பத்தாம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வு - 2024
தமிழ்
செங்கல்பட்டு – அரையாண்டுத் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
செங்கல்பட்டு மாவட்டம்
நாகப்பட்டிணம்
வேலூர்
காஞ்சிபுரம்
( நான்கு மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் )
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
ஆ) மணிவகை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
ஈ) இலா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
அ) திருப்பதியும்,திருத்தணியும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஆ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
ஈ) அங்கு வறுமை இல்லாததால் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
அ) கருணையன், எலிசபெத்துக்காக |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
ஈ) அறியா வினா, சுட்டு விடை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
ஆ) காஞ்சி திணை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
இ) மரபு வழுவமைதி |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
ஆ) கூற்றி 1 மற்றும் 2 சரி |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
11.
|
ஈ) கால் உடை – காலால் உடைத்தல் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
12
. |
அ) நீதி வெண்பா |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
13
. |
ஆ) அருளை, அறிவை |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
14
. |
இ) அருமை + துணையாய் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
15
|
ஆ) கல்வி |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16 |
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
Ø வருக, வணக்கம். Ø வாருங்கள். Ø அமருங்கள், நலமா? Ø
நீர் அருந்துங்கள். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
Ø
அறம் கூறும் மன்றங்கள். Ø
துலாக்கோல் போல்
நடுநிலையானது. Ø
மதுரையில் மதுரைக்காஞ்சி
அவையம். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே
என நோயாளி மருத்துவரை நேசிப்பார். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20 |
தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
21. |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
பிரிவு
– 2 – பிரிவு - 2 |
|
||||||||||||||||||||||||||||||||||||||
22 |
v வெண்பா – செப்பலோசை v ஆசிரியப்பா – அகவலோசை v கலிப்பா - துள்ளலோசை v வஞ்சிப்பா – தூங்கலோசை |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
|
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
24. |
சிறு என்பதற்கு சீறு என எழுதினான். ( வேறு விடை பொருத்தமாக
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
25 |
அ)
திரைக்கதை. ஆ) நாட்டுப்புற இலக்கியம் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26 |
‘ எதற்காக எழுதுகிறேன்?’
என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால் நான் கண்டிக்கப்படவும்,திருத்தப்படவும்
உட்பட்டிருக்கிறேன், |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
அ)
முப்பால் – அறம், பொருள்,இன்பம் ஆ)
ஐந்திணை – குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28 |
அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன் அமர் – பகுதி த்(ந்) –
சந்தி ந் – ஆனது விகாரம் த் – இறந்த கால இடைநிலை ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
Ø ஓரளவு மேம்படுத்துகின்றன. Ø மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது. Ø மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை. Ø மனிதன் இயந்திரத் தனமான வாழ்வை வாழ்கின்றான். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
30 |
அ)
583 ஆ) கூத்தராற்றுப்படை இ)
மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால்
இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
31 |
·
மொழி பெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம்
ஏற்படுகிறது. ·
பிற இனத்தவரின் பண்பாடு, நாகரீகம். பழக்க வழக்கம் போன்றவற்றை
அறிய முடிகிறது. ·
பிற மொழி இலக்கிய அறிவு கிடைக்கிறது. ·
கருத்துப் பகிர்வை தருகிறது. ·
ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும்
வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
Ø
அன்னை மொழியானவள். Ø
அழகான செந்தமிழானவள். Ø
பழமைக்கு பழமையாய்
தோன்றிய நறுங்கனி. Ø
பாண்டியன் மகள். Ø
திருக்குறளின் பெருமைக்கு
உரியவள். Ø
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும்
கொண்டவள் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33
|
இரண்டாம் இராச இராச சோழனது மெய்க்கீர்த்தியானது
நாட்டின் வளத்தையும், ஆட்சிச் சிறப்பையும் ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது. |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34அ |
