பத்தாம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வு - 2024
தமிழ்
மதுரை – அரையாண்டுத் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||
1. |
ஈ) சருகும் சண்டும் |
1 |
|||||||||||||||||||||||||
2. |
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
|||||||||||||||||||||||||
3. |
ஆ) நற்றிணை |
1 |
|||||||||||||||||||||||||
4. |
இ_ பால் வழுவமைதி |
1 |
|||||||||||||||||||||||||
5. |
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார் |
1 |
|||||||||||||||||||||||||
6. |
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது |
1 |
|||||||||||||||||||||||||
7. |
இ) மார்கழி,தை |
1 |
|||||||||||||||||||||||||
8. |
ஈ) சிலப்பதிகாரம் |
1 |
|||||||||||||||||||||||||
9. |
அ) அகவற்பா |
1 |
|||||||||||||||||||||||||
10. |
ஆ) அதியன், பெருஞ்சாத்தன் |
1
|
|||||||||||||||||||||||||
11.
|
இ) காடு, வாட |
1
|
|||||||||||||||||||||||||
12
. |
அ) சிலப்பதிகாரம் |
1
|
|||||||||||||||||||||||||
13
. |
ஈ) பர்வனர்,பட்டினும் |
1
|
|||||||||||||||||||||||||
14
. |
இ) நெய்பவர் |
1
|
|||||||||||||||||||||||||
15
|
ஆ) ஆரமும் அகிலும் |
1
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||
16 |
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
1 1 |
|||||||||||||||||||||||||
17. |
காலை
நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு
வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும்
வந்துவிட்டதே!" என்றார் . |
2 |
|||||||||||||||||||||||||
18. |
1. கண்காணிப்பு கருவிகள்
( மறைக்காணி ) 2. நவீன திறன்பேசி |
2 |
|||||||||||||||||||||||||
19 |
v வெட்சி – கரந்தை v வஞ்சி – காஞ்சி v நொச்சி - உழிஞை |
2 |
|||||||||||||||||||||||||
20 |
Ø
அறம் கூறும் மன்றங்கள். Ø
துலாக்கோல் போல்
நடுநிலையானது. Ø
மதுரையில் மதுரைக்காஞ்சி
அவையம். |
2 |
|||||||||||||||||||||||||
21. |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச்
சுற்றும் உலகு. |
2 |
|||||||||||||||||||||||||
பிரிவு
– 2 – பிரிவு - 2 |
|
||||||||||||||||||||||||||
22 |
அ) காற்று ஆ) காடு |
2 |
|||||||||||||||||||||||||
23 |
தொடு என்பதற்கு தோடு என எழுதினான். விடு என்பதற்கு வீடு என எழுதினான் |
1 1 |
|||||||||||||||||||||||||
24. |
இன்னாசிரியர் புத்தகங்களை வரிசைப்படுத்தி, அவற்றைப் புத்தக அடுக்கங்களில்
அடுக்கி வைத்தார் |
2 |
|||||||||||||||||||||||||
25 |
அ)
நவீன இலக்கியம் . ஆ) மனிதநேயம் |
1 1 |
|||||||||||||||||||||||||
25
|
செவி
மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா அ)
பண்டம் குப்பையிலே ஆ) மருந்தும் மூன்று நாள் |
2
|
|||||||||||||||||||||||||
26 |
அ) பெண் குழந்தைகளை கண்ணும்
கருத்துமாக பாதுக்காப்பாக வளர்க்க வேண்டும். ஆ) லாட்டரி வாங்கியவுடன் பணக்காரன்
ஆகிவிடலாம் என மனக்கோட்டைக் கட்டாதே |
1 1 |
|||||||||||||||||||||||||
27 |
அ)
புதுகை ஆ)
மயிலை |
1 1 |
|||||||||||||||||||||||||
28 |
ஒலித்து – ஒலி + த்+த்+ உ ஒலி – பகுதி த் – சந்தி த் – இறந்த கால இடைநிலை உ – வினையெச்ச விகுதி |
2 |
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||
29 |
Ø இரவில் வாயில் கதவு மூடுவதற்கு முன் உணவு உண்ண யாரேனும்
உள்ளார்களா என்பதற்காக வினவப்பட்டது. Ø விருந்தை எதிர்கொள்ளும் தன்மை இது. |
3
|
|||||||||||||||||||||||||
30 |
Ø
கல்வித்துறையை பள்ளிக்கல்வி,
உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார். Ø
“ தமிழ் வளர்ச்சித்
துறை “ எனப் புதியதாக ஒரு துறையை உருவாக்கினார். Ø
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை
அனைத்து அரசு விழாக்களிலும் தொடக்கப் பாடலாக பாடச் செய்தார். Ø
2010 இல் கோவையில்
“ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை “ நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். |
3 |
|||||||||||||||||||||||||
31 |
அ)
இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆ)
அதியன் இ) மறுமை நோக்கி கொடுக்காதவன் |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||
32 |
மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே
என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே
எதிர்பார்த்து வாழ்கிறேன் என்பது உவமை சுட்டும் செய்தி. |
3 |
|||||||||||||||||||||||||
33
|
·
மன்னன் இடைக்காடனார்
புலவரின் பாடலை இகழ்ந்தார். ·
இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை
இறைவனிடம் முறையிடுகிறார். ·
இறைவன் கோவிலை விட்டு
நீங்கினார். ·
மன்னன் இறைவனிடம்
தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார். ·
மன்னன் புலவருக்கு
மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார். |
3 |
|||||||||||||||||||||||||
34அ |
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. குலசேகராழ்வார் |
3 |
|||||||||||||||||||||||||
34ஆ |
நவமணி வடக்க யில்போல் நல்லறப் படலைப் பூட்டும் தவமணி மார்பன்
சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத் துவமணி மரங்கள் தோறும் துணர்அணிச் சுனைகள் தோறும் உவமணி கானம்கொல் என்று ஒலித்து
அழுவ போன்றே |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||
35 |
|
3 |
|||||||||||||||||||||||||
36 |
