பத்தாம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வு - 2024
தமிழ்
திருப்பூர் மாவட்டம்
விடைக்குறிப்பு
திருப்பூர் – அரையாண்டுத் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
இ) எம் + தமிழ் + நா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
ஆ) இன்மையிலும் விருந்து |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஈ) வானத்தையும் பேரொலியையும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
இ) அறியாவினா, சுட்டு விடை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
ஆ) மார்ஷல்.ஏ.நேசமணி |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
இ) உயிரினும் ஓம்பப்படும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
ஈ) அண்ணன் தம்பி |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
ஆ) கலிங்கத்துப்பரணி |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
11.
|
அ) அகவற்பா |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
12
. |
அ) இரட்டைக் கிளவி |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
13
. |
அ) கீரந்தையார் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
14
. |
ஆ) அறிவியல் கருத்து |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
15
|
இ) வானம்,பேரொலி,யுகம் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16 |
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
பொருத்தமான தலைப்புகள் இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
1. நவீன திறன் பேசி 2. நவீன
மறைக்காணி |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
கரப்பிடும்பை
இல்லார் – தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக்
கூறாதவர். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20 |
தேம்பா+அணி = வாடாத மாலை, தேன் + பா + அணி = தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு காண்டங்கள் : 3, படலங்கள் : 36, பாடல்கள் : 3615 ஆசிரியர் : வீரமாமுனிவர் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
21. |
தியற்கை அறிந்து செயல். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
பிரிவு
– 2 – பிரிவு - 2 |
|
||||||||||||||||||||||||||||||||||||||
22 |
v வெட்சி – கரந்தை v வஞ்சி – காஞ்சி v நொச்சி - உழிஞை |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
பதிந்து
– பதி +த்(ந்)+த்+உ பதி
– பகுதி. த் – சந்தி, த் -ந் ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, உ- வினையெச்ச விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
24. |
அ)
பண்பாட்டு எல்லை. ஆ) துணைத்தூதரகம் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
25 |
அ)
கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தும், எழுத்து வழியாகத் தமது எண்ணங்களைக்
கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டுச் சென்றார். ஆ)
ஓடிக்கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றது.அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26 |
அ) ஊட்டமிகு உணவு உண்டவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார் ஆ) நேற்று என்னைச் சந்தித்தவர் என்
நண்பர் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
வெண்பாவின்
பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா. எ.கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண்ப தறிவு. |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28 |
அ)
விடை எட்டு வகைப்படும். ஆ)
அவை சுட்டுவிடை, மறைவிடை,நேர்விடை,ஏவல்விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல்
விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
Ø
வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது. Ø
நீர்நிலை பெருக்கி ,நிலவளம்
கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல்
தலைவர்களுக்குப் பொருந்தும். |
1
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
30 |
அ)
அறம் கூறும் மன்றங்கள் ஆ) அறம் அறக்கண்ட
நெறிமான் அவையம் இ)
துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது. |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
31 |
பொருத்தமான
விடைகள் 3 எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
Ø அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு
சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன. Ø இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன. Ø நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன. Ø
காதுகளில் குண்டலமும்,
குழையும் அசைந்தாடுகின்றன. |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33
|
பெருமாள்
திருமொழி நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக இடம் பெற்றுள்ளது.
இதில் 105 பாடல்கள் உள்ளன, |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34அ |
திருவிளையாடற்
புராணம் புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து
இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க
எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ
நுவன்ற சொல்லாம் தண்ணிய
அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா - பரஞ்சோதி
முனிவர் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34ஆ |
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு
முத்தும் மணியும் பொன்னும் அருங்கல
வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை
மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை
தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம்
குவித்த கூல வீதியும்; -இளங்கோவடிகள் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
Ø ஆற்றுநீர்ப்
பொருள்கோள் Ø விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராகப் பொருள் கொள்ளுமாறு
அமைவது. பொருத்தம் : முயற்சி
ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி
இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு
அமைந்துள்ளது |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36 |
இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை
ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் ................... கூவினவே
கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை
விடிந்ததும் கோழிகளும் இயல்பாகக் கூவும். ஆனால்
புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
37
|
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38அ |
குறிப்புச் சட்டம்
முன்னுரை: ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது.
அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் காணலாம். ஆற்றுப்படுத்துதல் : ·
நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என
கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை ·
மற்றொரு கூத்தனை நெறிப்படுத்துவதாக அமைந்தது. இன்றைய
நிலை: ·
ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக
மாறியுள்ளது. ·
நோய் குணமாக இந்த மருத்துவரைக் காணுங்கள் என வழிகாட்டுகின்றனர். ·
மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடிய கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்களை வழிகாட்டுகின்றனர். ·
ஏழை, எளியோருக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுகின்றனர், ·
இன்றைய வழிகாட்டுதல் சூழலில் தன்னார்வ நிறுவனங்கள் பங்கு
அளப்பரியது. ·
இன்றைய இணைய வழி வழிகாட்டுதல்கள் எல்லாம் பணம் பெறும் நோக்கமாக
மாறி வருகிறது. முடிவுரை : ஆற்றுப்படுத்தல்
என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும்
வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக
மாறியிருப்பதைக் கண்டோம். |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
38ஆ |
|
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
39அ |
சேலம்
03-03-2024 அன்புள்ள மாமாவுக்கு, நான்
நலம். நீங்கள் நலமா? என
அறிய ஆவல். சென்ற வாரம் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம்
ஒப்படைத்தேன். அதற்குப் பாராட்டு பெற்றேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாக இதை கருதுகிறேன். வீட்டில்
அனைவரிடமும் இதை கூறவும். நன்றி,வணக்கம். இப்படிக்கு, உறைமேல் முகவரி;
உங்கள் அன்புள்ள, பெறுதல் அ அ அ அ அ. திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, நாமக்கல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39ஆ |
அனுப்புநர் முகில்.வெ 10, ஆம்
வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,சேலம். பெறுநர் தலைமை ஆசிரியர் அவர்கள், அரசு உயர் நிலைப்லைப்பள்ளி, கோரணம்பட்டி,சேலம. ஐயா, பொருள்:-
பள்ளித் தூய்மை - செயல்திட்ட வரைவு - ஒப்புதல் வேண்டுதல் - சார்பு. நமது 'பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்'
குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதனைச்
செயல்படுத்திட ஒப்புதல் வழங்கிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். செயல்திட்ட வரைவு : 1) வகுப்பறைத் தூய்மை – தினமும் காலை
8.00 மணி. 2) வளாகத் தூய்மை - தினமும் மாலை 5.00 மணி. 3) குடிநீர்த் தொட்டி பராமரிப்பு -
திங்கள், வெள்ளி. 4) வீணாகும் நீரை – செடிகளுக்கு செல்லுமாறு மாற்றிவிடுதல். இடம்: கோரணம்பட்டி நாள்: 27 /03 /2024 இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, முகில்.வெ உறைமேல்
முகவரி: பெறுநர்: தலைமை ஆசிரியர் அவர்கள், அரசு உயர் நிலைப்பள்ளி,, கோரணம்பட்டி,சேலம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின்
முழு மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42அ |
1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை
அனைவருக்கும் கூறுதல். 2. கல்வெட்டுகளின் மதிப்பைக் குறைக்கும்படி
எதுவும் கூற, அனுமதிக்காமை. 3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம்
அடையச் செய்தல். 4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும்
முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி
நாட்டுப்பற்றை வளர்க்கலாம்,
என்பதை உணர்த்துதல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42ஆ |
மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூறுகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று
சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம்
வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,
ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத்
தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில்
மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா 1. குப்பையிலே 2. சோற்றுக்கு ஒரு பதம் 3. உள்ளளவும் நினை 4. மருந்தும் மூன்று நாள் 5. அமுதமும் நஞ்சு |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||||||||||||||
43அ |
‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால
வெளிபாடுகள் ‘ குறிப்புச் சட்டம்
முன்னுரை :- ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை
எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும்
வணிகத்துடன் நின்று விடுமா?
என்றால் அதன் வெளிப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக்
காணலாம். ஊர்திகளில் வெளிப்பாடு : எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன்
கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம் ·
போக்குவரத்து
நெரிசல் குறையும். ·
பயண
நேரம் குறையும். ·
எரிபொருள்
மிச்சமாகும். கல்வித்துறையில் : கல்வித்துறையில் இத்தகைய தொழில் நுட்பம்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே
கண்டு கற்கலாம். பிறச் செயல்பாடுகள்: ·
மனிதர்களிடம்
போட்டியிடலாம். ·
பல்வேறு
இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை வழங்கலாம். ·
சாக்கடைகளைச்
சுத்தம் செய்யும் இயந்திர மனிதன் கண்டுபிடிக்கலாம். முடிவுரை : செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால்
மனிதர்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
43ஆ |
இதழ்
வெளியீடு இதழ் : ஜெயகாந்தன்
நினைவுச் சிறப்பிதழ் எழுத்தாளர் : ஜெயகாந்தன் ( சிறுகதை
மன்னன் ) இப்போது
பரபரப்பான விற்பனையில்..... இது
தமிழ்விதை வார இதழ் வெளியீடு.
