்தன.

தமிழுக்குச் செழுமை

Ø  பிற மொழிச் செல்வங்கள் தமிழில் கலந்து அதன் செழுமையை அதிகரிக்கின்றன.

Ø  தமிழின் இனிமையை உலக அளவில் பரப்ப மொழிபெயர்ப்பு பாலமாக உள்ளது.

முடிவுரை

Ø  தமிழை உலகளாவிய மேடைக்கு கொண்டு செல்ல மொழிபெயர்ப்புக் கலை முக்கிய தூணாக திகழ்கிறது.

இயல் – 5

நெடுவினாக்கள்

1. போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

போராட்டக் கலைஞர்

பேச்சுக் கலைஞர்

நாடகக் கலைஞர்

திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்

முடிவுரை

முன்னுரை

Ø  பல்துறை திறமையால் விளங்கிய கலைஞரின் பன்முக ஆற்றலை இக்கட்டுரை விளக்குகிறது.

போராட்டக் கலைஞர்

Ø  பள்ளி நாடிலேயே இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பேச்சுக் கலைஞர்

Ø  மேடைப் பேச்சில் தேர்ந்தவர்; “நட்பு” என்ற தலைப்பில் ஆற்றிய பேச்சு பலரையும் கவர்ந்தது.

நாடகக் கலைஞர்

Ø  பழநியப்பன்” என்ற முதல் நாடகத்தை 1944 இல் எழுதி மேடையேற்றினார்.

Ø  தூக்குமேடை” நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக ‘கலைஞர்’ பட்டம் பெற்றார்.

திரைக் கலைஞர்

Ø  ராஜகுமாரி” படத்தில் வசன எழுத்தாளராக அறிமுகமானார்.

Ø  பூம்புகார், நாடோடி, மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு வசனம், கதை எழுதியார்.

இயற்றமிழ்க் கலைஞர்

Ø  நளாயினி, சந்தனக் கிண்ணம் போன்ற சிறுகதைகள்; பொன்னர் சங்கர் போன்ற புதினங்கள் எழுதியவர்.

முடிவுரை

Ø  அரசியல், கலை, பேச்சு என பல துறைகளில் திறமையைக் காட்டி வளர்ந்தவர் கலைஞர்.

Ø  பன்முக வித்தகனாக மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.


2. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி….. தண்டலை மயில்கள் ஆட…....  இவ்வுரையைத் தொடர்க.

முன்னுரை

இயற்கையை கலைநிகழ்ச்சி போலச் சித்தரிக்கும் கம்பனின் சந்தக் கவிதையைப் பார்ப்போம்.

பொருள்

Ø  மயில்கள்  ஆடி அழகைப் பறைசாற்றுகின்றன.

Ø  தாமரைகள் விளக்கைப் போல விரிகின்றன.

Ø  மேகஇடி மத்தளம் போன்ற ஒலியை எழுப்புகிறது.

Ø  குவளை மலர்கள்  கண்களைப் போல் தோன்றுகிறது.

Ø  நீரலைகள் திரைச்சீலை போல் விரிகின்றன.

Ø  வண்டுகளின் ஓசை மகர யாழின் இசையைப் போல் கேட்கிறது.

முடிவுரை

Ø  இயற்கையை மேடையாகவும், அதன் அழகை நடனமாகவும் காட்டியவர் கம்பன்.

Ø  சந்தக் கவிதையில் கம்பனின் கற்பனை தனித்தன்மை வெளிப்படுகிறது.


3. பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டு கதையைச் சுருக்கி எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அனுமார்

அனுமாரின் நெருப்பாட்டம்

அழகுவின் உதவி

அழகுவின் ஆட்டம்

அனுமாரின் மகிழ்ச்சி

முடிவுரை

முன்னுரை

கலைஞன் தனது கலையைத் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் வாரிசை காணும் மகிழ்ச்சி ‘பாய்ச்சல்’ கதையின் மையம்.

அனுமார்

Ø  அனுமார் மின்னல் போல பாய்ந்து ஆடுகின்ற திறமையான கலைஞர்.

அனுமாரின் நெருப்பாட்டம்

Ø  வாலில் நெருப்புடன் பெருங்குரல் எழுப்பி ஆடுவதைக் கண்டதும் குழந்தைகள் ஆச்சரியப்பட்டனர்.

அழகுவின் உதவி

Ø  அனுமார் வாலை அழகிடம் வைக்கச் சொல்லி சென்றார்.

Ø  அழகு அதை அக்கறையுடன் தூக்கிச் சென்றான்.

அழகுவின் ஆட்டம்

Ø  அனுமாரின் ஆடை, சலங்கை போட்டுக் கொண்டு அவன் போல் ஆடத் தொடங்கினான்.

அனுமாரின் மகிழ்ச்சி

Ø  உடனே கற்றுக்கொண்டாயே!” என்று அனுமார் பெருமையுடன் பாராட்டினார்.

