10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 3 - KASI KAANDAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 3

தலைப்பு          :      காசிக்காண்டம்


அறிமுகம்                   :

Ø  முன் பின் அறிமுகம் இல்லாத நபர் உங்கள் இல்லத்திற்கு வரும் போது நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  விருந்தினரை வரவேற்கும் முறைகளை இலக்கியங்கள் மூலம் அறிதல்

Ø  உணவுவகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்துச் சுவைத்து அது போல ஈர்ப்புடன் எழுதப் பழகுதல்.

ஆசிரியர் குறிப்பு           :

Ø பண்பாட்டுக் கூறான விருந்தோம்பல் வாழ்வியலுடன் பிணைந்துள்ளதை இலக்கியங்கள் வழியில் உணர்த்துதல்

Ø காசி நகரத்தின் பெருமைகளைக் கூறல்

Ø விருந்தினரை உபசரிக்கும் முறையின் ஒன்பது ஒழுக்கங்களை அன்றாட வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்

Ø மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்துரு வரைபடம்              :

காசிக்காண்டம்

விளக்கம்    :

            காசிக்காண்டம்

·         காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல்

·         ஆசிரியர் : அதிவீரராம பாண்டியர்.

·         ஒன்பது விருந்தோம்பல் ஒழுக்கம்:

      • வியந்து உரைத்தல்
      • இனிமையாக பேசுதல்
      • மலர்ச்சியுடன் அவரை நோக்குதல்
      • வரவேற்றல்
      • எதிரில் நிற்றல்
      • மனம் மகிழும் படி பேசுதல்
      • அருகில் அமர்தல்

·                வாயில் வரை பின் தொடர்தல்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø விருந்து,விருந்தினர், விருந்தோம்பல் முறை இவற்றை அறிந்துக்கொள்ளல்

Ø விருந்தினரை உபசரிக்கும் முறையை இலக்கியங்களில் வழி அறிந்து அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்.

Ø இலக்கியம் கூறும் வழிகளை நடைமுறை வாழ்வில் பின்பற்றுதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  காசிக்காண்டம் என்பது __________

Ø  வெற்றிவேற்கை என அழைக்கப்படும் நூல் ________

                MOT :

Ø  காசிக்காண்டம் கூறும் ஒன்பது வகையான இல்லற ஒழுக்கங்கள் யாவை?

Ø  காசிக்காண்டம்  நூற் குறிப்பு தருக

                HOT :

Ø   நீண்ட நாட்களாக பார்க்க எண்ணி இருந்த உறவினர் உங்கள் இல்லத்துக்கு வரும் போது நீங்கள் உபசரிக்கும் விதம் குறித்து கூறுக.

Ø   முன்பின் அறிமுக இல்லாத நபர்களுக்கு விருந்து உபசரிக்கும் தன்மை இன்று எவ்வாறு உள்ளது?

கற்றல் விளைவுகள்                  :         காசிக்காண்டம்

T1012 இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விருந்தோம்பல் கருத்துகளையும் அதன் மொழியையும் படித்துப் புரிந்து கொள்ளுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post