|
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44அ |
குறிப்புச் சட்டம்
முன்னுரை : புயலிலே
ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத்
தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம். புயல்
வருணனை : ·
கொளுத்தும் வெயில். ·
மேகங்கள் கும்மிருட்டு. ·
இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது. ·
மலைத் தொடர் போன்ற அலைகள். ·
வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது. அடுக்குத்
தொடர் : ·
நடுநடுங்கி ·
தாவித் தாவி ·
குதி குதித்தது ·
இருட்டிருட்டு ·
விழுவிழுந்து ஒலிக்
குறிப்பு : ·
கடலில் சிலுசிலு, மரமரப்பு. ·
ஙொய்ங், புய்ங் ஙொய்ங்
புய்ங் ஙொய்ங் புய்ங். முடிவுரை : ·
பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது. ·
அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள். ·
இவ்வாறாக வருணனைகளோடு, அடுக்குத்
தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம்
விவரித்துள்ளார். |
8
|
|||||||||||||||||||||||||||||||||||||
44ஆ |
முன்னுரை: உலகம்
பரந்து விரிந்த திடல்; அதில் ஆடுவாரும் உள்ளனர். பாடுவாரும் உள்ளனர். பிற
திறமைகளைக் காட்டுவோரும் உள்ளனர். இதில் வெற்றிப்பெற்றவர்கள் மிகுதி. இதனையே
ஆளுமை என்கிறோம்.ஆளுமை மிக்க பெண்களில் மூவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழரின்
பெருமையை ஐ.நா அவையில் பரப்பும் வகையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப்
பாடியவர். இசைப்பேரரசி என்று நேரு பெருமகனரால் அழைக்கப்பட்டவர். பெருமைகள் : ·
வீணைக் கலைஞரான அவரின் தாய் தான் அவருக்கு முதல்
குரு. ·
17 வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர்
முன்பு கச்சேரி செய்து பாராட்டு பெற்றுள்ளார். ·
காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில்
கண்ணன் முதலிய பாடல்களுக்கு வரவேற்புக் கிடைத்தது. ·
காந்தியடிகளை தில்லியில் சந்தித்த போது, ‘ இரகுபதி ராஜவ இராஜாராம்’ பாடலைப்
பாடினார். 1947 இல் காந்தியடிகள் பிறந்த நாளன்று அப்பாடல்
ஒலிபரப்பியது. சாதனைகளும், விருதுகளும்
: ·
1954இல் – தாமரையணி விருது ·
1963 – இங்கிலாந்திலும், 1966
– இல் ஐ.நா அவையிலும் பாடல் பாடினார். ·
1974 இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றார். ·
இந்தியாவின் உயரிய விருது இந்திய மாமணி விருதையும்
பெற்றுள்ளார். இராஜம் கிருஷ்ணன் : தம்மை
இலக்கியவாதியாக அறிமுகம் செய்து கொண்டவர். தமிழில் எழுதிய பெண்களில் முதன்
முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர்.
புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், குழந்தை
இலக்கியம், வரலாற்று நூல் என எழுத்துலகின் எல்லாத் தளங்களிலும்
தடம் பதித்தவர். இலக்கியம் : ·
பெண்கள் என்றால் குடும்பக் கதை எழுத வேண்டும் என்ற
படிமத்தை உடைத்து சமூகச் சிக்கல்களை கதைகளாக எழுதியவர். ·
சமூகத்தில் இடர்ப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்குள்
சென்று களப்பணியாற்றி கதைகளை உருவாக்குபவர். ·
இவரின் புதினங்கள் ஒவ்வொன்றும் மக்களிடம் சென்று
சேரும். ·
இவர் எழுதிய ‘ பாஞ்சாலி
சபதம் பாடிய பாரதி ‘ என்னும் வரலாற்றுப் புதினம் அனைவராலும் பாராட்டப்பட்ட
ஒன்று. ·
உப்பு தொழிலாளர்களின் வாழ்க்கை – கரிப்பு மணிகள் புதினம் ·
படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் – குறிஞ்சித்
தேன் புதினம் ·
மீனவர் வாழ்வின் சிக்கல் – அலைவாயில்க் கரையில்
புதினம் ·
தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் – சேற்றில்
மனிதர்கள், வேருக்கு நீர்
புதினங்கள். விருது
: வேருக்கு
நீர் என்னும் புதினத்திற்காக “ சாகித்திய
அகாதெமி விருது “ பெற்ற முதல் பெண் எழுத்தாளர் இவரே. சின்னபிள்ளை
: பள்ளி
பருவத்தில் பாடம் பயிலாவிட்டாலும் பட்டறிவால் இவர் கற்றுக் கொண்டவை ஏராளம்.
