10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 9 - SITHTHALU

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      நவம்பர்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 9

தலைப்பு          :      சித்தாளு


அறிமுகம்                   :

Ø  அன்றாட வேலைகளை செய்யும் நபர்களின் முக்கியத்துவத்தைக் கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்

 ஆசிரியர் குறிப்பு          :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  மனித மாண்புகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்

Ø  மனித மாண்புகளை அறிந்து நடத்தல்.

Ø  மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்

கருத்துரு வரைபடம்              :

சித்தாளு

 

விளக்கம்    :

            சித்தாளு

o    முகம்மது ரஃபி என்னும் இயற்பெயர் கொண்டவர் நாகூர் ரூமி

o    செங்கல் கற்கள் சுமக்கும் சித்தாளுவின் சுமைகள் கவிதையாக கொடுக்கப்பட்டுள்ளது

o    பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியது கற்காலம் தான்

o    சித்தாளுவின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது

o    நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடப்படும் கவிதை

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் சரளமாக வாசிக்க வைத்தல்

Ø  நாகூர் ரூமி பற்றி அறிதல்

Ø  சித்தாளு என்ற கவிதையில் சித்தாளுவின் சுமைகள் பற்றி அறிதல்

Ø  அன்றாட வேலை செய்வோரின் மன இயல்புகளை அறிதல்

Ø  மனித மாண்புகளை மதித்தல்

Ø  மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  சித்தாளு என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Ø  சித்தாளுவின் வாழ்வு எவ்வாறு படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது?

                MOT :

Ø  உங்கள் வீட்டின் அருகில் சித்தாளுவை போல் வேறு தொழில் செய்பவர்களின் செயல்பாடுகளைக் கூறுக.

Ø  தலைக்கனம் என்று நாகூர் ரூமி எதனைக் கூறுகிறார்?

                HOT :

Ø மனித நேயத்தை வெளிப்படுத்திய சில ஆளுமைகளின் பெயர்களைக் கூறுக.

Ø உங்கள் பகுதியில் அன்றாட வேலை செய்வோரின் மன இயல்புகளை கூறுக.

கற்றல் விளைவுகள்                  :         சித்தாளு

T1046 வெவ்வேறு தளங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை இலக்கியம் மூலம் படித்தல், அது போல படைத்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post