8TH - TAMIL - NOTES OF LESSON - APRIL - WEEK - 3

நாள்                 :         18- 04 -2022     முதல்  23 - 04 - 2022         

மாதம்                         ஏப்ரல்      

வாரம்               :           ஏப்ரல்  மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  1.பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

                                    2. அறிவுசால் ஓளவையார்

 

கருபொருள்                            :

Ø  நாட்டுக்கு உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்.

Ø  நாடகத்தைப் படித்து கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.

உட்பொருள்                           :

Ø  எம்.ஜி.ஆரின் இளமை, மக்கள் பணி பற்றி அறிந்து கொள்ளுதல்,

Ø  உரைப்பத்தியை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  நாடகத்தில் உள்ள உணர்வுகளுக்கு ஏற்றாற் போல் வாசித்தல்

Ø  ஓளவையாரின் அறிவு புலத்தினை எண்ணி வியத்தல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  வரைபத்தாள்,கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  நாட்டுக்கு உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்.

Ø  நாடகத்தைப் படித்து கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.

ஆர்வமூட்டல்                          :

Ø  மாணவர்களுக்கு இலவச காலணி எவ்வாறு வந்தது என்ற நிகழ்வினைக் கூறி ஆர்வமூட்டல்

Ø  ஓளவையாரின் பாடல்களில் வரும் நீதிகளை கதை மூலம் கூறி ஆர்வமூட்டல்.

படித்தல்                                  :

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

நினைவு வரைபடம்                 :

                                                            பாரத ரத்னா எம்.ஜி.ஆர்



                                                            அறிவுசால் ஓளவையார்

                                                           

                                                           


தொகுத்து வழங்குதல்             :

பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

v  சனவரி திங்கள் 17ம் நாள் – 1917 இல் இலங்கை கண்டியில் பிறந்தவர்.

v  புரட்சித்தலைவர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

v  காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியவர்.

v  திரைத்துறையில் புரட்சிகரமான நடிப்பினை வெளிப்படுத்தியவர்.

v  பள்ளிக் குழந்தைகளுக்கு காலணிகள் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.

v  தம் செல்வத்தை மக்களுக்கு வாரி வழங்கியதால்  பொன்மனச் செம்மல் என அழைக்கப்பட்டார்

v  எம்.ஜி.ஆர் பல்வேறு சமூக நலத் திட்டங்களை உருவாக்கினார்

v  ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார்.

v  தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தார்

அறிவுசால் ஓளவையார்

v  அதியமானிடம் ஓளவையாரின் உரையாடல்

v  அதியமான ஓளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்

v  நெல்லிக்கனியின் சிறப்பை அமைச்சர் கூறல்

v  நெல்லிக்கனி மூலம் அதியமான்,ஓளவை இருவரின் பெருந்தன்மையை அறிதல்

v  தொண்டைமானிடம் இருந்து வந்த போர் செய்தியை அறிதல்.

v  போரினால் ஏற்படும் விளைவுகளை அதியமான் ஓளவையிடம் உரைத்தல்

v  ஓளவை தொண்டைமானிடம் செல்லுதல்

v  தொண்டைமானின் படைகலத்தினைப் பார்வையிட்டு அதியமானின் போர்கலத்தோடு ஒப்பிட்டு கூறி போரை தடுத்து நிறுத்துதல்.

வலுவூட்டல்                             :

Ø  காணொளி காட்சிகள் மூலம் பாடப்பொருளை வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  எம்.ஜி.ஆர் பிறந்த ஊர்_______________

Ø  எம்.ஜி.ஆர் பொன்மனச்செம்மல் என அழைக்கப்பட காரணம் யாது?

Ø  பள்ளிக்குழந்தைகளுக்கு காலணி வழங்க காரணமாக நிகழ்வினைக் கூறுக.

Ø  அதியமான் ஓளவைக்கு வழங்கிய கனி எது?

Ø  தொண்டைமானிம் படைக்கலம் எவ்வாறு இருந்தது?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

 பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ணச் சொற்களைப் படித்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

Ø   நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø   நாடகத்தின் மையக்கருத்தினை உணர்தல்

தொடர் பணி                          :

Ø  தமிழக முதலமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

Ø  அறிவுசால் ஓளவையார் நாடகத்தின் மையக் கருத்து குன்றாமல் ஒரு பக்க அளவில் எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post