எழுதப் படிக்கத் தெரியாத இவரை எழுதாத ஊடகங்களே இல்லை. முதுமை பருவத்தில் இவர்
பயணித்தாலும் இவர் இன்னும் சின்னப்பிள்ளை தான். மகளிர்
குழு : ·
பெண்களை எல்லாம் குழுவாக சேர்த்தவர். ·
விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, கூலி வேலைகளுக்கு ஆட்களைச் சேர்த்து வேலைகளைச்
செய்தவர். ·
வரும் கூலியை சரி சமமாக பிரித்துக் கொடுத்தவர். ·
இதில் சிறப்பு வயதானவர்களையும், மாற்றுத் திறனாளர்களையும் வேலைக்கு சேர்த்து அவர்கள்
வாழ்விலும் உதவி செய்தது தான். ·
சுனாமியின் போது இவர்கள் குழுவாகச் சென்று மீட்பு
பணிகளைச் செய்தவர். ·
களஞ்சியம் என்னும் குழு ஆரம்பித்த மகளிர் குழு இன்று
பல மாநிலங்களில் பல லட்சம் பேருடன் வேலை செய்யும் குழுவாக உள்ளது. விருதுகள்
: ·
அன்றைய பிரதமர் மாண்புமிகு.வாஜ்பாய் அவர்களால் பெண்
ஆற்றல் விருது. ·
தமிழக அரசின் ஒளவை விருது. ·
தூர்தஷனின் பொதிகை விருது. ·
தாமரைத் திரு விருது. முடிவுரை
: பெண்கள்
நாட்டின் கண்கள் என்பது போல நாம் அனைவரும் பெண் குழந்தைகளை பேணி பாதுகாத்து
வளர்க்க வேண்டும். அவர்களை ஆற்றல் கொண்டவர்களாக மாற்ற இந்த சமுதாயம் அவர்களுக்கு
தேவையான உதவியும் பயிற்சியும் செய்ய வேண்டும். இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை.
இனி வரும் காலங்களிலும் பெண்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கி, இந்த உலகை சக்தி மிகுந்ததாக மாற்ற அனைவரும் உறுதி
எடுப்போம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45அ |
சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை: குமரிக்கடல் முனையையும், வேங்கட
மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த
பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய்
என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம்
கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,
கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில்
இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின்
தொன்மை: Ø
தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்
குடி தமிழ். சான்றோர்களின்
தமிழ்ப்பணி: Ø
ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச்
செய்தார். Ø
வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார். Ø
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை
அச்சிட்டு வெளியிட்டார். தமிழின்
சிறப்புகள்: Ø
தமிழ் இனிமையான மொழி. பல
இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி. Ø
இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது. Ø
தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது. முடிவுரை: குமரிக்கடல் முனையையும், வேங்கட மலை முகட்டையும்
எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும்
அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம்
சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு,
உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில்
இக்கட்டுரையில் நாம் கண்டோம் |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45ஆ |
முன்னுரை: கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின்
எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம். அறிவிப்பு: “ கலைத்திருவிழாவிற்கு
வந்தது தூது இதனையொட்டி
எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான
அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில்
நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம். அமைப்பு: சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள்
அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு
அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது. கரகாட்டம், காவடியாட்டம்
: “ கண்களை
கவருது கரகாட்டம் ஆட
துடிக்குது காவடியாட்டம் “ கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன்
ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும்
காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது. பொய்க்கால் குதிரையாட்டம்: பொய்க்கால்கள்
கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்” குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து,
பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம்
தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன, கூத்துகள் அரங்கு: ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத்
திரைசீலையில் ஒளி ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக்
கூத்து. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி
அமைந்திருந்தது. சிற்ப அரங்கு : கல்லிலே
கலைவண்ணம் கண்டான் தன் திறனை
அனைவருக்கும் படைத்தான் சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம்,
காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம் என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும்,
வியப்பாகவும் அமைந்தது. முடிவுரை: ”ஆவலுடன் அங்கு சென்றேன் அங்கிருந்து வர மனமில்லாமல் வந்தேன்” அரசு நடத்தி வரும் இந்த
கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள்
எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக்
கொண்டு நிகழ்த்தப்பட்டன. |
|
|||||||||||||||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்
சிறப்பான பணி ஐயா. நன்றி 🙏
ReplyDelete