9TH - NOTES OF LESSON - JANUARY - WEEK -1

 www.thamizhvithai.com


நாள்                 :           03-01-2022 முதல்  08-01-2022          

மாதம்                           ஜனவரி            

வாரம்               :           ஜனவரி - முதல் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. இராவண காவியம்

                                              2. நாச்சியார் திருமொழி

கருபொருள்                            :

Ø  இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.

Ø  புதியன சிந்தித்து கவிதைப் படைத்தல்

Ø  பக்தி இலக்கியத்தின் அழகியல் திறனை பெறுதல்

 

உட்பொருள்                           :

Ø  ஐவகை நிலங்களில் காணப்படும் இயற்கை வருணனைகளை இலக்கியங்கள் வழி அறிதல்

Ø  இயற்கையைப் போற்றக் கூடிய கவிதைகளை படைத்தல்.

Ø  அழகியலுக்கும், பக்திக்கும் இடம் தருகின்ற ஆண்டாள் கவிதைகளை வாசித்தல்.

Ø  கனவினை அழகுற எடுத்தியம்பும் ஆண்டாள் பாடல்களில் உள்ள நயங்கள் அறிதல்

அறிமுகம்                               :

Ø  நீங்கள் சென்று வந்த இடங்கள் குறித்தும், அந்த இடங்களில் காணப்பட்ட இயற்கைக் காட்சிகள் குறித்தும் கேட்டல்.

Ø  கோயில்களுக்குச் சென்ற இடங்களை கேட்டல்..

Ø  உங்களின் எதிர்கால கனவு என்னவாக இருக்கும் என்பன போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்றல் விளைவுகள்                 :

Ø  இலக்கியங்கள் காட்டும் இயற்கை படைப்புகளை படித்து சுவைத்தல். தாமும் தம்மிள் தோன்றியவைகளை கவிதைகளாக எழுத முற்படுதல்.

Ø  பக்தி இலக்கியம் காட்டும் கற்பனை திறக் காட்சியை அழகுபட வர்ணிக்கும் பாங்கு அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

                              இராவண காவியம்

Ø  புலவர் குழந்தை – ஆசிரியர் குறிப்பு

o   யாப்பதிகாரம். தொடையதிகாரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்

o   இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராணவ காவியம்

Ø  இராவண காவியம் – நூற் குறிப்பு

o   காண்டம் – 5

o   தமிழகக் காண்டம் , இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம்

o   3100 பாடல்களைக் கொண்டது

Ø  குறிஞ்சி நில இயற்கை அழகு

Ø  முல்லை நில இயற்கை அழகு

Ø  பாலை நில இயற்கை அழகு

Ø  மருத நில இயற்கை அழகு

Ø  நெய்தல் நில இயற்கை அழகு

நாச்சியார் திருமொழி

Ø  ஆண்டாள் – ஆசிரியர் குறிப்பு

o   ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவர். இவர் மட்டுமே பெண் ஆழ்வார்.

o   சூடிக் கொடுத்த சுடர்க் கொடி என அழைக்கப்பட்டார்.

o   பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்

o   இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற ஒரு தொகுதிகள் நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ளது.

Ø  நாச்சியார் திருமொழி – நூற் குறிப்பு

o   143 பாடல்களைக் கொண்டது.

Ø  கண்ணன் பாதுகைகளை அணிந்துக் கொண்டு வருவதாக கனவு காண்கிறார் ஆண்டாள்

Ø  கண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கனவு காண்கிறார் - ஆண்டாள்

 

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  பாடப்பொருளை அறிமுகம் செய்தல்

Ø  பாடலை சீர் பிரித்து வாசித்து காட்டுதல்

Ø  பாடலின் பொருளைக் கூறல்

Ø  பாடலின் பொருளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புப்படுத்துதல்

Ø  நூல்களின் இயல்பினைக் கூறல்

Ø  அருஞ்சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் கூறல்

Ø  இயற்கை அழகை போற்றுதல்

Ø  இயற்கை வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறல்

Ø  கவிதை படைக்கும் இயல்பினைக் கூறல்.

Ø  மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  பக்தி இலக்கியத்தின் சிறப்புகளைக் கூறல்

Ø  பக்தி இலக்கியங்கள் வாழ்வியலோடு தொடர்பு உள்ளமையை பட்டிக் கூறல்

 

கருத்துரு வரைபடம்                :              இராவண காவியம்

                                                             

                                        

 

                                                            நாச்சியார் திருமொழி

மாணவர் செயல்பாடு               :             

Ø  பாடலை சீர் பிரித்து படித்தல்

Ø  பாடலின் பொருளை உணர்தல்

Ø  புதிய சொற்களை இனம் கண்டு பொருள் காணுதல்

Ø  பாடல் பொருளை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்

Ø  மனப்பாடப் பகுதியினை இனிய பாடுதல்

Ø  மனனம் செய்யும் திறன் பெறுதல்

 

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  பாடல் கருத்தை உணர்தல்.

Ø  பெண்கல்வி அவசியம் உணர்தல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்கள் படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  மனப்பாடப் பாடலை இரண்டிரண்டு அடிகளாக மனனம் செய்தல்

மதிப்பீடு                                 :

Ø  இராவண காவியம் எத்தனை காண்டங்களை உடையது-------------

Ø  செந்நாய்க் குட்டி பாலை நிலத்தில் எவ்வாறு இருந்தது?

Ø  இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?

Ø  ஆழ்வார்கள் எத்தனை பேர்?

Ø  ஆண்டாள் இயற்றிய பாடல்கள் எந்த தொகுப்பில் உள்ளது?

Ø  ஆண்டாள் யாரை திருமணம் செய்வதாக கனவு காண்கிறார்?

Ø  நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-------

நன்றி, வணக்கம்தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post