அணி விளக்கம்: சொல்லையும், பொருளையும் வரிசையாக
நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும். எ.கா அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது அணிப் பொருத்தம் : இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக
நிறுத்தி, பண்பும் பயனும்
என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆகும். |
3
|
|||||||||||||||||||||||||
37
|
இக்குறளின்
இறுதிச்சீர் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||
38அ |
|
5
|
|||||||||||||||||||||||||
38ஆ |
Ø
இரண்டாம் இராச இராச
சோழனின் நாட்டின் வளம், ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது. Ø
யானைகள் மட்டும்
பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை. Ø
சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை. Ø
ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை. Ø
நீர் அடைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை. Ø
மாங்காய்கள் வடுப்படுகிறது. மக்கள் வடுபடுவதில்லை. Ø
நெற்போர் மட்டுமே
இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை. |
5
|
|||||||||||||||||||||||||
39அ |
அனுப்புநர் திரு.அ.தமிழரசன், த’/பெ.அன்பழகன், 10,
கோவலன் தெரு, மதுரை-05
பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், மதுரை– 600001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய
உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும்
மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான
விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. விலை இரசீது – நகல் தங்கள் உண்மையுள்ள, 2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ. இடம் : சேலம் நாள் : 04-03-2024 உறை மேல் முகவரி: பெறுநர் உணவு பாதுகாப்பு
ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு
ஆணையம், சென்னை – 600001. |
5 |
|||||||||||||||||||||||||
39ஆ |
சேலம்
03-03-2024 அன்புள்ள
மாமாவுக்கு, நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம்
ஒப்படைத்தேன். அதற்குப் பாராட்டு பெற்றேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்குக் கிடைத்த
மிகப் பெரிய பரிசாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும்
இதை கூறவும். நன்றி,வணக்கம். இப்படிக்கு, உறைமேல்
முகவரி;
உங்கள் அன்புள்ள, பெறுதல் அ அ அ அ அ. திரு.அ.தமிழரசன், த’/பெ.அன்பழகன், 10, கோவலன்
தெரு, மதுரை-05 . |
5 |
|||||||||||||||||||||||||
40 |
|
5 |
|||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின்
முழு மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||
42அ |
1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றிக்
கலந்துரையாடுதல். 3.விளையாட்டுக் களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5.திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டைக்
குறைக்கச் செய்தல் |
5 |
|||||||||||||||||||||||||
42ஆ |
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண் மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள்
காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை
எல்லா இடங்களிலும் பரவச் செய்து ,சுகந்தம் வீசின. காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
|||||||||||||||||||||||||
42 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா அ)
தியாகம் ஆ)
பிறருக்கு உதவுதல் இ)
பிறர் துன்பம் தீர்ப்பதுதான் ஈ)
ஈழத்துப் பூதன் தேவனார் உ)
பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதி உதவுதல் |
5
|
|||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||
43அ |
‘ செயற்கை நுண்ணறிவின்
எதிர்கால வெளிபாடுகள் ‘ குறிப்புச் சட்டம்
முன்னுரை :- ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும்
மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிப்பாடுகள் அதிகமாக
இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். ஊர்திகளில் வெளிப்பாடு : எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன்
கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம் ·
போக்குவரத்து நெரிசல் குறையும். ·
பயண நேரம் குறையும். ·
எரிபொருள் மிச்சமாகும். கல்வித்துறையில் : கல்வித்துறையில்
இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே
கண்டு கற்கலாம். பிறச் செயல்பாடுகள்: ·
மனிதர்களிடம் போட்டியிடலாம். ·
பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை
வழங்கலாம். ·
சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் இயந்திர
மனிதன் கண்டுபிடிக்கலாம். முடிவுரை : செயற்கை நுண்ணறிவுக்
கருவிகளால் மனிதர்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது. |
8 |
|||||||||||||||||||||||||
43ஆ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக்கலைஞர்,
இயற்றமிழ் கலைஞர் என கலைஞரின் பன்முகத்தன்மையை
நாம் இக்கட்டுரையில் காண்போம். போராட்டக் கலைஞர் : Ø பள்ளி வயதிலியே போராடியவர் கலைஞர். Ø இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர்
வீதிகளில் போராடியவர். Ø
“ வாருங்கள் எல்லோரும்
போருக்குச் சென்றிடுவோம் “ எனப் பாடலைப் பாடிக்கொண்டே
ஊர்வலம் நடத்தினார். பேச்சுக் கலைஞர் : Ø தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின்