நவமணி வடக்க யில்போல் நல்லறப் படலைப் பூட்டும் தவமணி மார்பன்
சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத் துவமணி மரங்கள் தோறும் துணர்அணிச் சுனைகள் தோறும் உவமணி கானம்கொல் என்று ஒலித்து
அழுவ போன்றே |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34ஆ |
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல்
முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில்
பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும்
வழிபடும் பண்பே -
அதிவீரராம பாண்டியர் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
Øவிடை : சுட்டுவிடை, மறைவிடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை. சுட்டு விடை : சுட்டிக் கூறும் விடை . எ.கா: பள்ளி எந்தப் பக்கம் உள்ளது? என்ற வினாவிற்கு, “ இந்தப் பக்கம் உள்ளது” எனக் கூறுவது. மறை விடை : மறுத்து கூறும் விடை எ.கா: கடைக்குப் போவாயா? என்ற வினாவிற்கு, “போகமாட்டேன்” என மறுத்துக் கூறல். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36 |
அணி விளக்கம்: சொல்லையும், பொருளையும் வரிசையாக
நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும். எ.கா அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது அணிப் பொருத்தம் :
இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆகும். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
37
|
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38அ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு
இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். மன்னனும் இடைக்காடனும் ·
மன்னன் குசேலப்
பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார். ·
மன்னன் அதனை பொருட்படுத்தாமல் இகழ்ந்தார். ·
புலவன் அங்கிருந்து வெளியேறினார். இறைவனிடம் முறையிடல் ·
இடைக்காடன் இறைவனிடம்
முறையிடல். ·
மன்னன் தன்னை
இகழவில்லை. ·
இறைவனான உன்னை
இகழ்ந்தான். இறைவன் நீங்குதல் ·
இறைவன் இதனைக் கண்டு
கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார். ·
வையை ஆற்றின் தென்
பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார். மன்னன் முறையிடல் : ·
மன்னன் இறைவன் நீங்கியதைக்
கண்டு வருத்தம் அடைந்தான். ·
இடைக்காடன் பாடலை
இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள
வேண்டினான். புலவனுக்குச் சிறப்பு செய்தல் ·
மன்னன் இடைக்காடனாரிடம்
தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல். ·
இறைவன் சொல் கேட்டு
இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான். முடிவுரை : மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்காடனார்
புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார், |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
38ஆ |
Ø பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக. Ø கருணையன் அன்னை உடல் மீது மலரையும், கண்ணீரையும் பொழிந்தான் Ø கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர் போல உள்ளது. Ø அம்பினால் உண்டான வலி போல் உள்ளது. Ø கருணையனைத் தவிக்க விட்டுச் சென்றார். Ø பசிக்கான வழி தெரியாது. Ø இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது. |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
39அ |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001. ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள் நாளிதழில்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப்
பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. கட்டுரை தங்கள்உண்மையுள்ள, இடம் : சேலம் அ அ அ அ அ. நாள் : 04-03-2024 உறை மேல்
முகவரி: பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001 |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39ஆ |
சேலம்
03-03-2024 அன்புள்ள மாமாவுக்கு, நான்
நலம். நீங்கள் நலமா? என
அறிய ஆவல். சென்ற வாரம் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம்
ஒப்படைத்தேன். அதற்குப் பாராட்டு பெற்றேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாக இதை கருதுகிறேன். வீட்டில்
அனைவரிடமும் இதை கூறவும். நன்றி,வணக்கம். இப்படிக்கு, உறைமேல் முகவரி;
உங்கள் அன்புள்ள, பெறுதல் அ அ அ அ அ. திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, நாமக்கல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின்
முழு மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42அ |
1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை
அனைவருக்கும் கூறுதல். 2. கல்வெட்டுகளின் மதிப்பைக் குறைக்கும்படி
எதுவும் கூற, அனுமதிக்காமை. 3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம்
அடையச் செய்தல். 4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும்
முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி
நாட்டுப்பற்றை வளர்க்கலாம்,
