9TH - TAMIL - ANNUAL EXAM -2023 - ANSWER KEY

     

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

ஆண்டு இறுதித் தேர்வு - 2023

விடைக்குறிப்பு

சேலம் – ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்

ஏப்ரல் - 2022-2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

. இ. சிற்றிலக்கியம்

1

2.

இ. வளம்

1

3.

ஈ. புலரி

1

4.

ஈ. தொகைச் சொற்கள்

1

5.

அ. சித்தாரா, நேவிக்

1

6.

ஆ. ஊரக திறனறித் தேர்வு

1

7.

ஈ.எதிர்மறை வினையெச்சம், உவமைத் தொக

1

8.

ஈ. கெடுதல்

1

9.

இ.அள்ளல் - சேறு

1

10.

இ. துணிவு

1

11.

ஆ. 3

1

12.

இ. இராவண காவியம்

1

13.

ஆ. புலவர் குழந்தை

1

14.

இ. உரிச்சொற்றொடர்

1

15.

இ. கொம்பு

1

பகுதி – 2/ பிரிவு - 1

16.

அ. கல்லணை யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?

ஆ. பெண்கள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் இருப்பது எது?

1

1

17.

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழ். அது என்னென்றும் எக்காலமும் நிலையாக இருக்கும்.

2

18.

காளைகளின் பாய்ச்சல் – கலித்தொகை

மாடு தழுவுதல் – கண்ணுடையம்மன் பள்ளு

ஏறுகோள் – சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை

2

19

·         இராணுவப் பணி

·         தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்..

2

20.

உழவர்

·       மற்ற தொழில் செய்பவரையும் தாங்கி நிற்பதால், அவரே உலகத்திற்கு அச்சாணி ஆவர

1

1

21

கட்டாய வினா:

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்

அறம்நாணத் தக்கது உடைத்து

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

இறைஞ்சி – இறைஞ்சு + இ

இறைஞ்சு – பகுதி ., இ – வினையெச்ச விகுதி

1

1

23

·      உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன.

·      ஒரு சொல் பல பொருளுக்கு உரியது.

·      பல சொல் ஒரு பொருளுக்கு உரியது

2

24

மஞ்சள் பூசினாள்

          மஞ்சள் என்னும் நிறம் கிழங்கிற்கு ஆகி வந்துள்ளது.

2

25.

அ. நானும் எனது நண்பனும் நகமும் சதையும் போல நட்பாக உள்ளோம்.

ஆ. வாழ்க்கை என்பது இன்பத் துன்பங்களைக் கொண்ட மேடு பள்ளமாகத்தான் இருக்கும்.

1

1

26.

கரை – கடற்கரை – நான் கடற்கரைக்கு சென்றேன்

கறை – அழுக்கு – எனது ஆடையில் கறை பிடித்துள்ளது.

2

27.

அ. பேரகராதி           2. உவமையணி

1

1

28.

1. மனிதநேயம்           2. புதுக்கவிதை

1

1

பகுதி – 3 / பிரிவு - 1

29

Ø  சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர்.

Ø  சென்னை மாகாண சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர்.

Ø  சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி.

Ø  சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்.

Ø  சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர்

Ø  .புதுக்கோட்டையில் 30.7.1886-இல் பிறந்த முத்துலட்சுமி, தமிழக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்.

Ø  பெண்ணுரிமைக்காக போராடியவர்களில் முதன்மையானவர். பெண்களுக்கு ஓட்டுரிமையைப் போராடிப்பெற்றவர்.

Ø   பன்னெடுங் காலமாக இருந்துவந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டம் இயற்ற வழிவகுத்தவர் என இவரின் சாதனைகள் ஏராளம்..

3

30

·         மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.

·         அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும்.

·         ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைபிடித்து நடத்தல் வேண்டும்..

3

31.

அ. விழியோட்டம்,புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன் படைக்கப்பட்டுள்ளன,

ஆ. தூண்களில்

இ. சிற்பக் கலை

1

1

1

பகுதி – 3 / பிரிவு - 2

32

v  நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.

v  நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை

3

33.

v  கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.

v  திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.

v  ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.

3

34.

அ) அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம் தம்

கைச்சிற்கால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தாரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு

( அல்லது )

ஆ) ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக.

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக.