பேச்சாற்றல் கலைஞரைக் கவர்ந்தது. Ø மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர். “ நட்பு “
என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர் நாடகக் கலைஞர் : Ø 1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி
அரங்கேற்றினார். Ø சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ,
தூக்கு மேடை முதலிய நாடகங்களை எழுதியுள்ளார். Ø தூக்குமேடை நாடகத்தில் மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு
பட்டம் பெற்றார். திரைக் கலைஞர் : Ø
“ ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார். Ø
மருதநாட்டு இளவரசி,
நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். இயற்றமிழ் கலைஞர்: Ø
நளாயினி, சித்தார்த்தன்
சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய சிறுகதைகள் எழுதியுள்ளார். Ø
ரோமாபுரி பாண்டியன்,
பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். Ø
தொல்காப்பிய பூங்கா,
குறளோவியம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதி தம் இயற்றமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். முடிவுரை : ·
அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம், கவியரங்கம் என
பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக விளங்கினார்
கலைஞர். |
8 |
|||||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக்
காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான். Ø அவன் மிக சோர்வாக இருந்தான். Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான். கருணை அன்னமய்யா: Ø அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும்
கூறினான். Ø அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக்
கொடுத்தார். Ø கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி
உறங்கினான். Ø ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. |
8
|
|||||||||||||||||||||||||
44ஆ |
முன்னுரை: கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில்
காண்போம். குப்புசாமி: Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன். Ø உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள். Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான்
குப்புசாமி. Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த
குப்புசாமி. பக்கத்து வீட்டுக்காரர்: Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது
காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர். Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார். Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்
என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது. Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி
வாங்க சென்றார். முடிவுரை: எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான். யாரும் அனாதை இல்லை
என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது என்பதனை அறிய முடிகிறது. |
8 |
|||||||||||||||||||||||||
45அ |
சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை: குமரிக்கடல்
முனையையும்,
வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த
பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய்
என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம்
கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,
கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø
தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø
கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø
ஆங்கில மொழியை தாய்
மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø
வீரமாமுனிவர் தமிழில்
முதல் சதுரகராதி வெளியிட்டார். Ø
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø
தமிழ் இனிமையான
மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட
மொழி. Ø
இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø
தமிழ் மூன்று சங்கங்களைக்
கண்டு வளர்ந்தது. முடிவுரை: குமரிக்கடல்
முனையையும்,
வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப்
புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச்
சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து,
அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்”
என்ற தலைப்பில் இக்கட்டுரையில்
நாம் கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||
45ஆ |
முன்னுரை: மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில்
காணலாம். நாட்டு விழாக்கள்: சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு
பெருமை சேர்க்கின்றனர். விடுதலைப் போராட்ட வரலாறு: வெள்ளையனே வெளியேறு, உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற
விடுதலையை எண்ணி போற்ற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு: மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர்
இயக்கம், இளஞ்செஞ்சிலுவை
சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில்
இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும். முடிவுரை: நாட்டினை உயர்த்துவேன், தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம். |
8 |
|||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்