என்பதை உணர்த்துதல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42ஆ |
அ) ஒருவரிடம் அவர்
புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய்
மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா ஆ) மொழி என்பது கலாச்சாரத்தின்
வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும்
மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||||||||||||||
43அ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக்கலைஞர்,
இயற்றமிழ் கலைஞர் என கலைஞரின் பன்முகத்தன்மையை
நாம் இக்கட்டுரையில் காண்போம். போராட்டக் கலைஞர் : Ø பள்ளி வயதிலியே போராடியவர் கலைஞர். Ø இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர்
வீதிகளில் போராடியவர். Ø
“ வாருங்கள் எல்லோரும்
போருக்குச் சென்றிடுவோம் “ எனப் பாடலைப் பாடிக்கொண்டே
ஊர்வலம் நடத்தினார். பேச்சுக் கலைஞர் : Ø தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின்
பேச்சாற்றல் கலைஞரைக் கவர்ந்தது. Ø மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர். “ நட்பு “
என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர் நாடகக் கலைஞர் : Ø 1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி
அரங்கேற்றினார். Ø சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ,
தூக்கு மேடை முதலிய நாடகங்களை எழுதியுள்ளார். Ø தூக்குமேடை நாடகத்தில் மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு
பட்டம் பெற்றார். திரைக் கலைஞர் : Ø
“ ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார். Ø
மருதநாட்டு இளவரசி,
நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். இயற்றமிழ் கலைஞர்: Ø
நளாயினி, சித்தார்த்தன்
சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய சிறுகதைகள் எழுதியுள்ளார். Ø
ரோமாபுரி பாண்டியன்,
பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். Ø
தொல்காப்பிய பூங்கா,
குறளோவியம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதி தம் இயற்றமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். முடிவுரை : அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம்,
கவியரங்கம் என பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக
விளங்கினார் கலைஞர். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
43ஆ |
குறிப்புச் சட்டம்
வரவேற்பு : ·
என் இல்லத்திற்கு
வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன். ·
அவர்கள்
அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன். ·
வந்தவர்களுக்கு
முதலில் நீர் அருந்தத் தந்தேன். விருந்து உபசரிப்பு : ·
வந்தவர்களுக்கு
கறியும், மீனும் வாங்கி
வந்தேன். ·
மாமிச உணவை
வாழை இலையில் பரிமாறினேன். ·
அவர்கள்
உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து
கவனித்தேன். நகர்வலம் : ·
விருந்து
முடித்து, எங்கள் ஊரின்
சிறப்புகளைக் கூறினேன். ·
ஊரின்
சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன். இரவு விருந்து : ·
நகர்வலம்
முடித்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன். ·
இரவில் இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன். பிரியா விடை : ·
இரவு விருந்து முடித்து
அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக்
கூறினர். ·
எனக்குப் பிரிய
மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன் |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : நாளுக்கு ஒரு முறை மலர்வது சண்பகம். ஆண்டுக்கு ஒரு
முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி.
தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல ஞானிகள் தலைமுறைக்கு
ஒரு முறை தான் பிறப்பார்கள். அந்த ஞானிகளும் தமக்கு கிடைத்ததை மற்றவர்களுக்கு
கொடுத்து அவர்களும் இன்பமுற வாழ நினைப்பவர்கள் ஞானிகள். அப்படிப்பட்ட ஒருவரை
இக்கட்டுரையில் நாம் காணலாம். இராமானுசர் : இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான
விசிஷ்டாத் வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். இவருக்கு கூரேசர், முதலியாண்டான் என்ற இருவரும் தண்டும் கொடியுமாக
இருப்பவர்கள். திருமந்திரம் பூரணரால், பிறவிப்பிணி நீக்கும் அருமருந்தான திருமந்திரத்தை
கூறுவதற்கு அவர் இல்லத்துக்கு அவரை மட்டும் தண்டும் கொடியுமாக தனியே வர
சொல்லுகிறார். இராமானுசர் தன் தண்டும் கொடியுமாக உள்ள கூரேசர், முதலியாண்டாரை
அழைத்துக் கொண்டு சென்று திருமந்திரத்தை பெறுகிறார். திருமந்திரத்தை மூவர் தவிர வேறு யாருக்கும்
தெரியக்கூடாது. மீறினால் ஆச்சாரிய நியமத்தை மீறிய பாவிகளாக மாறக் கூடும் என்ற
கட்டளையுடன் பூரணரிடமிருந்து திருமந்திரத்தைப் பெறுகிறார்கள். திருகோட்டியூர் திருக்கோவில் : பொதுமக்கள் அனைவரும் வேகமாக
விரைந்து கோவிலைச் சென்றடைகிறார்கள். ஆங்கே, இராமானுசர் மக்களுக்கு
பிறவிப்பிணி நீக்கும் அருமருந்தான திருமந்திரத்தை கூறுவதற்கு ஆயத்தமானார்.
