6TH - TAMIL - ANNUAL EXAM - ANSWER KEY

 
முழுஆண்டுத் தேர்வு வினாத்தாள்
மே - 2021-2022 - ஆறாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு

சேலம் - மாவட்டம்

நேரம் :  2.30 மணி                                                                              மதிப்பெண் : 60

I.           அனைத்து வினாக்களுக்கும் விடையளி

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. சிற்பக் கூடம்

1

2.

ஆ. மதுரை

1

3.

அ. தம்முயிர்

1

4.

இ. சுறுசுறுப்பு

1

5.

இ. மணிபல்லவத் தீவு

1

6.

ஆ. பாலை + எல்லாம்

1

7.

கருணை - இரக்கம்

1

8.

அச்சம் - பயம்

1

9.

பாதுகாக்க – பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களை அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்குரியது.

1

10.

மனித் நேயம் – உலகம் இன்னும் நிலையாக இயங்க காரணம் மனித நேயம்

1

11.

ம்பன் – ங்கை

முத – லைகள்

1

12.

பாரதியார்

1

13.

அருவி

1

14.

நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

1

II.கீழ்க்காணும் வினாக்களுக்கு ஆறு வினாக்களுக்கு மட்டும் விடை தருக.

15.

வள்ளுவர்,காளிதாசர்,கம்பர்

2

16.

 உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார்.இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.

2

17.

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

2

18.

கோ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.

 

19

இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

2

20.

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

2

21

தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்

2

22

ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒரு நாளும் அவரை விட்டு செல்லாது

2

23

அ. ஆறு – நீரோடை , எண், தணிதல்

    திங்கள் – கிழமை , நிலவு, மாதம்

1

1

24

அ. Mercy        கருணை

ஆ.  Literature – இலக்கியம்

 

2

III.          அடிபிறழாமல் எழுதுக

25.

புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்!

 அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள்பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!

4

IV – எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி

26.

இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்

2

27.

நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று.

2

28.

அ. இடப்பெயர்

ஆ. காலப்பெயர்

2

29

ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

2

30

அரம் – மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது.

அறம் – உதவி என்று வருபவர்களுக்கு அறம் செய்ய வேண்டும்

2

V.  கீழ்க்காணும் வினாக்களுக்கு எவையேனும் இரண்டனுக்கு விடையளிக்க

31

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

     வ.உ.சிதம்பரனார்

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

      வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?

     பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். 

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?

     அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்

5. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?

     வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் .

 

5

32.

v    எளிமை,சிக்கனம்

v  தேசப்பற்று

v  பொதுநல நோக்கு

v  உண்மை பேசுதல்

5

33.

அனுப்புநர்

         க. இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

        அரசினர் உயர்நிலைப்பள்ளி,

        கோரணம்பட்டி,

பெறுநர்

        மேலாளர்,

        தமிழ்விதைப் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

நாள் : 01-09 -2021     

இடம் : கோரணம்பட்டி                                                                                                           

ள்              

                                                                                                 உண்மையுள்ள,

                       க.இளவேந்தன்.                                                                                         (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

தமிழ்விதைப் பதிப்பகம்,

சென்னை-600 001

 

5

34.

1.      பொருட்பெயர்

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.

காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்

 

2.    இடப்பெயர்

ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்

காவியா பள்ளிக்குச் சென்றாள் - இடப்பெயர்

3.    காலப்பெயர்

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்

4.    சினைப்பெயர்

பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்

காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்

5.    பண்புப்பெயர்

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்

காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெயர்

6.    தொழிற்பெயர்

தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.

காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

 

5

VI – கீழ்க்காணும் வினாக்களுக்கு எவையேனும் இரண்டனுக்கு ஒரு பக்க அளவில் விடைத் தருக.

 

35

முன்னுரை :

மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். அதன் கதையைக் காண்போம்.

மாரி :                                     WWW.KALVIVITHAIGAL.COM

திரையரங்கு வாசலில் அவர் காலணி தைத்துக் கொண்டிருப்பவர். அன்றைக்கு பலத்த மழை. டீ குடிப்பதற்கு கூட காசு இல்லை.அன்று தான் அந்த அதிசயம் நடந்தது. 