Ø  அழகுவின் ஆட்டத்தில் தன்னுடைய வாரிசை கண்ட சந்தோஷம் அளவற்றது.

முடிவுரை

Ø  திறமையைப் பின்பற்ற ஒரு நல்ல வாரிசு கிடைப்பதே கலைஞனின் பெருமை.

Ø  இதை அழகு மற்றும் அனுமார் உறவு அழகாக வெளிப்படுத்துகிறது.

இயல் – 6

நெடுவினாக்கள்

1. நாட்டு விழாக்கள்விடுதலைப் போராட்ட வரலாறுநாட்டின் முன்னேற்றத்தில்

மாணவர்பங்குகுறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்மாணவப் பருவமும் நாட்டுப்

பற்றும்என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

நாட்டு விழாக்கள்

விடுதலைப் போராட்ட வரலாறு

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

முடிவுரை

முன்னுரை

·        மாணவப் பருவம் நாட்டை நேசிக்க கற்றுக் கொள்ளும் முக்கிய காலம்.

நாட்டு விழாக்கள்

·        சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்கள் ஒற்றுமையை உணர்த்தும்.

·        இவ்விழாக்களில் பங்கேற்பது நாட்டுப்பற்றை வளர்க்கும்.

விடுதலைப் போராட்ட வரலாறு

·        உப்புச் சத்தியாகிரகமும், வெள்ளையனே வெளியேறு போராட்டமும் நமக்கு சுதந்திரம் தந்தவை.

·        இப்போராட்டங்களை நினைவு கூறுவது தேசிய மரியாதையை உயர்த்தும்.

மாணவர்களின் பங்கு

·        கல்வியோடு NSS, NCC, சாரணர் போன்ற இயக்கங்களில் பங்கேற்க வேண்டும்.

·        நாட்டின் வளர்ச்சிக்கு ஒழுக்கம், பொறுப்பு உணர்ச்சி அவசியம்.

முடிவுரை

·        மாணவப் பருவமே நாட்டைப் பணிய செய்யத் தயாராகும் அடிப்படை காலம்.

2. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்

   அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:-

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

முடிவுரை

முன்னுரை

·        பழங்கால வணிகமும் இக்கால வணிக முறையும் வேறுபாடுகள் கொண்டவை.

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

நேரடியான விற்பனை இல்லை

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

தரம் குறைவு,விலை அதிகம்

இடைத்தரகர்கள் இல்லை

இடைத்தரகர்கள் உண்டு

உற்பத்தியாளர் ,வாடிக்கையாளர் நேரடித் தொடர்பு

நேரடி தொடர்பு இல்லை

முடிவுரை

·        பழங்கால வணிகம் எளிமை; இன்று வசதி அதிகம் ஆனால் செலவு கூடுதல்.

3. எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,

   சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

எம்.எஸ்.சுப்புலட்சுமி

பால சரஸ்வதி

ராஜம் கிருஷ்ணன்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

சின்னப்பிள்ளை

முடிவுரை

முன்னுரை

சமூக முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றிய பெண்மணிகளைப் பார்க்கலாம்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

·        ஐ.நா அவையில் பாடிய இசை மேதை.

·        செவ்வியல் இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

பால சரஸ்வதி

·        பரதநாட்டியத்தை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றவர்.

·        கலைக்கு சர்வதேச மரியாதை பெற்று தந்தார்.

ராஜம் கிருஷ்ணன்

·        தொழிலாளர்கள், மீனவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி எழுதிய சமூகவாசகர்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

·        உழுபவருக்கே நிலம் என்ற இயக்கத்தில் பணியாற்றியவர்.

·        விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

சின்னப்பிள்ளை

·        பெண்கள் குழு உருவாக்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்தினார்.

·        சுனாமி சமயத்தில் மக்களை மீட்டவர்.

முடிவுரை

இவர்கள் அனைவரும் சமூக உயர்விற்காக வாழ்ந்து செயல்பட்ட முன்னோடிகள்.

4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                                                      நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்பு

இதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின்

நன்றியுரை.

முன்னுரை

·        எங்கள் பள்ளியில் மகளிர் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வின் தொடக்கம்

·        மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

·        தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு

·        அனைவரையும் அன்புடன் வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை

·        மகளிரின் திறமைகள், அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.

·        உரை அனைவருக்கும் ஊக்கமளித்தது.

ஆசிரியர் வாழ்த்துரை

·        விருந்தினரின் உரையைப் பாராட்டி, மாணவிகள் முன்னேற வேண்டுமென கூறினார்.

மாணவத் தலைவர் நன்றியுரை

·        விருந்தினர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முடிவு

·        உறுதிமொழி எடுத்து, நாட்டுப்பண் பாடி விழா நிறைவு பெற்றது.