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

எனைத்/தானும்

நிரை-நேர்-நேர்

புளிமாங்காய்

2

நல்/லவை

நேர் – நிரை

கூவிளம்

3

கேட்/க

நேர் – நேர்

தேமா

4

அனைத்/தானும்

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

5

ஆன்/ற

நேர் – நேர்

தேமா

6

பெரு/மை

நிரை – நேர்

புளிமா

7

தரும்

நிரை

மலர்

இக்குறளின் ஈற்றுச் சீர் “ மலர் “ என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

36.

இயல்பு புணர்ச்சி

விகாரப்புணர்ச்சி

நிலைமொழியும், வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக உணர்வது

நிலைமொழியும், வருமொழியும் மாற்றத்தோடு புணர்வது

எ.கா : தாய் + மொழி - தாய்மொழி

எ,கா: மரம் + வேர் = மரவேர்

3

37

அணி விளக்கம் : உவமையின் தன்மையைப் பொருள் மீது ஏற்றிக் கூறுவது உருவக அணி

எ,கா : “ இன்சொல் விளைமா ஈதலே வித்தாக

விளக்கம் : இன்சொல் நிலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

3

பகுதி – 4

38

  அ)

திரண்ட கருத்து:
ஆறே வயல்வெளியில் புகுந்தாய் ,கதிர்களை விளையச் செய்தாய்.

ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச்செய்தாய்.

கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகிறது. நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்தாய்,

நிலத்தில் ஒரு வானம் இருப்பதுபோல தோன்றச் செய்கிறாய்.

மையக்கருத்து:
ஆற்றினால் இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ளதாக பாடியுள்ளார் வாணிதாசன்.

எதுகை:
செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:
லிடை      அலுள்                   கலிடை       பெரிடை

மோனை:
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.

சான்று:
யலிடை – ளைந்து          யலுள் – ம்பல்       பெயரிடை – பெருங்குளம்

இயைபு
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும்.

சான்று:
விளைத்தாய் – விரித்தாய்

அணிநயம்:
செய்யுளின் அழகுக்குச் சேர்ப்பது அணியே ஆகும். அணி இல்லாத பாடல் அழகில்லா மங்கை போலும். பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்னும் அடியில் உவமை அணி அமைந்து இச்செய்யுளின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது.

5

38

ஆ.

ஊர் திருவிழா

இந்திர விழா

Ø  திருவிழா நடைபெறும் தெருக்களில் தோரணம் கட்டப்பட்டு இருக்கும்.

Ø  திருவிழா நடைபெறும் தெருக்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பாடிருக்கும்.

Ø  வாழைத் தோரணங்கள், பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.

Ø  விழா நடைபெறும் நிகழ்வுகள் அழைப்பதழ் வழியாக அச்சிடப்பட்டு ஊர் மக்களுக்கு தெரிவிப்பர்

Ø  ஊர் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு இருக்கும்.

Ø  அனைத்து வீடுகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

Ø  முத்துதாமம், தோரணங்கள், பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.

Ø  முரசறைந்து இந்திர விழா நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிப்பர்

5

39

அ.

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

ü  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

ü  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

ü  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன.

5

39

சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழநாடு சிறந்து விளங்கியது.

Ø  இடைப்பட்ட காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து.

Ø  சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என கருதினர்

Ø  அறிவுடைய மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன் பாடியுள்ளார்.

Ø  பெண்கள் உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ ஆண்களும் துணை செய்கிறார்கள்.

Ø  இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள்.

Ø  கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள், முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே

Ø  இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள்.

 

5

40

கோரணம்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-23 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர்  சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

       மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

5

40

ஆ.      12, தமிழ் வீதி,

மதுரை-2

                                                                                                    28,செப்டம்பர் 2021.

அன்புள்ள நண்பா !                              

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

                                                                                                                                            அன்பு நண்பன்,                                                                                                                                                அ.எழிலன்.

உறைமேல் முகவரி:

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் - 1

5

41

ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று

சொன்னது இந்த காட்சி

இது அர்த்தமுள்ள காட்சி

முயற்சிக்கான ஊக்கக் காட்சி

5

42

இரண்டு தோழிகள் வணிகவளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்.
அருணா : வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப்பின் உன்னைப் பார்க்கிறேன், மகிழ்ச்சி .
வான்மதி : எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்! உன்னைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்.?

அருணா : நான் என் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ..?
வான்மதி : நான் என் தந்தையுடன் வந்தேன் இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண (3D) திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்க சென்றிருக்கிறார்.
அருணா : என்ன படம்?
வான்மதி : காட்டுக்குள் வரவேற்பு
அருணா : ஓ… நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்க போகின்றேன்.