சிறுமியின் காலணி :

தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள்.. காலணி கொடுத்துவிட்டு சென்ற சிறுமி சாயங்காலம் வரை வரவில்லை.

மாரியின் ஏமாற்றம் :

அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்துதனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளாஇல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளாஎன்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.

மாரியின் மனைவி :

மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார். 

காலணியின் விசித்திரம் :

மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது.

மீண்டும் வந்த சிறுமி :

ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.

சிறுமியின் செயல் :

அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.

 

5

36

முன்னுரை :
வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆண்ட செல்லமுத்து மன்னரின் ஒரே மகள். வேலுநாச்சியார் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளைக் கற்றார். சிலம்பம், குதிரையேற்றம், வாள்போர், வில்பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்துகொண்டார்

முத்துவடுகநாதர் மரணம் :
காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

ஆலோசனைக் கூட்டம் :
திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் வேலுநாச்சியார், அமைச்சர் தாண்டவராயன், தளபதிகளாகிய பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர். சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், எப்படியாவது சிவகங்கையை மீட்க வேண்டும் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஐதர்அலி அனுப்பிய ஐயாயிரம் படை வீரர்கள் வந்தனர். அடுத்தநாள் சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் எனத் திட்டமிட்டனர்.

காளையார் கோவிலைக் கைப்பற்றுதல் :
திட்டமிட்டபடி காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போரின் இறுதியில் ஆங்கிலேயரின் படையை தோற்கடித்து காளையார் கோவிலை வேலுநாச்சியார் கைப்பற்றினார்.

முடிவுரை:
வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர் அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது.

5  

37.

முன்னுரை

      மக்கள் அனைவரிடமும் அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம், மத, இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை

      இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,

       “முப்பது கோடி முகமுடை யாள்உயிர் 

மொய்ம்புற ஒன்றுடையாள்”  - என்று பாடினார்.

நாட்டுப் பாதுகாப்பில் தேசிய ஒருமைப்பாடு

    “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

    ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே”

என்பது பாரதி வாக்கு. சீனா படையெடுத்து வந்தபோதும், பாகிஸ்தான் படையெடுத்து வந்தபோதும் நாம் ஒன்றுபட்டு வெற்றிபெற்று பாரதியின் வாக்கையும் நம் தேசிய ஒருமைப்பாட்டையும் உலகிற்கு உணர்த்தி உள்ளோம்.

பாரதிதாசன் கூறும் உலக ஒருமைப்பாடு

     வீடும், நாடும், உலகமும்  நலம் பெற்றுவாழ ஒருமைப்பாட்டுணர்வு வேண்டும். இதனையே பாரதிதாசன்,

உலகம் உண்ண உண்பாய்

       உலகம் உடுத்த உடுப்பாய்”  

என்று கூறுகிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்” 

என்ற புறநானூற்று அடியும் உலக ஒருமைப்பாட்டையே வலியுறுத்துகிறது.

முடிவுரை 

   நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் 

  எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.

ஒருமைப்பாட்டை வளர்ப்போம்!

உலக அரங்கில் உயர்வோம்!

 

5

37

அறம் செய விரும்பு

முன்னுரை

         மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.

அறம் எனப்படுவது

மனிதனொருவன் தனக்கென வரையறுத்து கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனப்படுகிறது. அறம் என்பதற்குத் திருவள்ளுவர் “அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறார்.

நற்பண்பு

     மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ வேண்டும். பிறருடையப் பொருளுக்கு ஆசைப்படாமலும், தன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதுதான் அவனுடைய நற்பண்பு வெளிப்படுகிறது. தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவரிடம் நற்பண்பு சிறந்தோங்கும். அதன் மூலம் அறம் வெளிப்படும்.

முடிவுரை

 மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.

 

3

VII – அகர வரிசையில் எழுதுக

 

அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம், எளிமை,ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஒளவை

2

VIII – இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக

 

வடக்குண்டு

வடக்கில்லை

2

 

CLICK HERE TO GET PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post