இயல் – 7

நெடுவினாக்கள்

1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

கருணையன் துயரம்

தாயை இழந்த வலி

கருணையன் அறியாதவை

முடிவுரை

முன்னுரை

·        தாயை இழந்த துயரத்தை வீரமாமுனிவர் மென்மையான உவமைகளால் கூறுகிறார்.

கருணையன் துயரம்

·        தன் தாயின் உடல் மீது மலர் வைக்கிறான்.

·        பூமித்தாயே என் தாயை பாதுகாப்பாயாக என வேண்டுகிறான்.

தாயை இழந்த வலி

·        அம்பு பட்ட வலியைப்போல் துன்பம்.

·        தன்னை  விட்டுச் சென்றார் என்கிற வேதனை.

கருணையன் அறியாதவை

·        பசிக்கான வழி தெரியாது என்பதை வருந்துகிறான்.

·        உணவு, வாழ்வின் வழி, நடப்பது—எதுவும் தெரியாது என்கிறான்.

·        இயற்கையே வருந்துகிறது.

முடிவுரை

·        தாயின் இழப்பு பெரும் துயரம்; வீரமாமுனிவர் இதை மென்மையாக கூறியுள்ளார்.

2. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

திருமந்திரம்

திருகோட்டியூர் திருக்கோவில்

திருமந்திரம் பகிர்தல்

பூரணரிடம் விளக்கம்

முடிவுரை

முன்னுரை

·        இராமானுசர் தன்னை விட மக்களின் நலனை முதலில் நினைத்தவர்.

திருமந்திரம்

·        கூரேசர், முதலியாண்டாருடன் திருமந்திரம் பெறுகிறார்.

·        பூரணர், இதை யாருக்கும் சொல்லக்கூடாது என எச்சரிக்கிறார்.

திருகோட்டியூர் திருக்கோவில்

·        திருமந்திரம் மக்களுக்கு உதவும் என எண்ணுகிறார்.

·        கோவில் மதில்மேல் ஏறி கூறத் தயாராகிறார்.

திருமந்திரம் பகிர்தல்

·        எல்லோருக்கும் பிறவிப்பிணியை நீக்குகிறது என அறிவிக்கிறார்.

·        மக்களுக்கு திறந்தவெளியில் திருமந்திரத்தை சொல்லிறார்.

பூரணரிடம் விளக்கம்

·        நரகம் எனக்கு வரட்டும்; ஆனால் மக்கள் நலமுடன் வாழட்டும்” என்கிறார்.

·        அனைவருக்கும் நன்மை செய்யவே விரும்பினார்.

முடிவுரை

·        இராமானுசரின் தன்னலமற்ற செயல் மனிதர்க்கு முன்மாதிரியாக உள்ளது.

3.பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப்

பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம்

எழுதுக.                                                                                                      சேலம்,

03-03-2025.

அன்புள்ள மாமாவுக்கு,

          நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். பள்ளித் திடலில் கிடைத்த பணப் பையை உரியவரிடம் ஒப்படைத்தேன். அதற்கு, அடுத்த நாள் பள்ளியில் என்னை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினர். அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                                                            நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .


உறைமேல் முகவரி;

பெறுதல்

          திரு.இரா.இளங்கோ,

          100,பாரதி தெரு,

          நாமக்கல்.

4. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

  மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்

கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக்

கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத்

தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன்

மகிழ்ச்சி.  

இடம் : பள்ளி – வகுப்பறை
பங்கேற்பாளர்கள் : தமிழாசிரியர், வளர்தர்ஷினி, ரித்திஷ்கா, கனிஷ்கா


வளர்தர்ஷினி : ஐயா, நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று  

                       சொல்ல வந்தீர்கள். இன்று சொன்னால் நன்றாக இருக்கும்.

தமிழாசிரியர் : சரி. மூன்று உதாரணங்களுடன் சொல்கிறேன்.

னிஷ்கா    : கேட்கிறோம் ஐயா.

தமிழாசிரியர் :

  • மாணவர்கள் கொக்கைப் போல பொறுமையாக வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.
  • கோழி குப்பையில் இருந்தாலும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வது போல, நாம் நல்லதை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
  • உப்பு போல, வெளித்தோற்றத்தை விட மனிதரின் குணநலன்களை உணர்ந்து பழக வேண்டும்.

மாணவிகள் : அருமை ஐயா! இனிமேல் இதையே பின்பற்றுகிறோம். நன்றி ஐயா.

_______________________________________________________________________

 

மேலும் பல கற்றல் வளங்களுக்கு……

www.tamilvithai.com                                                                           www.kalvivithaigal.com

 


📥 10th Tamil – இயல் 1 முதல் இயல் 7 நெடுவினா- இளந்தமிழ் - PDF Download

🔒 Download button 15 விநாடிகள் முடிந்த பின் மட்டும் தெரியும்.

⏳ Wait : 15 seconds

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post