5

42

நீ பாராட்டு பெற்ற சூழல்கள்

ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

பகுதி – 5

 

43

ü  அ. திராவிட மொழிகளின் ஒப்பியக் ஆய்விற்குத் தமிழே ப்ருந்துணையாக இருக்கிறது.

ü  தமிழ் என்ற சொல்லிருந்து திராவிடா என்ற சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று  விளக்குகிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியன ஒரே இனம்.

ü  ஹோக்கன் ,மாக்க்சுமுல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய  மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றனர்.

ü  கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றார். சமஸ்கிருத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்றார்.

8

யாதும் ஊரே யாவரும் கேளீர் :

ஒரு நாட்டவர் பிற நாட்டவரோடு உறவு பாராட்ட விரும்பியுள்ளனர்.

கணியன் பூங்குன்றாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.

சமுதாயத்தின் குறிக்கோள் :

இலட்சியங்களைக் கடைபிடித்து வருவதால் சமுதாயம் முன்னேற்றம் அடைகிறது. “ பூட்கை இல்லோன் யாக்கை போல “ என புறநானூறும் கூறியுள்ளது.

வாழ்க்கை பண்படுதல்:

        பிறருக்காக பணி செய்யும் போது வாழ்க்கை புனிதமடைகிறது. “ என் கடன் பணி செய்து கிடப்பதே “ என்னும் குறிக்கோள் உடைய வாழ்க்கை, ஆளுமையை முழுமைப்படுத்துகிறது.

வள்ளுவருக்கு முந்தைய கொள்கை :

         மக்கள் அனைவரும் சமம். இதனை ஆல்பர்ட் சுவைட்சர்,” உயரிய கொள்கைகளை கொண்ட செய்யுட்களை, உலக இலக்கியம் எதிலும் காண்பது அரிது “ எனக் கூறியுள்ளார்.

பண்பாட்டில் பரந்த மனப்பான்மை :

          பிறருக்காக வாழ்வதே உயர்ந்த பண்பு. புலவர்கள் வடபுல இமயத்தையும், தென்புலமான தமிழ்நாட்டின் வளங்களையும் பாடியுள்ளனர்.

8

44.

அ.

முன்னுரை :

           கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

          கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.

அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

            அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர்.

ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

          இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

          வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

            இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

          தண்டாவளத்தில் சிறுது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

Ø  தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்

8

44

ஆ. நா..முத்துக்குமார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் செய்திகளைக் காண்போம்.

·         உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க வேண்டும்.

·         வாழ்க்கை முழுக்க நீ வெவ்வேறு வடித்தில் நடிக்க வேண்டும்.

·         கல்வியில் தேர்ச்சி கொள். இதேநேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்.

·         இறக்கும் வரை இங்கு வாழ சூத்திரத்தைக் கற்றுக் கொள்.

·         மாநகரத்தில் வாழும் நீ கொடிய பல தேள் பல வடிவத்தில் இருக்கும், உனக்கான காற்றை நீயே உருவாக்கிக் கொள்.

·         கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய்.

·         யாராவது கேட்டால் இல்ல எனினும் கடன் வாங்கியாவது உதவி செய்.

·         உலகில் மேலானது நட்பு மட்டுமே. நண்பர்களைச் சேர்த்துக் கொள்.

·         உன் வாழ்க்கை நேராகும்

8

45

அ.

திருக்குறள்

 

இனம்,மதம்,மொழி,நாடு என அனைத்தையும் கடந்து உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை நூலாகக் கருதப்படுவது வான்புகழ் வள்ளுவன் எழுதிய திருக்குறளாகும்.

     முப்பாலையும் கற்றுணர்ந்தால் வீடுபேறு தானே கிடைக்கும் என்பதால்தான் என்று எனக்குத்தோன்றுகிறது.நூல் வைப்பு முறை,பாக்கள் அமைப்பு,இலக்கணப் பிறழ்ச்சியின்மை என அனைத்துமே திருக்குறளில் மிகச்செம்மையாக உள்ளது.

    ”அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்”  என்று ஔவையார் திருக்குறளைப் புகழ்ந்துரைத்தது எவ்வளவு பொருத்தமானது எனத் திருக்குறளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

8

45

ஆ. ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

       சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின்

   ஏற்காடு படகு இல்லம்,

   சீமாட்டி இருக்கை,

   பகோடா உச்சி,

   பூங்கா,

    காவேரி சிகரம்,

   சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு.

8

 


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

CLICK HERE TO DOWNLOAD PDF THIS ANSWER KEY


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post