கோவில் மதில் சுவரின் மேல் நின்றுக் கொண்டார். திருமந்திரம் பகிர்தல் : தமக்கு கிடைத்த திருமந்திரமானது
தங்களின் பிறவிப்பிணியை போக்கக் கூடியது. பெரும்பான்மையான மக்கள் தமக்கு கிடைக்கும்
அரியப் பொருட்கள்,
தகவல்கள், செய்திகளை பிறருக்கு
பகிர மாட்டார்கள். ஆனால் இராமானுசர் தமக்கு கிடைத்த திருமந்திரத்தை அனைவருக்கும்
கூறி அவர்களின் பிறவிப்பிணியைப் போக்கினார். எவரும் செய்ய இயலாத காரியத்தை
செய்து மனித இன்னுயிர்களை காத்தார். பூரணரிடம் விளக்கம் : இராமானுசர், பூரணரிடம், நாங்கள் செய்த இச்செயலுக்கு நரகமே கிடைக்கும். இருப்பினும் தாங்கள் கூறிய
திருமந்திரம் எனக்கு மட்டுமே பயன் கிட்டும். அருமந்திரத்தை அனைவருக்கும்
கூறினால்,
உழன்று
பேதை வாழ்வு வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பிறவிப்பிணியை
நீங்கி பேறு பெறுவார்கள். இதனால் நான் மட்டுமே தண்டனை கிடைக்கப் பெற்று
நரகத்தைச் சேர்வேன். என் மக்கள் அனைவருக்கும் நலம் கிட்டும் எல்லோரும் நலமுடன்
வாழ்வார்கள். முடிவுரை : இராமானுசர் சுயநலம் பாராது.
எல்லோரும் இன்புறிருக்க அருமந்திரத்தை மக்களுக்கு அளித்த குணம் போற்றத்தக்கது. தன்னிடம்
இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து அதில் இன்பம் காண்பதே இன்பமாகும். இவரைப் போன்று
உலக மக்கள் அனைவரும் செயல்பட்டால், உலகமே
இன்பமாகும். |
8
|
|||||||||||||||||||||||||||||||||||||
44ஆ |
முன்னுரை: கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில்
காண்போம். குப்புசாமி: Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன். Ø உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள். Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான்
குப்புசாமி. Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த
குப்புசாமி. பக்கத்து வீட்டுக்காரர்: Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது
காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர். Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார். Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்
என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது. Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி
வாங்க சென்றார். முடிவுரை: எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான். யாரும் அனாதை இல்லை
என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது என்பதனை அறிய முடிகிறது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45அ |
முன்னுரை: கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின்
எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம். அறிவிப்பு: “ கலைத்திருவிழாவிற்கு
வந்தது தூது இதனையொட்டி
எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான
அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில்
நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம். அமைப்பு: சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள்
அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு
அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது. கரகாட்டம், காவடியாட்டம்
: “ கண்களை
கவருது கரகாட்டம் ஆட
துடிக்குது காவடியாட்டம் “ கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன்
ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும்
காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது. பொய்க்கால் குதிரையாட்டம்: பொய்க்கால்கள்
கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்” குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து,
பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம்
தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன, கூத்துகள் அரங்கு: ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத்
திரைசீலையில் ஒளி ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக்
கூத்து. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி
அமைந்திருந்தது. சிற்ப அரங்கு : கல்லிலே
கலைவண்ணம் கண்டான் தன் திறனை
அனைவருக்கும் படைத்தான் சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம்,
காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம் என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும்,
வியப்பாகவும் அமைந்தது. முடிவுரை: ”ஆவலுடன் அங்கு சென்றேன் அங்கிருந்து வர மனமில்லாமல் வந்தேன்” அரசு நடத்தி வரும் இந்த
கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள்
எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக்
கொண்டு நிகழ்த்தப்பட்டன. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45ஆ |
முன்னுரை விண்வெளியில் தமிழரின்
அறிவு கல்பனா சாவ்லா விண்வெளிப் பயணம் பெருமைகள் முடிவு, விண்ணியலில் வருங்காலத்தில்
செய்ய வேண்டியவை முடிவுரை |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்