6TH - NOTES OF LESSON - FEBRUARY - WEEK 3

 நாள்                 :           14-02-2022 முதல்  18-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :             ஆறாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. வேலு நாச்சியார்

                                                2. நால்வகைச் சொற்கள்

கருபொருள்                            :

Ø  விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்.

Ø  சொற்களின் வகை அறிந்து பயன்படுத்துதல்

உட்பொருள்                           :

Ø  வீர மங்கை வேலுநாச்சியாரின் வீரத்தினை அறிதல்.

Ø  விடுதலைப் போரில் பங்கு கொண்டு உயிர் நீத்த தியாகிகளின் உன்னதத்தைப் போற்றுதல்.

Ø  சொற்களின் தன்மை அறிதல்

Ø  சொற்களின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வேலுநாச்சியார் வலையொளி காணொலிகள்,

கற்றல் விளைவுகள்                 :

Ø  விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிதல்

Ø  அவர்களின் தியாக உணர்வுகளைப் போற்றுதல்

Ø  சொற்களின் தன்மைக் கொண்டு அவற்றின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  சுதந்திர போராட்ட கதைகளைக் கூறி ஆர்வ மூட்டல்

Ø  சில சொற்களை கரும்பலகையில் எழுதி அதன் வகைகளை கூறி ஆர்வ மூட்டல்.

படித்தல்                                  :

Ø  நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய சொற்களின் பொருளை அகராதிக் கொண்டு அறிதல்.

நினைவு வரைபடம்                 :

                                                            வேலு நாச்சியார்



                                                            நால்வகைச் சொற்கள்



தொகுத்து வழங்குதல்             :

 

வேலுநாச்சியார்

Ø  விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்களுள் ஒருவர் வேலுநாச்சியார்ப் பற்றி அறிதல்

Ø  பெயர் : வேலுநாச்சியார்

Ø  தந்தை பெயர் : இராமநாத புர மன்னர் – செல்லமுத்து

Ø  கணவர் : முத்து வடுக நாதர் ( சிவகங்கை மன்னர் )

Ø  வேலு நாச்சியார் படை தளபதிகள் : பெரிய மருது, சின்ன மருது

Ø  வேலுநாச்சியாருக்கு தமது படைகளை அனுப்பியவர் : ஐதர் அலி

Ø  வேலுநாச்சியாரின் அமைச்சர் : தாண்டவராயர்

Ø  வேலுநாச்சியார் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர் : குயிலி

Ø  நடுகல் : உடையாள்

Ø  வேலுநாச்சியாரின் காலம் 1730-1796

Ø   • வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780.

Ø  • ஜான்சி ரா ணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்

நால்வகைச் சொற்கள்

Ø  ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.

Ø  இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

Ø  ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்

Ø  வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

Ø  பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது

Ø  பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்

வலுவூட்டல்                             :

Ø  காந்தியின் எளிமை மற்றும் சமூக நீதி, அவரின் தமிழ்ப்பற்று பற்றி மீண்டும் கூறி வலுவூட்டல்

 

மதிப்பீடு                                 :

Ø  வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு____________

Ø  வேலு நாச்சியாருக்கு தமது படைகளை அனுப்பி உதவியவர் _____________

Ø  வேலுநாச்சியார் எந்த நாளில் கோட்டையின் கதவுகள் திறக்கடும் எனக் கூறினார்?

Ø  வினை என்னும் சொல்லுக்குச் __________என்பது பொருள்

Ø  பெயர்ச்சொல்லையும்,வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் _________

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

தொடர் பணி                          :

Ø  மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி விடுதலைப்போரில் ஈடுபட்ட தமிழகப் பெண்களை அறிந்து அவர்களின் பெயர்களை எழுதி வருக.

Ø  செய்தித்தாளில் செய்தி ஒன்றைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள நால்வகைச் சொற்களை எழுதுக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post