www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : பெரிய புராணம்
அறிமுகம் :
Ø விடுமுறையில் நீங்கள் சென்று வந்த சுற்றுலா இடங்கள்
எவை? அவை எப்படி இருந்தது? என வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø வேறுபட்ட கவிதை வடிவங்களைப்
படித்து பொருளுணர்தல்
Ø இயற்கை அழகை போற்றும்
கவிதைகளை படைத்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø செய்யுளின் பொருளை விளக்குதல்.
Ø செய்யுளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்
Ø செய்யுளில் இடம் பெற்றுள்ள நயங்களை விளக்குதல்
Ø மனப்பாடப் பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்
Ø பாடல் கருத்துகளை அன்றாட வாழ்வியல் கூறுகளோடு தொடர்புப்படுத்தி
கற்பித்தல்
கருத்து வரைபடம் : பெரிய
புராணம்
விளக்கம் : பெரிய
புராணம்
Ø பெரிய புராணம் – இலக்கியத்தின் நூற் குறிப்பு
Ø பாடலில் உள்ள நயங்கள்
அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )
Ø காவிரி ஆறு பாயும்
பாதை மற்றும் திருநாட்டின் சிறப்பை பாடல் வழியாக உணர்தல்.
Ø பெரிய புராண மனப்பாடப்
பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø கடினச் சொற்களுக்கு
அகராதி வழியாக பொருள் காணுதல்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பெரிய புராணம் – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்
Ø பெரிய புராணம் – பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்
Ø பெரிய புராணம் – மனப்பாடப்பாடலை மனனம் செய்தல்
Ø பாடலின் பொருளை வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபடுத்துதல்.
Ø பாடலில் காணப்படும் நயங்களை உணர்தல்.
Ø செய்யுளில் உள்ள இலக்கணக் கூறுகளைக் காணுதல்.
Ø இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்.
மதிப்பீடு :
LOT
:
Ø பெரிய புராணத்தின் ஆசிரியர் யார்?
Ø பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ
என்று சேக்கிழாரை புகழ்ந்தவர் யார்?
MOT:
Ø கருங்குவளை, செந்நெல் – இலக்கணக் குறிப்புத் தருக.
Ø களை பறிக்கும் பருவம் குறித்து சேக்கிழார் கூறுவது
யாது?
HOT:.
Ø உன் இனிய கனவு பற்றிக் கூறுக.
Ø பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைச் சுருக்கமாகக்
கூறுக.
கற்றல் விளைவுகள் :
பெரிய புராணம்
T907 சமய இலக்கியம் காட்டும்
சமூகச்செழுமை,வளத்தை வெளிப்படுத்தும் சந்தநயமிக்கச் சொற்கூறுகளை நயமுணர்ந்து படித்தல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை