SLM-10TH-TAMIL-3RD REVISION - ANSWER KEY

 

 சேலம் – மூன்றாம் திருப்புதல் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 + 15 மணி                                                          மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. அதியன்; பெருஞ்சாத்தன்

1

2.

ஈ. சருகும் சண்டும்

1

3.

ஆ. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

1

4.

அ. அகவற்பா

1

5.

அ. பலதுறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்

1

6.

இ. உருவகம்

1

7.

ஆ. உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

1

8.

அ. காடு

1

9.

ஈ. சிற்றூர்

1

10.

ஈ) என் தங்கை வந்தாள் என்று பசுவைக் குறிப்பிடுவது

1

11.

ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிகாத்தல்

1

12 .

ஈ. தேம்பாவணி

1

13 .

ஆ. வீரமாமுனிவர்

1

14 .

ஆ. வேற்றுமைத்தொகை

1

15

இ. காடு

1

பகுதி - 2

16

அ. தமிழ் எவ்வாறு வளர்ந்தது?

ஆ. எதன் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது?

1

1

17.

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு

2

18.

·                . கும்பகர்ணனே எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!

·                கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய்

1

1

19

ஒருவரது புலமையையும், நினைவாற்றலையும் நுண் அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

2

20

காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும்   அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .

2

21.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்

2

பிரிவு – 2

22

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

1

1

23

v  சுட்டு விடை

v  மறை விடை

v  நேர் விடை

1

1

24.

·         தங்கக் கட்டி

·         ஈடாக ( சமமாக )

1

1

25

. பெருங்காற்று

ஆ. சுழல் காற்று

1

1

26

அ. உள்ளளவும் நினை

ஆ. மூன்று வேளை ( நாள் )

1

1

27

பல + கையொலிபல கைகளால் சேர்ந்த ஒலி

பலகை + ஒலிபலகையால் ஏற்படும் ஒலி

1

1

27

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. புற்கட்டு      

ஆ. கற்குவியல்

1

1

28

அ. ஓடிய அருணா

ஆ. ஓடி வந்தாள் அருணா

1

1

பகுதி – 3

29

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

1

1

1

30

அ) வாய்மை பேசும் நா

ஆ) இன்பத்தின் கதவை திறப்பதும் அது தான். துன்பத்தின் கதவை திறப்பதும் அது தான்.

இ) வாய்மை

3

31

·         போலச் செய்தல் பண்புகளில் நிகழ்த்திக்காட்டும் கலைகளில் ஒன்று.

·         மரத்தாலான பொய்க்காலில் நின்று கொண்டும் குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டு ஆடும் ஆட்டம்.

·         புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

·           நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·           நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·           உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

3

33

·           மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

·           இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்

·           இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்

·           மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்

·           மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்

3

34

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.              -குலசேகராழ்வார்

 

3

34

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்;

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.                -கம்பர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

மல்லிகைப்பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடும்,மாடும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர், குடிக்கின்ற நீர்,குடிக்கும் நீர்

சுவர்க்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

36

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

மதி-நுட்-பம்

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

2

நூ-லோ

நேர் – நேர்

தேமா

3

டுடை-யார்க்

நிரை – நேர்

புளிமா

4

கதி-நுட்-பம்

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

5

யா-வுள்

நேர் – நிரை

கூவிளம்

6

முன்-நிற்

நேர் – நேர்

தேமா

7

பவை

நிரை

மலர்

இக்குறளின் இறுதிச்சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் அதன் இயல்புத் தன்மை மாறாமல் கேட்பவரின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மை அணி.

1. பொருள் தன்மையணி

2. குணத்தன்மையணி

3. சாதித்தன்மையணி

4. தொழிற் தன்மையணி

3

பகுதி - 4

38

பாராட்டுரை

நெகிழ்ப் பைகளின் தீமை விழிப்புணர்வு

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

அன்புடையீர் வணக்கம்,

எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளியின் சார்பாக வணக்கம்.

நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.

நெகிழிப்பைகள் மூலம் மனிதர்களுக்குப் புற்றுநோய் வரக்கூடும் என்பதனை அழகாக எடுத்துரைத்தமைக்குப் பாராட்டுகள்.

நெகிழிகளை எரிப்பதால் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமையை அழகாக எடுத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இதன் மூலம் எங்கள் பள்ளி மாணவர்கள் இனிமேல் நெகிழியைப் பயன்படுத்தமாட்டோம் என உறுதிக் கொண்டுள்ளோம்.

நன்றி.

5

38ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஆற்றுப்படுத்துதல்

இன்றைய நிலை

முடிவுரை

 

முன்னுரை:

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் காணலாம்.

ஆற்றுப்படுத்துதல் :

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         மற்றொரு கூத்தனை நெறிப்படுத்துவதாக அமைந்தது.

இன்றைய நிலை:

·         ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது.

·         நோய் குணமாக இந்த மருத்துவரைக் காணுங்கள் என வழிகாட்டுகின்றனர்.

·         மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடிய கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்களை வழிகாட்டுகின்றனர்.

·         ஏழை, எளியோருக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுகின்றனர்,

·         இன்றைய வழிகாட்டுதல் சூழலில் தன்னார்வ நிறுவனங்கள் பங்கு அளப்பரியது.

·         இன்றைய இணைய வழி வழிகாட்டுதல்கள் எல்லாம் பணம் பெறும் நோக்கமாக மாறி வருகிறது.

முடிவுரை :

        ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் கண்டோம்.

5

39அ

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

          வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

               நன்றி.

இடம் : சேலம்                                                                                இப்படிக்கு,

நாள் : 04-03-2021                                                                 தங்கள் உண்மையுள்ள,                                                                                                       அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636001.

5

39ஆ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல். காமராஜர் வாழ்க்கை வரலாறு  என்ற நூலை வாசித்தேன். அதில் அவரின் இளமை காலம், போராட்டங்கள், மக்கள் தொண்டு என்று பல்வேறு அரிய தகவல்கள் அடங்கியுள்ள நூல். எனவே நீயும் அந்த நூலை வாசித்து காமராஜர் பற்றியும், அவரின் பண்பு நலன்களையும் அறிந்து செயல்பட வேண்டுகிறேன்..

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி        

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.

2. கல்வெட்டுகளின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.

3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.

4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.

5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.

5

42ஆ

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச் செலவிடுகிறது.

தேவி:          யாருக்குத் தெரியும்? நம்நாடு எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவுகளையும் செலுத்தலாம்.

மலர்: நான் படித்திருக்கிறேன். வருங்காலத்தில் சில நாடுகள் இதைப் போன்ற செயற்கைக் கோள்களை ஏவ இருக்கின்றனர் எனப் படித்து இருக்கிறேன்.

தேவி:          அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவுகளை ஏவினால்,இயற்கைப் பேரழிவின் போது மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் ஒளியை  ஏற்படுத்தித் தர இயலும்

5

 

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

2. கருத்துப் பகிர்வை தருவதால் பயன்கலை என குறிப்பிடப்படுகிறது.

3. ஒரு நாட்டின் வரலாற்றிலும், இலக்கியத்திலும், பயன்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

4. மொழி பெயர்ப்பு

5. மொழிபெயர்ப்பின் மூலம் இலக்கியத்தை வளப்படுத்தலாம்.

5

பகுதி - 5

43அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார்

·         மன்னன் அதனை பொருட்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

        மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

8

43ஆ

குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளைக் கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்குச்  செல்வதாகக் கூறினர்.

·         எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்

8

44அ

உறவினர் மகள்:    வணக்கம் சித்தப்பா.

சித்தப்பா:               வணக்கம் மகளே.

உறவினர் மகள்:    தமிழில் உரைநடை என்றால் என்ன?

சித்தப்பா:               நீயும் நானும் பேசுவதை எழுதினால் உரைநடை.

உறவினர் மகள்:    உரை நடை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து யாது?

சித்தப்பா:               உரைநடையில் எதுகை, மோனை போன்ற அணிகளோ இல்லை. ஆனால் அடுக்கு மொழிகள் உண்டு.. உரைநடை இயல்பான ஒழுங்கில் அமையும்.

உறவினர் மகள்:    எனக்கு வருணனை உரைநடைப் பற்றி கூற முடியுமா?

சித்தப்பா:               கூறுகிறேன். வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள் ஆகியவற்றை வருணிப்பது.

உறவினர் மகள்:    உரைநடையில் ஓசை இன்பம் ஏற்படுமா?

சித்தப்பா:               எதுகை, மோனை சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக இரா.பி. சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம்.

உறவினர் மகள்:    மோனையும், இயைபும் வருவது போல் உரைநடை சொல்லுங்கள் சித்தப்பா!

சித்தப்பா:               சொல்கிறேன். இரா.பி.சேதுபிள்ளையின் “உமறுப்புலவர்” என்னும் கட்டுரையில்பாண்டிய நாட்டில் ருவமழை பெய்யாது ஒழிந்தது. பஞ்சம் வந்தது. பசி நோயும் மிகுந்தது.

உறவினர் மகள்:    கடைசியாக, முரண் நயம் பற்றி மட்டும் கூறுங்கள் சித்தப்பா!

சித்தப்பா:               முரண் என்பது முரண்பட்ட இரண்டு சொற்கள் அருகே அருகே அடுக்கி வருதல்.. உதாரணமாக : இரவு பகல் பாராமல் உழைக்கிறார்

உறவினர் மகள்:    மிக்க நன்றி சித்தப்பா. தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்து கொண்டேன்.

சித்தப்பா:               நன்று. வா மகளே காலை உணவு உண்ணலாம்

 

44ஆ

இடம் : பள்ளி, வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : தமிழாசிரியர்,சகுந்தலாதேவி, பவித்ரா, தாரணி,

சகுந்தலாதேவி :    பவித்ரா, தாரணி நமது தமிழ் ஆசிரியர் அன்றைய வகுப்பில்

மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூற வந்தார். அதற்குள் மணி      அடித்துவிட்டது. இன்று நாம் அவரிடம் முதலில் கேட்டிடுவோம்.

பவித்ரா     :             ஆம், வந்தவுடன் கேட்கலாம்.

மாணவர்கள் :         வணக்கம். ஐயா,

தமிழாசிரியர் :         வணக்கம் மாணவர்களே, எல்லோரும் உணவு உண்டீர்களா?

மாணவர்கள் :         உண்டோம் ஐயா.

சகுந்தலா தேவி :   ஐயா நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கூற வந்தீர்கள். அதற்குள் மணி அடித்துவிட்டது. இப்போது கூறுங்கள்.

பவித்ரா, தாரணி:     ஆமாம். ஐயா.

தமிழாசிரியர் :         ஆம். மூன்று உதாரணங்களுடன் கூறுகிறேன். கேளுங்கள்

மாணவர்கள் :        கூறுங்கள் ஐயா.

தமிழாசிர்யர் :          1. மாணவர்கள் கொக்கைப் போல இருக்க வேண்டும். காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமை அவசியம்.

சகுந்தலா தேவி :   ஐயா, இனிமேல் நாங்கள் அவசரப்படமாட்டோம்.

தமிழாசிரியர் :         அடுத்து, இரண்டாவது கோழியைப் போல குப்பையைக் கிளறினாலும்.  

தனக்கான உணவினை மட்டும் உட்கொள்வது போல சமூகத்தில் கெட்டது

இருந்தாலும், நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

பவித்ரா      :         ஆமாம் ஐயா, நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு எங்கள்

பண்பினை வளர்த்துக் கொள்வோம்.

தமிழாசிரியர் :         மூன்றாவதாக உப்பைப் போல உணவில் உப்பின் சுவையை நாக்கு உணர்வதை போல , ஒவ்வொருவரின் வெளித்தோற்றத்தைக் காணாது அவரின்  குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து பழக வேண்டும்.

மாணவர்கள் :         ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள் இவ்வாறே

நடந்து கொள்வோம். நன்றி ஐயா.

8

45அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :

        புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

புயல் வருணனை :

·         கொளுத்தும் வெயில்

·         மேகங்கள் கும்மிருட்டு

·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.

·         மலைத் தொடர் போன்ற அலைகள்

·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது

அடுக்குத் தொடர் :

·         நடுநடுங்கி

·         தாவித் தாவி

·         குதி குதித்தது

·         இருட்டிருட்டு

·         விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·         கடலில் சிலுசிலு, மரமரப்பு

·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்

முடிவுரை :

·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது

·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

·         இவ்வாறாக வருணனைகளோடு, அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

மிக்ஜாம் புயல்

வெள்ள பாதிப்பு

மக்களின் துயர்

அரசின் நடவடிக்கைகள்

மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு

முடிவுரை

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                           TELEGRAM                   FACE BOOK GROUP




WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

CLICK HERE TO GET PDF

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


 

 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post